Tuesday, December 14, 2010

ஜிம் அனுபவம்.

கடந்த சில வாரங்களாக என் மனைவி ஜிம்மில் சேரப்போகிறேன் நல்ல ஜிம் எதுன்னு சொல்லுங்க அப்படின்னு ஒரே குடைச்சல். அடிக்கடி வீட்டுக்கு வர விளம்பரத்தில விலை குறைந்த மாதக்கட்டணம் உள்ளதுதான் நல்ல ஜிம்முன்னு சொல்லிடலாம்கிற முடிவோட இருந்தேன். என்னுடைய நல்ல நேரம் $ 1 க்கு ஜாயின் பண்ணலாமின்னு ஒருத்தன் விளம்பரம் கொடுத்திருந்தான்.

வீட்டுக்கு வந்திருந்த கூப்பனை எடுத்துக்கொண்டு குடும்ப சகிதம் அங்கே சென்றோம், சரியான அளவுகளில் இருந்த இளம்பெண் ஒருவர் வரவேற்றார், மற்றொருவர் கேள்விகளை வீசத்தொடங்கினார்.

முதலில் என்னிடம் என்ன காரணத்துக்காக ஜிம் ஜாயின் பண்றீங்கன்னு கேட்டார்.
நான் எந்தக்காரணத்திற்கும் ஜிம்மில சேரும் யோசனையில்லை என்றேன், மனைவி இடையே குறுக்கிட்டு, நாந்தான் ஜிம்மிலே சேரப்போறேன் என்றார்.

என்ன காரணம்?

"குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆகியாச்சு, ஜிம்மிலே சேர்ந்து வெயிட் குறைக்கலாமின்னு யோசிக்கறேன்"

"இதுக்கு முன்னாடி எப்ப ஒல்லியா இருந்தீங்கன்னு கேட்டாங்க" எனக்கு பகீர்னு தூக்கி வாரிப்போட்டது, ஆனாலும் அடக்கி வாசித்தேன்.

"இரண்டு வருடம் முன்னர்"

"உங்க பெண்ணும் சேருராங்களா? அவங்களுக்கு கிட்ஸ் கிளப் இருக்கு"

"யெஸ் ஐ வாண்ட் டூ ஜாயின் தி கிட் கிளப் "- மகள்

"வெரி நைஸ்"

அப்படியே எங்களை ஜிம் டூர் அழைத்துச்சென்றார், முதலில் யோகா அறையைக்காட்டினார், எனக்கும் சிறிதாக ஆசை முளைத்தது,

"முதுகு வலிக்கு எதாவது பெர்சனல் டிரெய்னர் இருக்காங்காளா?"

"ஓ யெஸ்" இப்படி ஆரம்பித்து அருமை பெருமைகளை எடுத்துரைத்தார். ஒவ்வொரு மெசினாக, அறையாக காண்பித்தார், இறுதியாக மஸாஜ் அறை மற்றும் பாத் ரூமையும் சுற்றிக்காட்டிய பின் ஜிம்மில் சேரும் பிராசஸை விவரித்தார்.

"ஜிம் அக்செஸ் மட்டும் போதும், இந்தக்கூப்பன் இருக்கு"

"ஜிம் அக்செஸ் மட்டும் மாதம் $19.99 ஒன்டைம் ரெஜிஸ்ட்டிரேசன் $199 பிராஸஸிங் $49" என்றார்.கிட்ஸ் கிளப் $99.

"அப்ப இந்தக்கூப்பன்"

"அதுவா அது வருட மெம்பர்ஷிப் சேர்ந்தா ரெஜிஸ்ட்டரேசன் கிடையாது $399 மட்டும் கட்டினா போதும் பிராஸஸிங் $39 எக்ஸ்ட்ரா"

"உங்களோட தொழில் போட்டியாளர்கள் $14.99 க்கே தராங்களே"

"எங்ககிட்ட நிறைய எக்யூப்மெண்ட்ஸ் இருக்கு"

"எனக்கு டிரெட் மில்லும் ,சைக்கிளிங் மட்டும் போதும்"- மனைவி.

"சைக்கிள் இருக்கு, டிரெட் மில் வாங்கிடலாம் நான்"

நாங்க உங்க தொழில் போட்டியாளர்களை விசாரிச்சிட்டு இன்னொரு நாள் வரோம் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பும்போது கவனித்தோம், ஜிம்மிலே ஓடி அனைவரும் களைத்து இளைத்து விட்டிருந்தனர், கம்பேக் சூன் என்று குண்டாக இருந்த ஓனர் அலுவலக அறையிலிருந்து குரல் கொடுத்தார்.

குடுகுடுப்பைக்காரன் உலகத்தரத்தில் தமிழ்த்திரைப்படம்.

-----------------
?

என்னுடைய நீண்ட நாள் கனவு, அதை நனவாக்கமுடியுமான்னு சந்தேகம் என் ஆழ்மனதில் ஓரத்தில் இருந்துகொண்டே இருந்தது, அதன் காரணமாகவே என்னுடைய வலைப்பக்கத்திற்கு குடுகுடுப்பை என்று பெயர் வைத்து நடத்தினேன்.%&* அதன் பலன் வலைப்பதிவர்களில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று வெறிபிடித்து அலையும் நசரேயனின் நட்பு கிடைத்தது. எங்களுக்குள் ஒரு வலைற்றி ஒத்துப்போனது, பதிவர்கள்/வாசகர்கள் பலர் இருவரும் ஒருவரோ என எண்ணுமளவுக்கு எழுத்துப்பிழைகள் முதல் கருத்துப்பிழைகள் வரை ஒன்றாகவே பயணித்தோம்.

இப்படியாக ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது என்னையே ஹீரோவாக @$***&^ வைத்து என்னுடைய தயாரிப்பில் அவர் இயக்குவதாக ஒரு கதை சொன்னார், கதை சொன்னவிதம் பிடித்திருந்தது, ஆனாலும் பாட்டி வடை சுட்ட கதைய சுட்ட டோராக்கதைப்போல் எங்கேயோ கேட்ட மாதிரி உள்ளுணர்வு உருத்திக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் கடந்த வருடம் ஃபெட்னாவில் (*&&^%) பிரியாமணியை பார்த்தது முதல் தானும் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதாகவும், தானே அப்படத்தை தயாரிக்கவும் தயார் என்றும் கூறினார்.

ஒரு நாள் என்னுடைய குடுகுடுப்பைக்காரன் கதையைக் கூறினேன், அதற்கு பொருத்தமான ஹீரோவாக நீங்கள் இருப்பீர்கள் என்றும் சொன்ன போது சற்றே அதிர்ந்தாலும், குடுகுடுப்பை என்ற பெயரில் வலைப்பதிவு நடத்தும் நீங்களே ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்றும் கேட்டார், அந்தக்காலத்து மிலிந்த் சோமன் போல் இருக்கும் நான் குடுகுடுப்பைக்காரன் கேரக்டரில் அவ்வளவாக பொருந்தமாட்டேன் என்பதை *&^ உணர்த்தினேன். இப்படித்தான் படம் உருவானது.

?
கதை ஒன்றும் புதிதல்ல, அதோட ஒன்லைன் சொல்லிடறேன், கதையின் நாயகன் இரவெல்லாம் தூங்கமாட்டான்,பகல் முழுவதும் தூங்குவான். நேர்மாறாக கதையின் நாயகி இரவெல்லாம் தூங்குவாள், பகலெல்லாம் தூங்கமாட்டாள். இவர்கள் எப்படி சந்திப்பார்கள் காதல் செய்வார்கள் அப்படிங்கிறது அருமையா படம் பிடிச்சிருக்கோம். ??{*&^ ரொம்ப நல்லா வந்திருக்கு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல உலக சினிமாவிலேயே இந்தவகை காட்சிப்படுத்தல் நிச்சயமா புதிய சிந்தனைதான்.

காதல் கதைன்னு சொன்னப்புறம் வில்லன் இல்லாமல் சுவராஸ்யம் இருக்காதல்லவா, இந்தப்படத்தோட வில்லன் வழக்கமான வில்லன் கிடையாது ஒரு சுவராஸ்யமான கேரக்டர், இவர் இருபத்து நாலு மணி நேரமும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார், ஆனால் எப்படி ஹீரோ , ஹீரோயினுக்கும் இடைஞ்சல் தருவார் அப்படிங்கறது படத்தோட ஹைலைட்.

?

உலகத்தரத்தில் குடுகுடுப்பைக்காரனின் காதலை சொல்லனும்னு முடிவு செஞ்சப்பவே இசை உலகத்தரத்திலே !!@&%^*#) இருக்கனும்னு சொல்லிட்டேன், ஒரு சின்ன சாம்பிள் சொல்றேன் உடுக்கை ஒலியை உலகத்தரத்தில் கொண்டுவருவதற்காக, செவ்விந்திய டிரம்ஸ்,நைஜீரீயாவின் பாரம்பரிய இசை,தென்னமெரிக்காவில் ^}{{ உடுக்கை போன்ற வடிவத்தில் உள்ள இசைக்கருவிகளெல்லாம் கலந்து, கடைசியில் மங்கோலியர்கள் சண்டைக்கு கிளம்பும் முன்னர் அடிக்கும் தப்பட்டை இசையையும் கலந்தவுடன் , அச்சுப்பிசகாமல் குடுகுடுப்பைக்காரன் அடிக்கும் உடுக்கை ஒலி உலகத்தரத்தில் கிடைத்தது, லண்டன்ல வெச்சி ரெக்கார்ட் பண்ணிருக்கோம்.

?

கண்டிப்பாக இந்தப்படம் எந்த உலகப்படத்தின் சாயலிலும் இருக்காது, குடுகுடுப்பைக்காரனின் காதல் உலகத்தரத்தில் உருவாகும் தமிழ்ப்படம், தியேட்டர் கிடைத்தவுடன் உங்களின் பார்வைக்கு.

பிகு: பதிவு உலகத்தரத்தில் உள்ளது என்பதை உணர்த்தவே, ஆங்காங்கே குறியீடுகள்.

நன்றி பிச்சைப்பாத்திரம் சு.க.

Thursday, December 9, 2010

வேட்பாளர்கள் தேவை : கு.ஜ.மு.க

கு.ஜ.மு.க வரும் 2011 சட்டமன்றத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் சுருக்கம்:
1. அனைத்து வீடுகளுக்கும் இலவச லாப்டாப்(மேக்புக் புரோ).

2.அனைத்து வீடுகளுக்கு இலவச இண்டர்நெட். 99 வருடங்களுக்கு மட்டுமே இந்த சலுகை.

3. வீட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போன்

4. செல் போன் பில் 99 வருடங்களுக்கு இலவசம்(வேறு பெயரில் மாற்றமுடியாது, இறந்து போனால் சலுகை வேறொருவருக்கு மாற்றித்தரப்பட மாட்டாது)

5. இலவச உணவு பிட்சா,பர்கர் மாதிரியான மேற்கத்திய உணவுகளுடன், விரும்பினால் தென்னிந்திய உணவுகளும் மூன்று வேளையும் வீட்டிலேயே பறிமாறப்படும்.ஒருநாளைக்கு மூன்று வேளைக்கு மேல் உண்பவர்கள் முன்னரே பதிவு செய்யவேண்டும்.

இவ்வளவு வாக்குறுதிகள் தருவதால் கு.ஜ.மு.கவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாகிறது, எனவே வேட்பாளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

பிகு1: இலவசங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் சொந்த செலவிலேயே செய்யவேண்டும்.

பிகு2: கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஜக்கம்மா மீது செய்த ஆணை மீறப்படாது.

Thursday, December 2, 2010

இசைப்பிரியர்களிடம் ஒரு வேண்டுகோள்.

தங்களிடம் "ஆயர்பாடி மாளிகையில்" பாடலுக்கான இசைப்பகுதி மட்டும் இருந்தால் அதனுடைய டவுண்லோட் லிங்க் தரவும்.

நன்றி

குடுகுடுப்பை
kudukudppai@gmail.com

Wednesday, December 1, 2010

பழைய கார் வாங்கிய அனுபவம்.

டாலஸிற்கு வந்தவுடன் எனக்கு இரண்டாவது கார் தேவைப்பட்டது, ஆரம்பத்தில் டாலஸை விட்டு மீண்டும் சிகாகோ செல்லும் எண்ணத்திலேயே இருந்ததால் ஒரு பழைய கார் வாங்க நினைத்தேன். முதன் முதலாக கார் வாங்க சென்றது ஒரு ஒரியனிடம், அவரிடம் உள்ள பழைய கேமரி ஒன்று பார்த்தேன். நல்ல நிலையில் உள்ள கார் kbb விலையை விட கூடுதலாக கேட்டிருந்தார் (சுமார் $4100).காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது பிரேக் பேடில் சத்தம் வந்தது.

"என்னங்க பிரேக்ல சத்தம்"
"அது ஒன்னுமில்லேங்க பிரேக் பேடு மாத்தனும் $200 தான் ஆகும்"

காரை நிறுத்தி பின் புறம் உள்ள இருக்கைகளைப் பார்த்தேன், கடுமையான அழுக்குக் கறையுடன் இருந்தது.
" என்னங்க பின்னாடி சீட்டில கறை , கிளீன் பண்ணிக்கொடுப்பீங்களா?"

" நான் பண்ணிப்பாத்தேன், போகலை, இதுக்கு முன்னாடி இந்தக்காரை ஒரு தமிலியன் தான் வெச்சிருந்தார், அவரு சாம்பார கொட்டிட்டார் போல"

காரை சுற்றி காலால் நடந்தேன். டயர்களில் எந்தவிதமான பட்டன்களும் இல்லாமல் பழமைபேசியின் தலை போல இருந்தது.

"டயரெல்லாம் போயிடிச்சே "

"கவலைப்படாதீங்க சேப்டி டெஸ்ட் பாஸ் பண்ண ஸ்டிக்கர் இன்னும் பத்து மாதம் வரைக்கும் இருக்கு, அப்படியே நீங்க மாத்தனும்னு ஆசைப்பட்டீங்கன்னா டாலஸ்ல அந்த ரோட்டில பழைய டயர் $20 க்கு கிடைக்கும் , $80 க்குள்ள முடிச்சிரலாம்"

அடுத்து சுத்தி வந்து முன்பக்க பேசஞ்சர் கதவை திறந்தேன், முடியவில்லை.

"என்ன ஆச்சு"

"அந்த டோர் மட்டும்தான் ஒர்க் ஆகலை மத்த மூனு டோரும் ஒர்க் ஆகுது, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்"

"இதை எப்படி குட் கண்டிசன் அப்படின்னு போட்டீங்க, அதுவும் KBB மதிப்பை விட கூட கேக்கறீங்க"

"கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க"

ஓடறதுக்கு டயர், உள்ள போக உட்கார இடம் , பிடிக்க பிரேக் இப்படி எதுவுமே சரியில்லாத காருக்கு எஞ்சின் நல்லா இருந்தா என்ன இல்லாட்டி என்னன்னு ஓடி வந்துட்டேன்.இடையில் எனக்கு போன் செய்து இபிஸினஸ் பற்றி பேச ஆரம்பித்தார். அது பத்தி பேசினா சாம்பார தலையில கொட்டிடுவேன் என்று கட் பண்ணிட்டேன்.

தீவிர தேடுதலுக்குப்பின்னர் ஒரு தெலுங்குதாத்தாவிடம் $7100 ஒரு கேமரி வாங்கி அஞ்சு வருடம் ஓட்டியாச்சு, இப்போ இந்தக்கார் ஒரியனிடம் இருந்த அந்தக்கார் அளவுக்கு மோசமாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையாக வேறு பிரச்சினைகளோடு இருக்கிறது. இப்போது விற்பனைக்கு தயார் வாங்க ஆள் இருந்தால்.

"கார் இன்சின் டொயோட்டாங்க , அது பாட்டுக்கு 200K ஓடும்ங்க"

Wednesday, November 24, 2010

ஒபாமா அதிபராக உள்ள ஊரில் வாழும் முட்டாளின் கேள்வி?

நாஞ்சில் பிரதாப்™ 24 நவம்பர், 2010 7:11 pm
//தங்களின் தொண்டையில் மாட்டிய முள்ளாகிப்போனதை உணர்த்துகிறது.//

:))

சிலபேரு ஓபாமா ஊர்ல வேலைபார்க்கறதுனால தங்களையும் ஒபாமான்னே நினைச்சுட்டு இருக்காங்க அதான் பிரச்சனை... ஏன் அவங்களே இங்கவந்து இப்படி வாழ்ந்து காட்டட்டுமே...அதுக்கு மட்டும் கப்சிப்...இவங்கல்லாம் கலைஞர் மாதிரி ஊருக்கு உபதேசம் பண்ற கோஷ்டிகள்...
//
ஒபாமா அதிபராக உள்ள் அஊரில் வேலை பார்ப்பவர்களின் ஒருவராகிய நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நானும் திருமணம் செய்துதான் வாழ்கிறேன் எனக்கும் லிவிங் டுகெதரில் இருக்கும் பிரச்சினைகள் புரிகிறது, ஆனால் நான் சொல்வது என்னவென்றால் ஒருவன் லிவிங் டுகெதரில்(எந்த நாட்டிலும்) வாழ்ந்தால் அதில் தலையிடும் உரிமை எனக்கு இல்லை என்கிறேன். ஆனால் சிலர் "விபச்சாரம் விபச்சாரி" என்று கலாசாரத்தோடு பேசுகிறார்கள். இந்திய சுப்ரீம் கோர்ட் லிவிங் டுகெதர் தனிப்பட்டவர்களின் உரிமை/ தவறில்லை என்று கூறியிருப்பதாக அறிகிறேன், அந்த நீதிபதிகளும் திருமணம் ஆனவர்களாக இருக்கக்கூடும், லிவிங் டுகெதரில் நம்பிக்கை இல்லாதவர்களாவும் இருக்கக்கூடும், அதனை எப்படி அழைப்பார் நாஞ்சில் பிரதாப், மேலும் அவரிடம் இன்னொரு கேள்வி லிவின் டுகெதரில் இந்தியாவில் வாழும் யாரோ ஒருவரை எப்படி தடுப்பீர்கள்? அதற்கான செயல்முறை என்ன?

//கலைஞர் மாதிரி ஊருக்கு உபதேசம் //

லிவிங் டுகெதர் விசயத்தில் எனக்கு உபதேசம் செய்யும் உரிமை இல்லை என்பதே என் நிலை? உபதேசம் செய்வது யார்? சொல்லலாமே?

ஜோதிஜி என்ற பதிவர் கூறுகிறார்

செந்தில்...நீங்களும் விட்டு வைக்கல லிவிங் டு கெதரை !

பதிவுலகத்தில் மட்டும் முகவரி முகம் காட்டாமல் தங்களது நப்பாசைகளை கொட்டி தீர்க்க ஆட்கள் இருப்பதால்(?)//


எனக்குத் தெரிந்து லிவிங் டுகெதருக்கு ஆதரவாகவோ அல்லது அதை எதிர்க்க எமக்கு உரிமை இல்லை என்று கருத்து தெரிவித்தவர்கள் யாரும் யாரையும் விபச்சாரி/விபச்சாரம் செய்கிறவன் என்று கூறவில்லை, உலகத்தின் முகம் காட்டாமல் நப்பாசைகள் என்று கூறியிருக்கிறீர்கள். என்ன மாதிரி நப்பாசை என்று கூறலாமே.? தலையிட உரிமையில்லை என்பது நப்பாசையா?

லிவிங் டுகெதர் என்ற ஒரு ஒப்பந்ததில் வாழ்பவர்கள் உரிமையில் தலையிட எனக்கு உரிமையில்லை, அது எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதுதான் என் நிலை, தலையிட உரிமை இருக்கிறது என்பவர்களில் சிலர் விபச்சாரி/விபச்சாரம் என்று பிரச்சாரம் செய்வேன் என்று நாகரிகத்துடன் கூறி விட்டார்கள், மற்றவர்கள் எப்படி தலையிடுவீர்கள் என்று தெளிவாக விளக்கவும். ஜெயந்தி அமுதா கிருஷ்ணா போன்ற பதிவர்கள் மிகத்தெளிவாக லிவிங் டுகெதரில் வரும் ஆபத்தை விளக்கியிருந்தார்கள் அவர்களுக்கும் எனது நன்றி.

தனி மனித தாக்குதல் யாருடைய பெயரைக்குறிப்பிட்டும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவே இது பற்றிய என்னுடைய கடைசிப்பதிவு.


தொடுப்புகள்.

http://krpsenthil.blogspot.com/2010/11/blog-post_2071.html
http://sunmarkam.blogspot.com/2010/11/blog-post_24.html

Tuesday, November 23, 2010

மக்களாட்சி, முதலாளித்துவம், ஊழல்

மக்களாட்சி, ஊழல் முதலாளித்துவம் எல்லாம் பிரிக்க முடியாத புளிக்குழம்பு மாதிரி ஆகிவிட்ட நிலையில், ஊழலை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, இந்த வருடத்திற்கான ஊழல் இவ்வளாக இருக்கும் என்று கண்காணிப்புக்குழு வைத்து அதற்குத் தகுந்தாற்போல் ஊழல் பணத்தில் தேர்தல் நடத்தி, ஒரு ஓட்டுக்குக்கான குறைந்த தொகை இவ்வளவு, அதிகமாக வேட்பாளரின் வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானலும் கொடுக்கலாம் என்று அரசே நிர்ணயம் செய்தால், ஊழல் பணத்தை வெளிநாட்டில் பதுக்குவதை தடுக்கலாம்.

ஊழல் பணமும் மக்களுக்கே அளிப்பதன் மூலம் இது மக்களாட்சி என்றும் மார்தட்டிக்கொள்ளலாம். ஊழல் பணம் மக்களிமே வந்து சேர்வதால் அவர்களில் சிலர் முதலாளி ஆகலாம், தொழில் தொடங்கலாம், அவர்களில் திறமையானவர்கள் மக்களாட்சியை ஊழல் மூலம் நிர்ணயிக்கலாம், சிலர் வேட்பளாரகலாம் இப்படியான ஒரு சுழற்சித்தததுவமே நாட்டின் இன்றைய தேவை என்று கூறி என் சீரிய சிந்தனையை உங்கள் முன் வைக்கிறேன்.

பஞ்சரான பஸ்கள்.

லிவிங் -டுகெதர் இருவரின் உரிமை அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்பவர்கள் பொத்திக்கொண்டு இருக்கலாம். அது கலாச்சார சீரழிவு தடுத்தே ஆகவேண்டும் என்பவர்கள் எப்படி தடுப்பார்கள். சும்மா டவுட்டுதான்.

கலாச்சாரம்கிறது மென்பொருள் மாதிரி(software) வெர்சன் 1.0 .2.0 அப்படின்னு வந்துகிட்டே இருக்கும். திடீர்னு ஹாட்டுவேர் இந்த சாப்ட்வேரையெல்லாம் சப்போர்ட் பண்ணாது , அப்புறம் புது சாப்ட்வேர், டெஸ்டிங் வெர்சனிங்க் இப்படி தொடர்ந்து தன்னை மாற்றியபடியே வலுவூட்டிக்கொண்டிருக்கும். சில பேரு திடீர் அந்தக்காலத்து மெயின்பிரேம் அவ்ளோ பெரிசு கட்டாயம் ஏசி வேணும், இந்தக்காலத்த்து காட்ஜெட்லாம் வாய்க்கா வரப்புல வெச்சுக்கிட்டு கட்டுப்பாடு இல்லாம திரியுது சீக்கிரம் கெட்டுரும் அப்படின்னு விமர்சனம் பண்ணுவாங்க, அதையும் உள்வாங்கி அடுத்த வெர்சன் சாப்டுவேர எழுதித்தானே ஆகனும்.

பார்ப்பானீயம் ஒரு சாதியைப் பற்றி பேசுவதில்லை என்றால் மற்ற மொழிகளில் அதன் பெயர் என்ன? பதிவா போடலாமா?

முட்டைகள் கூமுட்டைகள் ஆவதைத் தடுக்க, பீரோவால் முட்டை உற்பத்தி தடை செய்யப்பட்டதன் மூலம் கூமுட்டைகள் ஒழிக்கப்பட்ட புரட்சி நடந்தது, இப்போது எழும் முட்டையின் வடிவம் என்ன என்ற வரலாற்றுக் கேள்விக்கு விரைவில் பீரோவால் முடிவு செய்யப்படும்.

பிகு: பீரோ செவ்வக வடிவத்தில் இருக்கும் என்று நினைத்தால் அதற்கு இந்த பஸ் பொறுப்பல்ல.

நான் கலாச்சாரத்தை விட நினைச்சாலும் கலாச்சாரம் என்னை விடமாட்டேங்குது.இதில சில பஸ் பொருந்தாத் திருமணம் மாதிரி இருக்கும், கலாச்சாரத்துக்கு உட்பட்டு அவைகள் இணைந்தே இருக்கின்றன.

Monday, November 22, 2010

Marrige,Living Together - TIME ல் வெளிவந்த ஆராய்ச்சி

ஆராய்ச்சி

பிகு: மேற்குலக மொழியான ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை.

Tuesday, November 16, 2010

லிவிங் டுகெதர்- Living Together.


திருமணம் ஆகாத இருவர் சேர்ந்து வாழ்வது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்புடையதல்ல(இதுவும் மாறலாம்), ஆனால் யாரோ இருவர் திருமணம் என்ற ஒப்பந்தம் செய்யாமல், அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ஒப்பந்தந்ததுடன் சேர்ந்து வாழ்ந்தால் அதில் தலையிடும் உரிமை எனக்கு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, லிவிங் டுகெதரில் எனக்கு நம்பிக்கையில்லை என்பது கருத்து,

திருமணத்தை அனுமதிக்கமாட்டேன், லிவிங் டுகெதரை அனுமதிக்கமாட்டேன் என்பது வன்முறை.

நன்கு புரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.

Friday, November 5, 2010

நனவில் நிற்காதவை..

பெய்யாமழையில் நனைந்தாடும் ஈச்ச மரத்தின்
உதிராத இலைகளில்
வறண்டும்...
காய்க்கிறது காய்..

பாலையில்
புழுதி மண்ணாட்டி
புலர் பொழுதில்
அடித்து சென்ற காற்று
வரைந்து விட்டுப் போன
மணலோவியங்களில்
காலப் புள்ளிகளாக
ஒட்டகத் தடங்கள்

மெச்சுவதாயின் எனை மெச்சு
மணல் காற்றுக்கு ஈடு கொடுத்து
அடுக்காக நிமிர்ந்து நிற்கும்
ஒற்றை கள்ளி..

பேரீத்தம் பழத்திடம்
நெருங்கியமர்ந்து
பேரம் பேசும்
இரட்டை தேனீக்கள்..

வெப்பம் சுமந்த மண்ணில்
பெய்யாது நகர்ந்து போன
பொய் மேகம்..

இன்றோ
இந்தப் பிறவியில்..
நான் உண்ட பேரீச்சை..

பேரீத்தம் கொட்டை தாண்டி இலை வருகிறது
பனிமழை கொட்டியதும்
கொட்டியது இலை...



Wednesday, November 3, 2010

கோழி அப்டேட்ஸ் - (அசைவம்).

சமீப காலங்களில் தொப்பையை குறைக்கிறேன் என்று ஓட் மீல்ஸ், ஆஸ்பரகஸ் வாரம் இருமுறை மீன் இப்படியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், ஆனாலும் குறையவில்லை காரணம் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் கொடும்பசியில் பத்து தோசை வரை சாப்பிட்டதுதான்.

அதனால் மீண்டும் வழக்கம்போல் சாப்பிடுவோம் என்று முடிவு செய்தேன், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் தீபாவளி டின்னருக்கு அழைத்திருந்தார்கள், வழக்கமாக செட்டிநாடு உணவகத்திலிருந்து உணவு வரும், இம்முறை வேறு இடத்திலிருந்து வந்தது சுத்தமாக சுவையற்ற சைவ உணவு, கடுப்புடன் அடுத்தநாள் கொஞ்சம் சிக்கனை அவனில் பேக் செய்து சாப்பிட்டு, அன்றைக்கு மதியம் இருந்த ஒரு பிறந்த நாள் விருந்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகை கோழி உணவுகளையும் உண்டாயிற்று. ஞாயிற்றுக்கிழமையாகிய அன்றே ஹச் மார்ட் என்ற கடைக்கு சென்று இரால், போர்ஜி என்னும் ஒரு வகை மீன் வாங்கி ஞாயிறு இரவும், திங்களும் ஓடியது, திங்கள் இரவுக்கு இரால் செய்யும் முன் பசிக்கும் என்பதால் ,பசிக்கு ஸ்வதேசியில் மட்டன் பிரியாணி வாங்கித் தனியாக தின்றேன், எதுக்கும் இருக்கட்டும் என்று பேக்கப்புக்காக வாங்கிய சிக்கனும் இன்றோடு முடிந்துவிட்டது.

உடம்பு பற்றிய அக்கறை மீண்டும் எழுகிறது எனவே நாளை முதல் சப்வேயில் foot long வீட் பிரட்டுடன் டர்க்கி பேகன் சாண்ட்விட் சாப்பிடலாம் என்றிருக்கிறேன். சனிக்கிழமை ஹச் மார்ட்டில் ஒரு பெரிய மீனை வாங்கி சுட்டுத்திங்கவேண்டும் என்றும் தொன்றுகிறது, இப்படிப்பட்ட நினைப்புகளோடு தொப்பையைக் குறைக்கமுடியாது என்றும் தெரிகிறது.

டயட்டு டயட்டுன்னு சொல்றாங்களே அதை எப்படி செயல்படுத்துறதுன்னு யாராவது விளக்கம் குடுங்க சாமியளா?

Monday, November 1, 2010

ரசனையால் ரசனை

பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
விழிகளால் சிந்திய
வித்திய விந்திய
பனிமலர் கண்ட
சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று
மகிழவன் சிலாகிக்க
அன்னத்தின் மேல் விழுந்த
குழம்பின் வண்ணம்
ரசிக்கும் வண்ணமடிப்பவன்.

Friday, October 29, 2010

இயற்கை விரும்பியாகிய நான்

ஒரு வசதியான இடத்தில் தனிமையின் இனிமையை இயற்கைத்தாய் அருளிய கொடையின் மூலமாக ரசிக்கும் எண்ணத்தோடு செயற்கையாக செய்யப்பட்ட தங்க வடிப்பானின் உதவியுடன் ஊண்றுகோல் இல்லாமல் இயற்கை அண்ணையின் விசித்திரமான மேடு பள்ளங்களில் செருப்பில்லாத கால்களோடு நான் நடத்துகொண்டு தவளையின் தன்னிகரில்லா ஒலியை என் காது மடல் வழியாக ரசித்துக்கொண்டிருக்கும் போது பின்னணி இசை போல் சீறிய பாம்பின் சீற்றம் எனக்குப் பயத்தைக்கொடுத்தாலும் தவளையை முழுங்கியபின் பாம்பின் கவனம் என் மீது இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டபின், என்னுள் உணவுச்சுழற்சியை பற்றிய எண்ணம் ஆக்கிரமித்தது, ஆக்கிரமிப்பு வடமொழியா, தமிழ்மொழியா என்று யோசித்துக்கொண்டே , தூண்டிலில் உணவுச்சுழற்சி விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட செய்கையாக மண்புழுவை கோர்த்தேன், பாம்பு வாயில் தவளை இருப்பதால் அது என் தூண்டிலில் மாட்டாது என்ற நம்பிக்கை என் ஆழ்மனதில் ஓடியது, தூண்டிலை வீசினேன் தக்கை மிதப்பதை பார்த்துக்கொண்டே இருப்பது மனதை ஒருநிலைப்படுத்தும் இது ஒருவகை தியானம் என்ற என் அப்பன் கூறியது நினைவுக்கு வந்த வேளையில், கொண்டு வந்த ஐஸ் பெட்டியில் இருந்த பீர் பாட்டில் ஞாபகம் வந்ததை தடுக்கமுடியவில்லை, பீர் பாட்டில் திறப்பதற்கு திறப்பான் கொண்டுவரவில்லை என்று தெரிந்ததும் என் கூரிய சிங்கப்பல்லால் மூடியை திறத்து தண்ணீரில் விழுந்துவிட்ட மூடி இயற்கையை குப்பையாக்கும் என் அறிவு சொல்லினாலும் என் உடனடித்தேவையாக, அரை பீரை யோசிக்கும் முன்னரே வயிற்றுக்குள் தள்ளியிருந்தேன், இந்நேரம் தவளையும் பாம்பின் கழுத்துப்பகுதியை தாண்டி உள்ளே சென்றதை பாம்பை உற்று நோக்கியதில் அறிய முடிந்தது.

முற்றுமாக முற்றிய மூங்கிலின் பிளாச்சுகளால் கைதேர்ந்த ஆசாரியால் செயற்கையாக செய்யப்பட்ட இயற்கை பாலத்தில் உட்கார்ந்தபடி நாணலால் செய்யப்பட்ட தக்கையை மீண்டும் பார்த்தன், அசைவற்று மிதந்தது எனக்கு சற்றே அயர்ச்சி தந்தது, அயர்ச்சியின் பலனாக சிங்கப்பல் மீண்டும் வேலை செய்ய மற்றோரு பீர் பாட்டில் காலியாகியிருந்தது, தவறி தண்ணீரில் விழுந்த பீர் பாட்டிலை சிறிய மீன்கள் சுற்றி வந்தது, அவற்றிக்கு குடிக்கும் வயது இன்னும் ஆகவில்லை, ஆனாலும் பீரை மோந்து பார்க்க வயது வரம்பு இல்லை என்று ஆறுதல் பட்ட்டுக்கொண்டேன். எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை என் தலையில் எச்சமிட மிச்சமிருந்த பீரை தலையில் ஊற்றி எச்சம் கழுவிய பின்னர் தோன்றியது எதிரில் தண்ணீர் நிறைய இருப்பது.

குடித்த பீருக்கு இப்போது உச்சா வந்தது, நீர்நிலையை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற சமூக அறிவு இருந்ததால் சற்று தூரம் சென்று வெட்ட வெளியில் உச்சா அடித்தேன், உச்சா அடித்ததன் விளைவில் போதை சுத்தமாக இறங்கியதால் மீண்டும் ஒருமுறை சிங்கப்பல்லில் வலி வந்தது, குடித்தபின் பிடித்த மீன் சாப்பிட ஆசைப்பட்டு மீண்டும் தக்கையைப் பார்த்தேன், தக்கை அங்கிமிங்கும் ஆடியது மாட்டியிருந்தது கயல்விழி கொண்ட கெண்டை மீன், மீனை தூண்டில் முள்ளில் இருந்து எடுக்கும்போது என்னையும் அறியாமல் பக்கத்து ஊர் கயல்விழிக்கு தூண்டில் போட்டிருந்தால் மாட்டியிருப்பாளோ என்றும் தோன்றியது, மனிதப்பிறவியாய் பிறந்ததால் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று மனதைத் தேத்திக்கொண்டு கிடைக்காத கயல்விழி மறந்து , கிடைத்த கயல்விழியை உண்ணும் மனநிலைக்கு மீண்டு வந்தேன்.மீனை சுத்தம் செய்ய கத்தி தேடினேன், மறந்து விட்டிருந்தது தெரிந்தது, ஆதிமனிதன் போல் தீயிட்டு திண்ணலாம் என்ற எண்ணத்தில், சுற்றிக்கிடந்த சுள்ளி பல பொருக்கி, தங்கவடிப்பான் பற்ற வைக்கும் அதே லைட்டர் மூலம் பற்றவைத்து தீமூட்டி மீனை மேலே போட்டு வாட்டினேன்.

சற்று தூரத்தில் திடீரென மரங்கள் பற்றி எரிந்தன, உடனடியாக உணர்ந்தேன் சுள்ளித்தீயில் பறந்த கங்கு ஒன்றுதான் காரணம், ஐஸ் பெட்டியில் தண்ணீர் எடுத்து அணைக்க முயன்றேன், தீ எல்லை தாண்டிய நிலையில் ஒன்றும் செய்யமுடியாது என்றும் உணர்ந்தேன், இயற்கை ஆர்வலனான எனக்கு இயல்பாக இப்போது தோன்றியது தப்பித்து விடு, முடிந்தவரை என் சாமான்களை சமர்த்தாக எடுத்துக்கொண்டு மனிதன் ஆகினேன். அன்று மாலை காடுகளை அழிப்பது தவறு என்று எனது உரையை நான் முடிக்கும்போது எழுந்த கைதட்டல் ஓசை என் செவியில் தேனாய் பாய்ந்தது.

Wednesday, October 27, 2010

எப்போதோ கேட்ட உரையாடல்.

இடம் : அலுவலகத்தில் இருக்கும் ஓய்வு அறை/சாப்பிடும் அறையில் மதிய சாப்பாட்டு நேரம்.

"என்ன அயித்தான் புதுசா இன்னைக்கு சாப்பாடெல்லாம் எடுத்துட்டு வந்திருக்கிய, எப்பயும் சைக்கிள் எடுத்துட்டு போயி வீட்ல இருக்கிற பழைய சோறுதானே சாப்பிடுவிய"

"இன்னைக்கு உங்கக்கா இட்டிலி பண்ணிருக்கா, அதனாலதான் எல்லாருமா சாப்பிடுங்கன்னு கட்டி கொடுத்திருக்கா, நான் பழைய சோறு திங்கறேன்னு பேசறே , உன் வீட்ல என்னத்த திங்கிற நீ "

"பழைய சோறு நம்ம அகராதிலயே கிடையாது,நான் காலைல டிபனுக்கு டிரை பிஷ்ஸ ஃபிரை பண்ணு ராகி மால்ட்தான் தினமும் "

"என்னமோ சொல்ற , சரி உன் மதிய சோத்து மூட்டை எங்கடா?"

"இன்னைக்கு எங்கக்கா இட்டிலி கட்டி கொடுக்கும்னு தெரிஞ்து என் பொண்டாட்டி சோத்து மூட்டைய கட்டலை போலருக்குத்தான்"

"சரி இந்தா நீ ரெண்ட முழுங்கு"

"என்னத்தான் இது கருப்புக்கலர்ல இட்டிலி, கருக்காய் குருணைல மாவு அரைச்சு இட்டிலி சுட்டியலா கஞ்சப்பிசினாறித்தனமா? "

"சோறு கொண்டு வர வக்கில்லை, பேச்சுக்கு ஒன்னும் கொறச்ச இல்லை உனக்கு"

"கருப்பு/சிகப்புல இட்டிலி சுட்டிருந்தா உங்க தலைவரு கலைஞரு எதவாது பண்ணிருப்பாருத்தான்"

"கலைஞர நோண்டலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே, கலைஞரோட குசுவில் கூட தமிழ் மணக்கும்டா"

"ஆமா இவருக்கு அதுல தமிழ் மணக்குதா இல்லையான்னு மோந்து பாக்கிறதுதான் தினம் வேலை"

"உங்கள மாதிரி உண்டி குலுக்கிகளுக்கு நாங்கள் தேவலாம்டா"

"நாங்க உண்டியோ குண்டியோ குலுக்குறோம், மோந்து பாக்கிற வேலையெல்லாம் நாங்க பாக்கிறதில்லை"

"தேர்தல் வரட்டும் அப்ப பாத்துக்குறோம் நீங்க யாரு குசுவ குடிக்கிறியன்னு"

அநத நேரத்தில் சக ஊழியர் உள்ளே வருகிறார்

"என்னய்யா என் டிபன் கேரியர் காலியா இருக்கு"

அயித்தானும், மச்சானும் கோரஸாக

"பேச்சு சுவராஸ்யத்துல உங்க சாப்பாட்ட சாப்பிட்டோம், இந்தாங்க அக்கா வீட்டு இட்டிலி இருக்கு சாப்பிடுங்க"

பிகு: இது அரசியல் பதிவல்ல, மாமன் மச்சான் உரையாடலில் அரசியலும் வருகிறது

Friday, October 22, 2010

ருசி

விடாதழைத்த
தொலைபேசி மணியை நிராகரித்தேன்..
சற்றுத் தாமதித்து
IM ல் செய்தி வந்தது
பிஸி என்று ஸ்டேட்டஸ்
வாசல் அடைத்தேன்
இன்பாக்ஸில் புதிய மெயில்
உட்புகுந்தது..
அசைத்துப் பார்த்தது
ஆனாலும் அலட்சியம் செய்தேன்
பின்பக்கன் கை நீட்டி
நெட்டி முறித்தேன்
சொப்பனத்தில் காணாக்கூடாத..
டேமேஜர்
நேரில் வந்து ஸ்டேட்டஸ்
கேட்டார்
ஜாக்கி Vs Anti ஜாக்கி..
உச்சகட்டம் அடைந்துள்ளது..
இன்னும் இரு வாரம் ஆகும்...
முடிய என்றேன்

Wednesday, October 20, 2010

குடிகாரன்

டைரக்டர் ஹரி படத்தில் வரும் வன்முறை வாகனத்தில் ஆலப்புழா அணை நோக்கி உறவினர்களோடு பயணித்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய காலில் செருப்பு இல்லை, வழியில் வரும் பொள்ளாச்சி நகரில் செருப்பு வாங்கலாம் என்று வன்முறை வாகன ஓட்டி இருமுறை சொன்னார், ஆட்டோ ஓட்டுனராக இருந்து ஒருமுறை சொல்லியிருந்தால் பஞ்ச் டையலாக்கில் சேர்த்திருக்கலாம்.

நீண்ட நாள் கழித்த சந்திப்பாதலால், ஊர்க்கதை பேசியபடி செல்கையில் ஆசிரியர் திரவியம் பற்றிய பேச்சும் வந்தது.

திரவியம் ஒரு வித்தியாசமான மனிதர், பெரும் குடிகாரன், நக்கல் பேச்சுக்கு சொந்தக்காரன்,

"என்னடா பாஸ்கர் இந்த வருசம் பாஸ் பண்ணிட்டியாடா?"

"இல்ல சார் "

"உன் பேர்லயே பாஸ் இருக்கு , அப்புறம் என்னதுக்குடா வாத்தியார் பாஸ் போடனும் வேலையப்பாரு"

திருவிழாவிற்கு செல்லுமிடங்களில் குடித்து, சீட்டாடி, கோவிலில் மொட்டை போட்டவனின் தலையில் போதையில் குட்டி, மொட்டையனால் அம்மனமாக்கப்பட்டு வாடகை காரில் ஊர் வந்து சேர்வதும் திரவியத்துக்கு திரவியமானதல்ல.

இப்படியாக இருந்த அந்த திரவியத்துக்கு நான்கு பெண் பிள்ளைகளை பெற்க எப்படி நேரம் கிடைத்ததோ, திரவியத்தைப் போலவே அழகானவர்கள். ஆனால் திரவியம் திடீர் வாஸ்து ஜோசியனாகிப்போனானாம், ஆனாலும் குடிப்பதையும் குழந்தைகளை அடிப்பதையும் நிறுத்தாத அவன் மூச்சு குடியினாலேயே நின்று போனது

"அய் அப்பா செத்துப்போயிட்டான் என்ற நான்கு குழந்தைகளும் மகிழ்ச்சியோட கூத்தாடும் நிகழ்வாக அவன் சாவு ஆயிற்று"

இவற்றை பேசி முடிக்கவும் பொள்ளாச்சியில் செருப்புக்கடை வரவும் சரியாக இருந்தது.

செருப்புக்கடை முதலாளி உட்காட்ந்திருந்த சேரை விட்டு எழவே இல்லை,அவர் வணங்கும் கடவுள் பற்றிய வசனங்கள் பக்திமான என்று பறைசாற்றியது.

கடைத்தொழிலாளிகடம் அந்த செருப்பக்காட்டு என்று உட்கார்ந்தவண்ணமே கட்டளை இட்டுக்கொண்டிருந்தார், அவரது உடல்மொழி எனக்கு கடுப்பேற்றியது, எனக்கு செருப்பு உடனடித்தேவை, விலை கேட்டேன், ஒரே விலை என்றார்,

12 % வாட் வரி என்றார், பணம் கொடுத்தேன், ஒரு பேப்பரில் ரசீது என்று ஒன்றைக்கொடுத்தார்.

வாட் வரி கட்டிய செருப்புக்காலுடன் நடந்து கடையை விட்டு வெளியே வரும்போது, ஒரு குடிகாரன் கடைக்கு முன்னர்/வாசலில் ஓடும் சாக்கடையில் வாந்தி எடுக்க ஆரம்பித்தான்.

முதலாளி வேகமாக எழுந்து ஓடிவந்தார், குடிகார நாயே கடைக்கு முன்னாடி எதுக்குடா வாந்தி எடுக்கிற அந்தப்பக்கம் போடா?

"நான் டாஸ்மாக்ல வரி கட்டி குடிச்ச சாராயத்துல வந்த வாந்தியை அதே வரிப்பணத்துல கட்டுன சாக்கடை வாய்க்கால்ல வாந்தி எடுக்கறேன், இதக்கேக்க உனக்கு என்னா ரைட்சு இருக்கு"

Thursday, October 14, 2010

காதலி இருந்தால்.


காதலி இருந்தால்.

பி.கு : எனக்கு காதலியும் இல்லை , இந்த டிரக் என்னுடையதும் இல்லை

Friday, October 8, 2010

இவைகள்தான் அந்தக் குதிரைகள்


பின்னூட்டத்தில் இமேஜை ஏற்றமுடியுமா என்று தெரியவில்லை, அதனால் குதிரைகள் இங்கே

Monday, September 27, 2010

தீர்வு எனப்படுவது யாதெனில்....

பிரச்சினை இல்லாத பிரச்சினை எதுவும் உலகில் இருப்பதாக என் சிறு புத்திக்கு தெரியவில்லை, எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்று யாரோ எதற்காகவோ எப்போது உளறிக்கொட்டியது இப்போது ஏனோ எனக்கு ஞாபகம் வந்ததால் தூங்க முயன்ற நான் தூக்கம் வராமல் விழித்து என் தூக்கப்பிரச்சினைக்கு உடனடித்தீர்வாக விழித்திருந்து ஏதாவது செய் என்று எண்ணியதால் இந்த தீர்வு பற்றிய ஆராய்சியினை என்னுடைய பிளாக்கில் ஒரு இடைக்காலத்தீர்வாக பதிந்து வைக்கிறேன்.

எந்தவொரு தீர்வும் முடிவான/முழுமையான தீர்வல்ல என்பது என் மனதில் உதித்த முழுமையடையாத தீர்வு, தீர்வுகள் காலப்போக்கில் மாறிக்கொண்டேயிருக்கும், அந்தத்தீர்வுகள் எப்படி இருக்கும் என்று நாம் கணிக்கமுடியுமா என்பது என்னைவிட என் வாரிசுகள் புத்திசாலிகள் என்று ஒத்துக்கொள்ளும் நான் அநததீர்வுகளும் மேம்படுத்தப்பட்டதாகவே இருக்கும் எனக்கருதுகிறேன்.

மொத்தத்தில் இந்தப்பிரச்சினைக்கு இதுதான் முடிவான / முழுமையான தீர்வு எனும் கூறும் இசங்களோ, மதங்களோ முடிவான தீர்வுகளாக இருக்கமுடியாது என்பதுதான் மனதில் உதித்த முழுமையில்லாத இன்றைய தீர்வு.

Friday, September 24, 2010

பாநிதாவுக்கு ஒரு மொக்கை வேண்டுகோள்.

முதலில் இந்த வேண்டுகோளை தமிழ்ப் பத்திரிகைகளில் தான் எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இந்த எழவெடுத்த பத்திரிகைகாரங்க யாரும் என்னை ஏறெடுத்துக்கூட பாக்கமாட்றாங்க, அதுனால நவ்வி மொழில நான் முதன்முதலில் பாநிதாவைப்பற்றி எழுதி விமர்சனக்கட்டுரை பண்டோரா தேசத்தில வெளியானது. நவ்வி மொழி என்று நான் கருதி எழுதியதை இதுவரை யாருமே படிக்காததால், எனக்கே எனக்குன்னு இருக்குற கு.ஜ.மு.க விலேயே தமிழ்ப்படுத்தி எழுதவேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

விமர்சனத்துக்கு போகுமுன் ஒரு விசயத்தை உங்ககிட்ட பகிர்ந்துக்கனும், என்னை பண்டோரா தேசத்திற்கு கூட்டிட்டு போன பாண்டா ஒரு உலகத்தரமான இலக்கிய ரசிகன் என்று அறியமுடிந்தது, தமிழ் வாசகனை நினைக்கும்போது எனக்கும் வாந்தியும் வந்தது, சாராயம் கிடைக்காதுன்னு வந்த வாந்தியை அடக்கிக்கிட்டேன்.பண்டோரா தேசத்தில வாரிஸ்னு ஒரு நகரம், அங்கேதான் என்னைப்போன்ற இலக்கிய விமர்சகர்களை ரவுண்டு கட்டி உட்கார வைச்சி சரக்கு ஊத்திகுடுத்து லக்கியத்தை பத்தி உளறச்சொன்னாங்க, நகரம்னா அதுதான் நகரம், சாராயம்னா அதுதான் சாராயம், அதுலேயும் உப்பே இல்லாத அந்தக்கருவாட்டு ருசி சொல்லி மாளாது, அனுபவிச்சாதான் தெரியும்.

இப்ப விசயத்துக்கு வரேன், உங்களோட இந்தக்கால எழுத்துக்களை படிக்கும் போது நீங்களும் ரிட்டையரான தமிழ்பிளாக்கர் மாதிரி பொதுக்கழிப்பிடத்துக்கு போகாம வாய்க்கா வரப்புல கக்கா போகிற மாதிரி உங்கள் எழுத்துக்கள் இருக்குன்னு எனக்கு தோனுது, இதையெல்லாம் படிக்கும்போது, உங்களோட ஜீரா டிகிரில நீங்க எப்படியெல்லாம் டிகிரி காப்பில சீனி போட்டு சுவையாக்கனும்னு எழுதிருந்தத நெனச்சா, தஞ்சாவூர் காபி பேலஸ்ல கடன் வெச்சு குடிச்ச காப்பி எனக்கு இன்னைக்கு ஞாபகம் வருது, அதுவுமில்லாம மூனாவது அத்தியாயத்தில கருப்பட்டி காச்சி ஜீரா காப்பி போடுறது எப்படின்னு சொல்லிருந்தீங்க அன்னையிலேந்து கள்ளு குடிக்கறதையே விட்டுட்டேன் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட கூடாதுன்னு, அந்த அளவிற்கு பாதித்த உங்கள் எழுத்துக்கள் எங்கே?

பாம்புக் கவிதைகளில் வருமே ஒரு வரி, இப்ப நினைச்சாலும் மனசு படம் எடுக்குது

சட்டையவுக்கும் பாம்பே
நீ ஏன் ஜட்டி அவுப்பதில்லை
கலாச்சார காவல் பாம்புகளும் உண்டா?

இந்த மாதிரி வீர வரிகளை உங்களைத் தவிர வேறு யாரல் எழுதமுடியும், எங்கே தொலைந்தது உங்கள் எழுத்து?

முந்தாநாள் ஒரு கன்னட நண்பன் கூப்பிட்டான், பாரு கன்னடாவில உங்கள் எழுத்து வந்திருக்குன்னு சொன்னான், நானும் படிச்சிப்பாத்தேன், எடியூரப்பாவை திட்டி குமரசாமி திட்டுன எழுத்தும்,நீங்கள் எழுதிருந்ததும் ஒரே மாதிரி இருந்தது, அப்புறந்தான் தெரிஞ்சது எனக்குக் கன்னடம் படிக்கத்தெரியாதுங்கிற விசயமே. அப்புறம் எப்படி அது இன்னாரு எழுதுனாங்கன்னு தெரியும்னு கேக்கறீங்களா? அதான் பெரிசா படம் போட்டிருந்தாங்கள்ள.

எது எப்படியோ எழுத்துலக வாசிப்பே இல்லாமல் நானும் ஒரு விமர்சனம் எழுதிட்டேன். ஏன் எழுதினேன்னா ரொம்ப நாளா கடை தொறக்கலை சும்மா கூட்டம் சேக்கத்தான்னு சொல்லித்தெரியுற நிலைமையிலேயா தமிழ் வலை வாசகன் இருக்கிறான்.

Thursday, September 23, 2010

கல்லூரி சாலை - வாழ்க்கைன்னா ஒரு பிடிப்பு வேணும்டா


"டேய் குடுகுடுப்பை ஆயில் ஆப் ஸ்பெச்பிக் கிராவிட்டி இருந்தா குடுடா" -- பாரிஸ்

"என்னடா சேச்சி ஞாபகமா இருக்கியா"

"எதையுமே ரிலேட் பண்ணி படிக்கனும்டா? ஆனா நான் இப்பக் கேட்டது தேங்காய் எண்ணெய் , தலை காஞ்சு, தீஞ்சு போச்சு அதுக்குதான் ஆயில் ஆப் ஸ்பெசிபிக் கிராவிட்டி கேட்டேன்"

"என்கிட்ட அதெல்லாம் இல்ல,நல்ல சாயிபு பெட்டிக்குள்ள பூட்டி வெச்சிருப்பான், பெட்டியை உடைச்சு எடுப்போம், ஒரு தம்மு இருந்தா கொடு "

"தெர்மல் எஞ்சினியரிங் புத்தகத்திலே 417 வது பக்கம் ஒரு பிளெயின் இருக்கு எடுத்துக்கடா"

"யாரும் தொடாத புத்தகத்தில ,இப்படிதான் நீ சிகரெட் ஒளிச்சி வெக்கிறியா. வெவரம்டா"

"அடப்போடா நீ வேற படிப்பு வேணாம்டா, வாழ்க்கைன்னா ஒரு எய்ம், அப்பாரட்டஸ் ரெக்கொயர்டு வேணும்டா, இத்துப்போன இந்த லேபுக்கு இதெல்லாம் இருக்கு, என் வாழ்க்கைல ஒன்னுமில்லடா"

பேச்சு சத்தமும், பெட்டி உடைக்கும் சத்தமும் கேட்டு பக்கத்து ரூமில் பார்ட்டி வந்து எங்களுடன் கலந்து கொண்டார்.

"பார்ட்டி வாழ்க்கைல பிடிப்பு இல்லை நீ எதுனா ஒரு யோசனை சொல்லுடா"

"டேய் என்னடா சொல்ற நீ தான் ரைஸ் மில்லு, ரோட்டரியெல்லாம் வெச்சிருக்க, அதை வெச்சே பிஸினஸ் பண்ணலாமேடா"

"அடப்போடா கூலியெல்லாம் போக கடைசில உமிதாண்டா மிஞ்சுது, அதுவும் என் தலை மாதிரி காஞ்சு கெடக்கறதுனால,காத்துல பறந்து போயிறுது, அதுக்கு பேசாம உன்னை மாதிரி சொட்டைத்தலையனா இருந்திருக்கலாம்டா"

"டேய் அப்படி சொல்லாத ஐடியாஸ் ரூல்ஸ் தி வேல்டு, அப்படின்னு புத்தகம் எழுதியே பெரும் பணக்காரன் ஆனவனெல்லாம் அமெரிக்காவில இருக்கான், காத்துல பறக்கிற உமிய முதலீடு ஆக்குடா "

"எப்படி"

"டேய் மாட்டுத்தீவனம் தயாரிச்சி பையில அடைச்சி விக்கலாம்டா, ரொம்ப சிம்பிள் பார்முலா, உமியை, கொஞ்சம் கடலைப்புண்ணாக்கு , எள்ளுப்புண்ணாக்கோட சேத்து ரோட்டரில போட்டு அரைச்சு, முறுக்கு மாதிரி ஒரு அச்சுல வார்த்து பாக்கெட் போட்டியன்ன ஒரு காசு தவிடு இரண்டு ரூபாய்க்கு விக்குமுடா?"

"இன்சினியரிங் படிச்சிப்புட்டு மாட்டுத்தீவனம் விக்க சொல்ற? நீ மட்டும் சொட்டை மண்டைய வெச்சிக்கிட்டு அமெரிக்கா போயி துரைச்சிகளோட(நன்றி நசரேயன்) திரியலாம்னு இருக்குற."

"டேய் ஆண்டர்பிரினியரிங் பெரிய விஷயம்டா? நல்ல யோசனை பிடிச்சா செய்யுடா?

"அடப்போடா நான் தொட்டிக்குள்ள கைய விட்டு கலக்கியெல்லாம் , டெமோ காட்டமுடியாதுடா"

----

தெரிந்த முடிவுதான்

சில வருடங்கள் கழித்து, சொட்டைத்தலையில் ஒட்ட வைத்த முடியுடன் அமெரிக்காவிலிருந்து பார்ட்டி வந்தான், பாரிஸ் மாட்டுத்தீவனம் வரவேற்பரையில் சொட்டைத்தலையுடன் பாரிஸ் வரவேற்றான்.

"நான் சொன்ன யோசனை, எனக்கு ராயல்டி கொடுக்கனும் நீ"

"அடபோடா வெண்ணெய், தவிடும் , புண்ணாக்கும் மாடு திங்கிறத நீ சொல்லித்தான் ஒலகத்துக்கு தெரியுமாக்கும்"

"அதை முறுக்கு மாதிரி பொட்டலம் போட்டு விக்கிறதலாண்டா புத்திசாலித்தனம் இருக்கு"

"அது சரி அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு, அடுத்த வாட்டி வரும்போது எனக்கும் உன்னை மாதிரியே ஒரு விக் வாங்கிட்டு வாடா"

" நீ வேறடா வேலை இல்லை ரிஷெஷன் அப்படின்னு தொறத்திட்டாங்க, அதான் உன்னைப்பாத்து, தீவன யோசனைய பேசலாம்னு வந்தேன், ஆனா நீ முன்னாடியே பண்ணிட்டுருக்க, நானும் சேந்துக்கட்டுமா?"

"ஓ அப்படியா நீதான் காலேஜ் படிக்கும்போதே நல்லா டேமோ காட்டுவியே? தொட்டித்தண்ணில எப்படி தீவனத்தை கரைக்கிறதுன்னு டெமோ காட்டுற வேலை இருக்கு அத நீ பாத்துக்க , மாசம் ஏழாம் தேதி சம்பளத்தை தந்துடறேன்"

Monday, September 20, 2010

டவுசரும் நானும்.

பள்ளிக்கூட காலத்திற்குப் பிறகு டவுசர் போடுவதில்லை, இங்கு கோடைக்காலங்களில் எல்லோரும் டவுசருடன் வெளி வருவதையும், நான் மட்டும் வேகாத 110F வெயிலிலும் ஜீன்ஸ் பேண்டோடு வெளிவருவதையும் வெகு காலமாக கவனித்து,நீங்களும் டவுசர் வாங்கி அணிந்து பாருங்கள்,ஏன் இப்படி வெயில் காலத்தில் ஜீன்ஸ் போடுகிறீர்கள் என்று வீட்டில் நச்சரித்ததால் நானும், புதிதாக மூன்று டவுசர் வாங்கினேன்.

வாங்கின டவுசரில் இரண்டு என்னுடைய சற்று காலம் முன்னர் உள்ள இடுப்பு அளவு, இருந்தாலும், தொப்பையைக் குறைக்கும் தீவிர முயற்சியில் இருப்பதால் பழைய அளவையே வாங்கினேன். போட்டுப்பார்த்தால் தொப்பையை டவுசர் கடிக்கிறது,குறைக்கலாமின்னு நினைக்கிறப்போ பின்னூட்டரும் நசரேயனின் உளவாளியுமான வில்லன், பிரியாணி விருந்துக்கழைத்து மிச்ச பிரியாணியும் தலையில் கட்டி இப்போ அடுத்த சைஸூ டவுசரே தொப்பையை கடிக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளேன்.

இந்த டவுசரை அணிந்துகொண்டு நானும் இப்போது கடைக்கெல்லாம் செல்கிறேன், டவுசர் நல்லா இருக்கா என்று ஒருநாள் மகளிடம் கேட்டேன்.

"டவுசருன்னா என்னாப்பா" என்றாள்

"டிரவுசருக்கு தமிழ்ப்பெயர்தான் டவுசர் என்றேன்"

"டிரவுசருன்னா என்னாப்பா"

" டவுசருக்கு இங்கிலீசுல வெச்சப்பேருன்னு"

"அப்ப ஷாட்ஸ்னா என்னா"

"அமெரிக்கா, பிரிட்டீஷ் அப்படின்னு இங்கிலீஸ் வித்தியாசம் இருக்கு, அதெல்லாம் எனக்கு சரியாத்தெரியாது
டவுசர்-டிரவுசர்-ஷாட்ஸ் அவ்ளோதான்"

"சரிப்பா எனக்கும் டவுசர் பிடிச்சிருக்கு, நானும் இனிமே டவுசர் போட்டுகிட்டே விளையாடுறேன்"

ஒரு வழியா டவுசர் - டிரவுசரு பிரச்சினை முடிஞ்சிருச்சு, ஆனா இந்த டவுசரை ரெண்டு வருடம் போடுற அளவிற்கு யாராவது ஒரு டயட் சொல்லுங்க சாமியளா?

சமீபத்திலே நண்பரை சந்திந்தேன், ஓடியாடி கொஞ்சம் கலோரியை குறைச்ச நேரத்திலே மாங்காய் சாதம், தயிசாதம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தது, வாங்கிய என் புதிய டவுசர்களை உபயோகமில்லாமல் ஆக்க நினைக்கும் சதியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புதிதாக டவுசர் போடுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயமும் உள்ளது.

வகுக்காத வியூகம்...

பாம்புமுகம் கொண்ட
இரு விலாங்குமீனை
சாம்பலில் உருட்டி
வறுவறு பன்னிரண்டு
துண்டுகளாக்கும்
சாத்தியக்கூறுகளைக்
கணக்கிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்..

ஏரியை விடப் பலமடங்கு
அதிகப் பாம்புமீன் கொண்ட
குட்டைக்குள ஒரத்தில்
கோரப்பற் துவாரத்தில்
மண்புழு புகுத்தி
தூண்டில் வீசி
தூண்டிலின்
தக்கையை கூர்ந்து
நோக்குகிறேன் நான்..

மண்புழு
அனைத்தையும்
உபயோகித்து
எனக்கேயான
பாம்புமீனை பிடித்துக்கொள்(ல்)ள(ல)
என் தூண்டிலின் தக்கை
மேலும் கீழுமாய்
கட்டுக்குள் அடங்காது
தூண்டியையும் சேர்ந்திழுக்க
நானும் இழுக்க
இனங்காணமுடிநத சாரப்பாம்பு
நகர்ந்தபடியே தூண்டிலில்.

சேற்று மீன்
தூண்டிலில் மாட்டாதென
தெரியாமல் பிடித்த
பாம்பில் நடுக்கண்டமும்
எனக்கே என திருப்தியுடன்.


Wednesday, September 15, 2010

பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.

பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.

சமீபத்திய பதிவுலக குஸ்தியில் பாதிக்கப்பட்டுள்ள பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம் என்பது மட்டுமே ஆராயும் ஆராய்ச்சிக்கட்டுரை, அவர் ஆணாதிக்காவாதியா, இந்த சண்டையில் அவரின் பங்களிப்பு என்ன என்றெல்லாம் ஆராய்வது இந்தக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவர் இருக்கும் கூகுள் குழமத்தில் சேர்த்துவிடுவதாக காங்கிரஸ்காரர் சஞ்சய்காந்தி சில மாதங்களுக்கு முன்னர் சொன்னார், ஆனால் நான் காங்கிரஸில் கூட சேரத்தயார், இநதக்குழுமமெல்லாம் எனக்கு வேலைக்காகாது என்று மறுத்துவிட்டேன், விதி பதிவர் முகிலனை விடவில்லை. இதற்கு யார் காரணம்?

பதிவர் முகிலன் வில்லு விமர்சனத்தை தேடி அலைந்து, வில்லு ஒரு முன் பழமைத்துவகாவியம் என்ற என்னுடைய பதிவினை படித்ததன் மூலம் தமிழ்ப்பதிவுகளுக்கு அறிமுகமானதை,தமிழ்ப்பதிவுகளில் உலாவரும் மொக்கைத்தொடர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார், இதன் மூலம் சிலர், பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு குடுகுடுப்பையே காரணம் என்று குற்றம் சாற்ற எண்ணுகின்றனர் என்று நான் தகவல்கள் அறிகிறேன்.

இந்த பதிவின் மூலம் உங்களுக்கு அறியத்தருவது என்னவென்றால், நடிகர் விஜய் அந்தப்படத்தில் நடித்த பெரு நடிப்பே என்னை அந்த விமர்சனத்தை எழுதத்தூண்டியது, ஆகவே நடிகர் விஜய் அவர்களே பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு காரணம் என்று இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன், மேலும் அந்தப்படத்தை இயக்கிய பிரபுதேவா, அந்தப்படத்தில் நடித்த நயன்தாரா அவர்களுடைய பெற்றோர்கள், வில்லு என்று தேடியவுடன் என் பதிவில் இறக்கிய கூகுளாண்டவர் ஆகியவர்களும் பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு காரணமாக இருக்கலாம் என்ற ரீதியிலும் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.இப்படியெல்லாம் சிந்தித்தால்தான் இதன் பின்னனியில் உள்ள சூழ்ச்சியை நாம் அறியமுடியும்.

பொறுப்பு அறிவித்தல்: நடிகர் விஜய்,பிரபுதேவா,நயன்தாரா இவர்களின் பெற்றோர்கள், கூகுளாண்டவர் மற்றும் பதிவ்ர் முகிலனிமும் இவர்களின் பெயர்களை இந்த மொக்கைக்கு பயன்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, September 6, 2010

நண்டு குழம்பு, சாக்லேட், டைஜின்.

சில வருடங்களுக்கு முன்னர் சிகாகோ நகரத்தில் வசித்தபோது,மீன் வாங்கலாம்னு நண்பர்களோடு ஆசியா மார்க்கெட் போனேன்.மீன் வாங்க போன இடத்துல பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி எனக்கு பிடிச்ச நண்டு உயிரோட கெடச்சது.

அமெரிக்கா வந்து நண்டு சமைச்சு சாப்பிட்டதில்லை. உயிரோட நண்ட பாத்திட்டு அத வாங்கி சமைக்கலன்னா எனக்கு தூக்கமே வராது. ஒரு அஞ்சாறு நண்பர்கள் மொத்தமா இருந்தோம். பத்து நண்டு வாங்கியாச்சு.

இப்ப உயிரோட இருக்க நண்ட எப்படி உடைக்கிறது, எல்லாருக்கும் நண்டு கடிச்சுருமோன்னு பயம் , ஆனால் நண்டுக்கோ என்னைப்பாத்து பயம். நண்டு உடைக்கிறது ரொம்ப சுலபம். முதல்ல நண்ட ஒரு சிங்ல போட்டு சுடுதண்ணிய திறந்து விட்டுட்டா நண்டார் மாண்டார்.

நண்டு சுலபமா உடைச்சாச்சு, அதுல ஒரு நண்பர் எப்படி உடைக்கிறது, நண்டுக்கு எத்தனை கால், எப்படி கடிக்கும், ஓட்டை எப்படி சாப்பிடரதுன்னு எக்கச்சக்க கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாரு. இவரு பாய்ஸ் படத்தில வர செந்தில் மாதிரி பெரிய டேட்டாபேஸ்.எந்த இன்சுயூரன்ஸ் நல்லா இருக்கும், எந்த கடைல காய்கறி இன்னக்கி நல்லா இருக்கும், வாலி புரடுயூஸல(நம்ம நாடார் கடை மாதிரி ஒரு கடை) இன்னைய டீல் என்ன அப்படினு அவருக்கு தெரியும்.கிரீன் காடு இப்ப யாருக்கு என்னா ஸ்டேஜ்ல இருக்கு,இந்த வருடம் இன்னா புது ரூலு, அடுத்தவன் சம்பளம் எவ்ளோ இப்படி நெறயாயாயாயா. நல்ல உபயோகமான தகவல் களஞ்சியம், அதுல நண்டு எப்படி உடைக்கிறது அப்படிங்கிறதும் இப்போ ஏறிப்போச்சு.நண்டு உடைக்கிறது எப்படின்னு இப்போ அவரு சொல்லிருந்தா இன்னும் முழுமையா இருந்திருக்கும்.

நண்டு எப்படி சமைக்கிறது இது இப்போ கேள்வி? பல்லவர்களோடு ஒரு அனுபவத்தில வர நண்பன் சொன்னான் எங்க வீட்ல வருவல் பண்ணுவாங்கன்னு, நான் சொன்னேன் எங்க வீட்ல கறிக்குழம்பு மாதிரி பண்ணி நெறய புளி ஊத்தி குழம்பு வெப்பாங்க அது மாதிரி பண்ணி பாப்போம். சரி எதையோ பண்ணு அப்படின்னு சொல்லிட்டு அவன் பீரடிக்க போயிட்டான்.

ஒரு வழியா நண்டு கொழம்பு வெச்சாச்சு, நண்டு குழம்பு வாசம் தூக்குது,நம்ம மக்கள் இருக்கிற பீரெல்லாம் முடிச்சிட்டு சாப்பிட தயார், ஒவ்வொருத்தரும் குழம்பு வாசம் கும்முன்னு இருக்கு நண்டு உடைச்சி சாப்புட்டு இன்னக்கி ஒரு கும்மு கும்மிர வேண்டியதுதான்னு ஒரு வெறில இருந்தாங்க. எல்லாருமா சேந்து எல்லாத்தையும் எடுத்து டைனிங் டேபிள்ல வெச்சிட்ட்டோம்.

டேய் குழம்பு வாசம் ஆள தூக்குது அப்படியே இன்னோரு ரவுண்டு பீர உட்டுகிட்டே சாப்பிடுவோம் அப்படின்னு சில பேரு சொன்னாங்க.
பேசிட்டிருக்கும்போதே நம்ம டேட்டாபேஸ் நண்பர் எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிட ஆரம்பிக்கிறேன்னார், சரி நீங்க குடிக்க மாட்டீங்க் சாப்பிட ஆரம்பிங்க நாங்களும் சேந்துக்கறோம்.

டேட்டாபேஸ் நண்பர் சாப்பாட்ட போட்டு ஒரு 90% நண்டு குழம்ப எடுத்து ஊத்திட்டு போயிட்டாரு. மத்தவங்களுக்கு குழம்பு தொட்டு நக்கற அளவிலதான் இருக்கு, எல்லாரும் ஒருத்தன் மூஞ்சிய ஒருத்தன் பாக்கிறோம்.என்னடா எல்லாத்தையும் டேட்டாபேஸ்ல லோடு பண்ணிட்டாரு.

வேற வழி, இருக்கிறத வெச்சி எல்லாரும் சாப்பிட்டோம், ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு எல்லாரும் பாராட்டுனாங்க, எனக்கும் பயங்கர சந்தோசம். என் தெறமய ரொம்ப மதிச்சு 90% குழம்ப சாப்பிட்ட டேட்டாபேசும் நம்மள கொஞ்சம் அதிகமாவே பாராட்டுனாரு.

அடுத்த நாள் அலுவலகத்தில ஒரு பதினொரு மணி போல நாங்க எல்லாரும் பேசிட்டுருந்தோம், டேய் குடுகுடுப்பை நண்டு குழம்பு வயித்த கலக்கிருச்சு அப்படின்னாங்க. அந்த நேரம் பாத்து அங்க சாக்லேட் கலர் பேண்டும், டைஜின் கலரு சட்டையோட சும்மா ஜம்னு வந்த நம்ம டேட்டாபேஸ் நண்பர் ஆமாம் பாசு எனக்கும் வயிர கலக்கிருச்சுன்னாரு..

Tuesday, August 31, 2010

அமெரிக்காவின் கோமணம் கிழிந்தது.



இல்லாத நடிகையின் பொல்லாத நாயை. வாங்கி அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் அதனை நம்பி முதலீடு செய்தவர்களின் கோமணம் கிழிந்தது தெரிந்ததே.இப்போது அந்த கிழிந்த கோமணத்தை எப்படி சரி செய்வது, இன்னும் கிழியாமல் உள்ள கோமணத்தை எப்படி பாதுகாப்பது போன்றவற்றிகு அமைக்கப்பட்ட சிறப்பு கோமணக் காப்பு கமிட்டி கூடி வாய்ப்புகளை ஆலோசனை செய்கிறது.

அமெரிக்க அதிகாரி,ஐரோப்பிய அதிகாரி, மற்றும் பலர்.

அ.அதிகாரி: இன்றைய நிலைமையில அமெரிக்காவின் கிழிந்த கோமணம் சரி செய்யப்பட்டால் தான் உலகப்பொருளாதாரம் சரி செய்ய முடியும். இது பற்றிய உங்களுடைய யோசனைகளை கூறவும்.

ஐ,அதிகாரி: 700B பெயில் அவுட் மூலியமா நாறிப்போன கோமணத்தையெல்லாம் வாங்கிர ஐடியா என்ன ஆச்சு.

அ.அதிகாரி: நாறிப்போன கோமணம்னு சொல்றது கொஞ்சம் விரசமா இருக்கு, டாக்ஸிக் அசெட்னு அழகா ஆங்கிலத்தில சொல்லலாம். அந்த பிளான் இப்போதைக்கு பலன் தராது. வாங்கி என்ன பண்றதுன்னு தெரியல.

ஐ.அதிகாரி: டாலர் மதிப்பு கூடிடிச்சே அத வெச்சி இப்ப பெட்ரோல் விலை குறைச்சலா விக்கிறப்பவே வாங்கி டாக்ஸிக் அசெட்ட சுத்தப்படுத்தலேமே.

அ.அதிகாரி: சுத்தப்படுத்த பெட்ரோல் வாங்கினா டிமாண்ட் அதிகமாகி, விலை கூடிடும், அதோட இப்போதைக்கு ஒரு காலன்ல 20 கோமணம்தான் சுத்தம் செய்யமுடியும்,அதுனால ஆல்டர்னேட் பியூயலுக்கு ஊக்கம் கொடுக்கலாம்னு இருக்கோம்.

அ.அதிகாரி 2: முடியாது ஆலடர்னேட் பியூயலுக்கு சோளத்தை எடுத்துக்கிட்டா சாப்பாடு விலை கூடி போயிடும் ,அந்த பிளானும் வேணாம்.

அ.அதிகாரி : சரி பேசாம கிழிந்த கோமணத்த தைக்கிறதுக்கி இந்தியாவிலேந்து நூலும்,சைனாவிலேந்து ஊசியும் வாங்கறதுக்கு கோமண உரிமையாளர்களுக்கே இரண்டு டாலர் கொடுக்கலாம், அத மெயிண்டெய்ன் பண்ற மென்பொருள், கால் செண்டர் வேலைய இந்தியாவில சில கம்பெனிக்கு கொடுத்திட்டு காசு மிச்சம் பண்ணலாம்

அ.அதிகாரி 2: இல்ல டொமஸ்டிக்ல வேல உருவாக்கனும் அதுனால, இங்கயேதான் எல்லாம் பண்ணனும்.ஊசி,நூலெல்லாம் இங்கியே தயார் பண்ணலாம். அவுட்சோர்சிங்லாம் கட் பண்ணிரலாம்.

ஐ.அதிகாரி & அ.அதிகாரி: அப்படி பண்ணா அது கோமணத்தோட வெலய விட ஜாஸ்தியாகுமே என்ன பண்றது.

அ.அதிகாரி 2: ஆனா வேலைய உருவாக்கனுமே. என்ன பண்றது.? you know what ,i dont know

அ.அதிகாரி: அது மட்டும் இல்ல நூல ஏத்திட்டு போற கட்டை வண்டி கம்பெனியெல்லாம் கடைச்சாவி கழண்டு போச்சு,எங்களுக்கும் காசு கொடுங்கன்னு கேக்கிறாங்க. எனக்கென்னமோ இந்த முதலாளித்துவத்துல இதுக்கு விடை இருக்கிற மாதிரி தெரியல.

ஐ.அதிகாரி: பேசாம முதலாளித்துவம் இல்லாத மத்தவங்கெல்லாம் எப்படி கோமணம் கிழியாம பாதுகாக்கிறாங்கன்னு அவங்க ஐடியாவையும் கேப்போம்.

அ.அதிகாரி : நல்ல யோசனை, பேசமா டோண்டுவுக்கு இந்த வாரம் கேள்விய அனுப்பிச்சிரலாமா?

அ.அதிகாரி2 : வேண்டாம் அவருக்கு முதலாளித்துவத்தை தவிர வேற ஒண்ணும் தெரியாது.

அனைவரும் மாற்றுப்பொருளாதார நிபுணரை சந்திக்க அங்கே செல்கின்றனர்.

அ.அதிகாரி: நீங்க எப்படி கோமணம் கிழியாம பாத்துக்கறீங்க?

மா.நிபுணர்: இந்தா இப்படித்தான் என்று தன் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்டுகிறார்.அங்கே அம்மணமாக ஒரு பெரிய கூட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வருங்கால முதல்வரில் வந்த இடுகை மீண்டும் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடும் நிலையில் மீள்பதிவாக இங்கே.

Tuesday, August 10, 2010

என் வயிற்றுப்போக்குக்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே.

என் வயிற்றுப்போக்குக்கு காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே.

திடீரென வயிற்றுப்போக்கு, யோசித்தேன், கடையில் வாங்கிய இஸ்ரேல் தக்காளிதான் காரணமாக இருக்கமுடியும் என்பது வெள்ளிடை மலையாகத்தெரிந்தது, குடிக்க கூட தண்ணீர் இல்லாத இந்த பாலைவன நாடான இஸ்ரேலில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய அனுமதித்த சோலைவன நாடான அமெரிக்க ஏகாதிபத்தியமும் இதற்குக்காரணம் என்பது சொல்லியும் தெரியவேண்டுமா?

பிகு: குண்டு மிளகாய் நண்டு குழம்பிற்கும்/ வாலை மீன் குழம்பிற்கும் இஸ்ரேல் தக்காளி சேர்த்துக்கொண்டேன்.

பிகு2: பழையன கழிதலும் , புதியன புகுதலும் தமிழர் பண்பாடு ஆகையால், இன்று குவால் பறவைக்கறி சாப்பிட்டேன்.

Tuesday, August 3, 2010

குடுகுடுப்பையானது ஏன்?

தொடர்பதிவுகள் ஒரு நேரத்தில் , ஒரே மாதிரியான பதிவுகளாக வந்து சுவையற்றதாக ஆகிவிடுவதாக நினைத்ததால் , நான் இவைகளில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டேன்.முகிலன் என்னுடைய புகழ் பாடி பதிவெழுதியபின் யாரும் அழைக்காமல் இந்தப்பதிவை எழுத தோன்றியது.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
குடுகுடுப்பை

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இல்லை.
இல்லை, குடுகுடுப்பை என்று பெயர் வைக்க சொல்லி ஜக்கம்மா சொன்னதால் வைத்துக்கொண்டேன், இந்தப்பெயரில் தமிழ் ஓவியாவிற்கு இட ஒதுக்கீடு சம்பந்தமான ஒரு பதிவில் பின்னூட்டமிட்டேன், அதற்கு அவர் "குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் உள்ளது " என்று சொந்தமாக பதில் அளித்திருந்தார், மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த ஒரு கவிஞரை விமர்சிக்கும் எண்ணத்தில் நுழைந்தது,

"நான் எழுதியது கவிதை"
என்று நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை"
என்று எழுதி நானே கவுஜர் ஆகிப்போனேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எழுத ஆரம்பித்த ஆரம்ப காலத்தில், நிறைய பதிவுகளில் பின்னூட்டமிட்டேன், கோவி.கண்ணன் பெயரையெல்லாம் பயன்படுத்தி விளம்பரம் தேடினேன், தூக்கம் விழித்து பின்னூட்டங்களுக்கு நன்றி சொன்னேன், என் இயல்புக்கு மாறானதாக தோன்றியது, கொஞ்சம் கொஞ்சமாக விலகி இப்போது எப்போதாவது எழுதுகிறேன். பல பதிவுகளை ரீடரில் படிக்கிறேன் ஆனால் பின்னூட்டம் இட நேரம்/ சூழ்நிலை இல்லை, தற்போது விரும்பி படித்துக்கொண்டிருப்பது துளசிதளத்தின் தாய்லாந்து பயணக்கட்டுரைகள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
என் பதிவுகள் பெரும்பாலும் அனுபவம் சார்ந்தவையே, எல்லா அனுபவத்தையும் பதிவுக்காக யோசிக்கத் தோன்றியதால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டேன். பதிவர் சந்தனமுல்லை, தீஷு போன்று குழந்தையின் வளர்ச்சியை எழுத நினைத்தேன், ஆனால் அந்தத்திறமை என்னிடம் இல்லை என்பதை அறிந்துகொண்டேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவின் மூலம் எனக்கு மாதம் ஆயிரம் டாலர் கிடைக்கிறது, அதனை எனக்கான சாராயம் மற்றும் ஊறுகாய் செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
கு.ஜ.மு.க என்ற ஓர் உறுப்பினர் கட்சி மற்றும் வருங்கால முதல்வர். இரண்டுமே தமிழ்தான் ஆனா நிறைய எழுத்துப்பிழைகளோடு இருக்கும்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கருத்து திணித்தல் செய்யும் நிறைய பதிவுகளுக்கு எதிர்வினையாற்ற ஆசைப்படுவதுண்டு, ஆனால் ஆற்றுவதில்லை.இந்த மாதிரி 10 கேள்விகள் உருவாக்குபவர்களைப் பார்த்து ஏன் இப்படி? என்று ஒரு கேள்வி கேட்க ஆசை.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
அமெரிக்காவில் வசிக்கும் உலகநாதன் என்பவர்,என்னுடைய மொக்கைகள் பிடிக்கும் என்று பாராட்டினார். மற்றபடி பின்னூட்டங்கள் மூலம் பாராட்டியர்வகளே அதிகம்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
பொதுச்செயலாளர் ,குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக்கழகம்.

.

Wednesday, July 14, 2010

ராவணன் மணிரத்ணம்.

ராவணன் மட்டமான இதிகாச ரீமிக்ஸ் முதல் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராவணன் என்று கிழித்துப்போட்ட படம், கொடுத்த ஆறு டாலருக்கு நானும் ஒரு பதிவு போட்டு என் இருப்பை உறுதிப் படுத்திக்கொள்கிறேன்.

மணிரத்னம் மேட்டுக்குடிகளுக்கான இயக்குனர் , அவரின் படத்தின் பார்வையாளர்களுக்கு தான் சொல்ல வந்ததை அவருடைய பாணி சினிமாவில் சொல்லியிருக்கிறார்.

அனுமன் வேடத்தில் நடித்த கார்த்திக்/கோவிந்தாவை குரங்கு போலவே நடிக்க வைத்து எரிச்சல் ஆக்கிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு, மற்றும் பல இராமாயண கதா பாத்திரங்களை காட்ட வெளிப்படையான அடையாளத்தை வைத்து ராமனை சில வசனங்கள் செயல்கள் மூலம் விமர்சித்து இதிகாச ராவணன் நல்லவன் என மேட்டுக்குடி மக்களுக்கு புரியவைக்க முயன்றிருக்கிறார். இதற்கு ஏன் தூதுவனை குரங்கு போல் காட்டவேண்டும், காட்டாவிட்டாலும் புரியுமே என்பது பலரின் கேள்வி, ரோஜா சத்தியவான் சாவித்திரியின் ரீமேக், மவுனராகம் வேறு ஏதோ இதிகாச ரீமேக் என்று அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள், ஆனால் படம் பார்த்த மேட்டுக்குடிகளுக்கு இது தெரியாது, ஆனால் இங்கே இதிகாச ராவணனை நல்லவன் என்று காட்ட ராமாயண கதாபாத்திரங்களின் தோற்றங்கள் உதவும் என்று நினைத்திருக்கலாம்(ராவண் என்ற பெயர் ஒன்றே போதுமா என்று எனக்குத்தெரியவில்லை). குறிப்பாக வட இந்தியர்களுக்கு.

ராமனின் தந்திரங்களை காட்டிய அளவுக்கு, ராவணன் , ராமனின் மனைவியை கவர்வதற்கு இன்னும் அழுத்தமாக காரணம் காட்டியிருக்கலாம். மணிரத்தினம் பெரும்பாலும் கணவன் மனைவியை பிரிப்பதில்லை , அதே போல இந்தப்படத்திலும் ராமன் மனைவியை சந்தேகப்படுவதாக சதி செய்து ராவணனை கொல்வதாகக் காட்டியிருக்கிறார். பாலசந்தர் போல பயப்படாமல் சீதை ராமனை துறப்பதாக வைத்திருக்கலாம்.

தன்னுடைய பயத்தினால் / அல்லது வியாபார பயத்தினால் பதுங்கியதால்,ராவணன் சரியாக மேட்டுக்குடிகளிடம் சேரவில்லை, முயற்சியில் தோற்றிருந்தாலும் ராவணன் நல்லவன் என்று வட இந்தியர்களுக்கு காட்டந்துணிந்த மணிரத்ணம் பாராட்டுக்குறியவரே.

Tuesday, July 13, 2010

முதலாளித்துவத்தை விமர்சிப்போம்


கடந்த பதிவில் விவசாயத்தை அடிப்படையாக வைத்து என் மனதில் தோன்றியதை எழுதியதை , ஏழரை மென்மையாக விமர்சித்திருந்தார், முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ள எனக்கு உடனடியாக பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை, அதனால் தாமதமாகஇந்தப்பதிவு.விவசாயமோ , பெட்டிக்கடையோ முதலாளித்துவமல்ல , கார்ப்பரேட்திருடர்கள்தான் முதலாளித்துவம் என்றும் கூறியிருந்தார்.

ஒரு பெட்டிக்கடை முதலாளியோ, சொந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் பொதுவுடமைத் தத்துவத்தின் கீழ் கண்டிப்பாக வரமுடியாது என்பதால் இவர்களும் முதலாளித்துவத்தின் கீழ் வருபவர்களே என்பது என் புரிதல்.

முதலாளித்துவம் ஊழல்கள் மலிந்து கிடைக்கும் இடம், முதலாளித்துவம் கண்டிப்பாக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். கார்ப்பரேட்டுகளின் தவறுகள் தண்டிக்கப்படவேண்டும். விமர்சிக்கப்பட்டு விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படவேண்டும்.

உழைப்பே மூலதனம், உழைப்பை ஒருங்கினைப்பதும் , சரியான வழியான வழியில் செயல்படுத்துவதும் உழைப்புதான், இந்த உழைப்பை சுரண்டுவது எப்படி என்று மட்டுமே சிந்திக்கும் திருடர்களும் இங்கே அதிகம், இவர்கள் கடைசி வரையிலும் இருப்பார்கள், ஆனால் அதையும் மீறி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முதலாளித்துவத்தால் முடியும் என்றே கருதுகிறேன்.

பொது உடமை தத்துவம் மனிதனின் இயல்பான ஆசைகளுக்கு எதிரானது, ஆசையே துன்பத்திற்கு காரணம் , ஆனால் அதுதான் இன்பத்திற்கும் காரணம், அந்த ஆசை இல்லாவிட்டால் இந்த பிளாக்கர் இருந்திருக்காது, இண்டர்நெட், மின்சாரம் எதுவும் இருந்திருக்காது, இவைகளெல்லாம் பொது உடமையின் கீழ் சாத்தியமாக்க இயலாது. எல்லாம் பொது உடமை நீ இப்படி உழைக்கனும் , அப்படி உழைக்கனும் என்று பீரோவுக்குள் இருந்து கட்டுப்பாடுகள் போட்டால் ஒன்றும் நடக்காது. நல்ல உள்ளம் கொண்ட தோழர்கள் நல்ல முதலாளிகளாகி சமூகத்தின் பொருளாதார முன்னேற்றதிற்கு பாடுபடுதலே சரியான விடைதரும்.

முதலாளித்துவ விதிகள் விமர்சிக்கப்பட்டு மாறிக்கொண்டேதான் இருக்கும், ஏழை, பணக்காரன், ஆண்டி, போண்டியெல்லாம் மாறி மாறி வந்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

தனிப்பட்ட முறையில் விதிமுறைகள் இல்லாத மனித விலங்காக வாழத்தான் எனக்கும் ஆசை, ஆனால் அதற்கு முதலாளித்துவமும் தேவையில்லை, எல்லாவற்றையும் விமர்சித்து எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளாத பீரோவுக்குள் முடிவெடுக்கப்படும் இசங்களும் தேவையில்லை.

Friday, July 9, 2010

புரட்சிகர முதலாளி,தொழிலாளி

விவசாயி முருகேசன் வீட்டு வாசலில் கூலி கேட்டு தொழிலாளர்கள் கோஷமிட்டுக்கொண்டிருந்தனர்.

"கூலி எங்கள் பிறப்புரிமை, வேலை எங்கள் உரிமை"
"தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக", இன்குலாப் ஜிந்தாபாத்"

எல்லாம் சரிதான் தம்பிகளா, இந்த வருசம் ஆத்துல தண்ணியும் வரலை, மழையும் பேயலை, அதனாலே வேலையில்லை, செய்யாத வேலைக்கு நான் எப்படி தம்பி கூலி தரமுடியும்.

"கூலி இல்லாமல் நாங்க எப்படி சாப்பிடமுடியும்", முதலாளித்துவமே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே.

"நானே சாப்பாட்டுக்கு இல்லாம இருக்கேன் , நான் ஏம்பா உன் வயித்துல அடிக்கிறேன், நாம சேந்து யோசிச்சு எதவாது வயித்துப்பொழப்புக்கு பாப்போம்யா.அது சரி இந்த வெயில்ல கருப்புக்கொடைய பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க.வெயிலுக்கு கருப்புக்கலர் கொடை ஆகாதுப்பா"

"நெல்லு ஊர்ல மழை பேயுது அதுக்காக கொடை பிடிச்சிருக்கோம்", வர்க்கம் , புரட்சி, மாவு , மார்க்கு .................................

---------

"என்ன முருகேசன்னே என்ன பிரச்சினை"

ஒன்னுமில்லை முனியா, நம்ப ஊரு தம்பிகதான், இந்த வருசம் வெள்ளாமை இல்லாததினால், கூலி இல்லை அதுக்காக ஒரு அமைப்பா சேந்து கூலி கேக்கறாங்க"

"அது எப்படின்னே வேலையே இல்லாதப்ப முடியும்."

கேட்டா இல்லாத நெல்லுல அரிசி எடுத்து வருத்து மாவாக்கி மார்க் போட்டு எங்கேயோ கொட்டி எல்லாருக்கும் சோறு போடுற கம்பசூத்திரம் தெரியுதுங்கிறாங்க, நாமளும் அப்படியே பேசிட்டிருக்கமுடியாதே, லாபத்தை மட்டும் சிந்திக்கிற முதலாளிகளாலதான் இவங்கள மாதிரி இளைஞர்கள் உருவாகுறாங்க, உழைப்பை சரியாக பயன்படுத்தி எல்லோருமே உழைப்பாளி/முதலாளிங்கிற மாதிரி கொண்டுவர நாமதான் சிந்திக்கனும், தண்ணி இல்லைன்னு விதை நெல்லையும் அவிச்சி தின்னாச்சி, இனி அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன வழின்னு நாம யோசிக்கனும் , நாமளும் இல்லாத நெல்லு வருக்கிற சிந்தனையில இருந்தா யாருக்கும் சோறு கெடக்காது, ஏதாவது மாற்றுப்பயிர் செஞ்சு வேலை வாய்ப்புகள உருவாக்குவோம்.

அது சரிண்ணே,, நம்ம காசா பாய் வராரு..

"என்ன பாய் இந்தப்பக்கம்"

"நம்ம ஊரு பசங்க வந்தாங்க, கூலி கொடுக்கலன்னு , ஒரே கலகம் பண்ணாங்க, வீட்டில பொம்பல சனம் இருக்காங்க அப்புறம் பேசிக்கலாம்னேன், உடனே , ஆனாதீக்க பார்ப்பனீயம்னு கூச்சல் போடுறாங்க, நான் பாய் என்ன ஏன் பாப்பான்னு திட்டுறீங்கன்னு கேட்டேன், அதுக்குள்ள எங்க வீட்டம்மா பால் பனியாரம் கேக்கிறாங்கன்னு நினைச்சு அதுல ரெண்ட தட்டுல வெச்சு எடுத்துட்டு வந்துட்டாங்க, ஆனாலும் எதையும் கேக்காம இருந்த கலப்பையையும் உடைச்சிப்போட்டிட்டு கிளம்பிட்டாங்க"

"ஏன் வீட்டுக்கலப்பையையும் உடைச்சிட்டாங்க பாய், அதுக்காக கவலைப்பட முடியாது மாத்தி யோசிப்போம்."

ஆமா முருகேசு, விவசாயம் போச்சுன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன், அவங்க கலப்பையை உடைச்சோனதான் தோனுச்சு, பழைய இரும்பு யாவாரம் பண்ணலாமின்னு, எப்படியும் உங்க வீட்லயும் உடைஞ்ச கலப்பை இருக்கும்னு தெரியும், அத வாங்கிட்டுப் போகலாமின்னுதான் வந்தேன்.

Tuesday, June 22, 2010

ஆரோக்கியமான பாதாம் அல்வா

நீண்ட நாளாக பாதாம் அல்வா செய்யவேண்டும் என்ற ஆசை நேற்று நிறைவேறியது, ஏதோ ஒரு தளத்தில் படித்த பாதாம் அல்வா செய்முறை நான் செய்த முறையில் இங்கே

தேவையானவை

2 கப் பாதாம் பருப்பு
2 கப் நெய்
2 கப் சக்கரை
2 கப் பால்(காய்ச்சிய)
சிறிது குங்குமப்பூ

முதலில் பாதாம் பருப்பை சிறிது நேரம் வேக வைத்து , தோலினை நீக்கிடவேண்டும், தோல் நீக்கிய பாதாம் பருப்புடன் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கிட்டத்தட்ட இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவேண்டும்.

அடி பெருத்த கடாயில் அரை கப் நெய் ஊற்றி, நெய் சூடானவுடன் பாதாம் + பால் மாவையும் சேர்ந்து இளஞ்சூட்டில் அரை மணி நேரம் அடி பிடிக்காமல் கிண்டிக்கொண்டே வேகவைக்கவேண்டும்.பின்னர் மீதமுள்ள ஒன்னரை கப் நெய் மற்றும் இரண்டு கப் சக்கரை போட்டு அடிபிடிக்காமல் கிண்டவேண்டும், கொப்பளிக்க ஆரம்பித்தவுடன் இறக்கி நெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றவேண்டும். சிறிது குங்குமம்பூவை வைத்து மேக்கப் போடவேண்டும்.

முக்கியமாக நெய்யின் அளவு குறைக்கவே கூடாது அல்வா சரியாக வராது.


செய்து முடித்தபின் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்தால் விரும்பி உண்பர்.நமது உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் நாம் பாதாமில் இருந்து நீக்கப்பட்ட தோலை எடுத்து உண்டால் நார்ச்சத்து கிடைக்கும். வீட்டில் இருந்த நெய் சக்கரையை வைத்து பாதாம் அல்வா செய்து உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு பாதாமின் தோலை மட்டும் நாம் உண்பதால் நமது ஆரோக்கியமும் கூடும், கொழுப்பு சக்கரை பொருள்களும் வீட்டில் குறைந்து ஆரோக்கியம் பேண வழிகாட்டும்.

Saturday, June 12, 2010

குப்பைமேனியா இது?

வடிவேலுவும் கமலும் உரையாடல்:

முன் குறிப்பு: சும்மா ஒரு நகைசுவை உரையாடல், யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்

வடிவேலு: வாங்கய்யா உங்கள பேட்டி எடுக்க சொல்லி வலை உலகத்தில கேட்டுக்கிட்டாக வந்து கொடுங்கய்யா கொடுங்க?

கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.

வடிவேலு: கம்பராமாயணம் நான் படிச்சதில்லை, ஆனா நீங்க சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியே இருக்கு, உங்க படம் மருதநாயகம் என்ன ஆச்சு?

கமல்ஹாசன் : தேவர் மகனில் நான் உங்களை நடிக்க அழைக்கும்போது உங்களை இசக்கியாக பார்த்தேன், மருதநாயகம் கண்டிப்பாக வரும், உங்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன், உங்களின் எட்டு வருட கால்ஷீட் அதற்கு தேவைப்படலாம். டைரக்டர் பாலாவும் நானும் இணைந்து இயக்கும் எண்ணமும் உள்ளது.

வடிவேலு: (மனதிற்குள்) இவருக்கு நம்ம மேல இவ்ளோ கோபம்.ஒருவேளை விஜயகாந்த் மூலமா எதுவும் சதி நடக்குதோ.

ரொம்ப நன்றி கமலய்யா ஆனா எனக்கு ஹீரோ வேசமெல்லாம் வேண்டாம்யா ஹீரோயினியோட ஒரேயொரு குத்து டான்ஸ் மட்டும் வெச்சு ஒரு காமெடி ரோல் மட்டும் போதும்யா சம்பளம் கூட வேண்டாம், அப்புறம் மருதநாயகம் படத்துல விஜயகாந்த ஹீரோவா போட்டு ஒரு பத்து வருடம் வெளிநாட்டுல சூட்டிங் வெச்சுக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்யா?

கமல்ஹாசன் : உங்களின் திறமையை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று நான் எண்ணவில்லை வியாபாரிகளின் சினிமாவில் நீங்கள் ஒரு விட்டில்பூச்சி, இதை நான் சொல்வதால் நான் விட்டில்பூச்சி இல்லை என்று அர்த்தம் கொண்டால் அது என்னுடைய தவறல்ல.

வடிவேலு: (மனதிற்குள்)பார்த்திபன் என்னை வேற மாதிரி குழப்புனாரு,ஆனா இவரு தெளிவா பாராட்டியே குழப்புறாரே.

அய்யா உங்களுக்கும் கவுதமிக்கும் பிரச்சினைன்னு?

கமல்ஹாசன் : நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல, இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி தேவையில்லாதது இது உங்களுக்கும் பொருந்தும் மற்றவர்களுக்கு பொருந்தாது என்று பொருள் அல்ல.வெளிநடப்பு செய்கிறார்.

வடிவேலு: அய்யா நான் தேவர்மகன் படத்துல உள்ள சீன பத்திதானே சொன்னேன் அதுக்கு ஏன்யா கோபபடுறீங்க, நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா..............

Sunday, June 6, 2010

டீக்கடையில் வாழ்பவை

வெட்டிப் பேச்சுக்கேற்ப..
கூட்டம் சேரும்..
முச்சந்திகள்..

தேனீரில் சேர்க்கப்பட்ட..
செயற்கை வண்ணம்..
ருசிப்பதாக..
உறிஞ்சிக் கொண்டிருக்கும்..
அல்லக்கை கொழுந்துகள்..

பணம் தருவதாகச் சொல்லி..
வடை எண்பதை எடுத்து..
கடனை கடையில் வைத்து..
வெட்டிப்பேச்சை சிரமேற்கொண்டு..
தினம் பேசித் திரியும்..
இணையத்தின் சாதகத்தால்..

இட ஒதுக்கீடுகள் பல..
உடையவனை அடைய முடியாமல்..
தாத்தன் அப்பா அம்மா
நான் என் வாரிசு என் வாரிசின்...
பேரன் வரை அடைவது..
சமுதாயச் சிறப்பென்றும்..
தன் சாதியில் முதல் முறை பயனாளிக்கு
தகுதி போதாதென்றும் ..

இன்னும் பற்பல கணக்கு..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
உயர்சாதியை காட்டி..
உயர்கல்வியில் தனக்கு..
ஒரு சீட்டு எனும்..
உயரிய நோக்குடன்.. !


லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி அனுபவம், விரைவில் அட்லாண்டாவில்


வெள்ளி இரவு டாலஸ் மெட்ரோப்பிளக்ஸ் தமிழ்சங்கத்தால், தமிழ்நாடு பவுண்டேசன் என்ற தன்னார்வ கல்வி உதவி நிறுவனத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்டது. நானும் கலந்துகொண்டேன், லக்ஷ்மன் ஸ்ருதி குழுவில் பாடகர் கிரிஸ்,மகதி, டிஎம்ஸ் செல்வக்குமார் மற்றும் மாலதி கலந்து கொண்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நான் பார்த்த இசைநிகழ்ச்சி, மாலதி எப்போதும் போல் அருமை உற்சாகத்தோடு கிராமியப் பாடலான "சித்திர கோபுர கட்டவே " முதல் மன்மத ராசா வரை கலக்கினார்.

கிரிஸ் மற்றும் மகதியும் மிகவும் உற்சாகத்துடனும் ரசித்தும் பாடினர், செய்யும் தொழிலை ரசித்துச் செய்யும்போது வெற்றி தானாகவே கிட்டும் என்பதை உணர்த்தினார்கள்.கிரிஸ் மற்றும் மகதி நிறைய ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடலகள் பாடினர்.

டிம்எஸ் செல்வக்குமார் தந்தையைப்போல அப்படியே பாடுகிறார், இந்தந்திறமையை மட்டுமே வளர்த்துக்கொண்டதால் அவருக்கு சினிமாவில் புதிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டது, மயக்கமென்ன என்ற வசந்தமாளிகை பாடலைப்பாடியபோதும் , உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜியாருக்கா பாடிய பாடலிலும் டிஎம்ஸ் காட்டிய வித்தியாசத்தை மகனாலும் தர முடிந்தது.

முத்தாய்ப்பாக டிரம்மர் பெயர் தெரியவில்லை, தனியாக பதினைந்து நிமிடம் தனித்திறமை காண்பித்தார், உண்மையிலேயே பறையோசையின் நீட்சியாகவே அதனை அனுபவிக்கமுடிந்தது, திறமைசாலி டிரம்மருக்கு என் பாரட்டுக்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் தொய்வு ஏற்படும் நிலையில் கிரிஸ் பார்வையாளர்களோடு இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார். நடனமென்றால் என்னவென்றே தெரியாத நானும் கிரிஸ் பாடிய அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு கால் வலிக்க நடனமாடினேன்.

கிரிஸ் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார், அவரைப்பார்த்தவுடன் எனக்கும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை பீறிட்டு எழுந்தது.நாளைக்கு ஆட்டுக்கறி சாப்பிடும் ஆசையும் பீறிட்டு எழுந்துள்ளது என்ன மனிதனுக்கு நினைப்பதெல்லாம் நடப்பதில்லை, கண்டிப்பாக ஒரு ஆசையை நிறைவேற்றி திருப்தி அடைந்து கொள்வேன்.

டாலஸ் வாழ் தமிழர்களுக்கு இந்த நிகழ்ச்சி, நல்ல ஒரு பொழுது போக்காக அமைந்தது, வரும் ஆண்டிலும் மேலும் பல நிகழ்ச்சிகளில் நடத்தி மகிழ்வதுடன் மேலும் சிலரின் கல்விக்கு உதவுவோம் என்று நம்பி, வெறும் பார்வையாளனாக இல்லாமல் இனி தமிழ்ச்சங்க நடவடிக்ககளில் என்னுடைய பங்களிப்பையும் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்த வாரம் ஜூன் 12 ம் தேதி அட்லாண்டாவில் இதே இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது, வசூலாகும் தோகை தமிழ்நாடு பவுண்டேசனுக்கு செல்வதால் சிலரின் கல்விக்கு உதவுகிறது, அட்லாண்டா தமிழர்கள் யாரேனும் என் பதிவை படிக்க நேரிட்டால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

Thursday, June 3, 2010

டோண்டு என்றொரு மண்புழு.

எங்கெல்லாம் தன் சாதி சார்ந்தவர் தாக்கப்படுகிறரோ அங்கு உடனே டோண்டு தன்னுடைய சொம்பை எடுத்துக்கொண்டு செல்வது பதிவுலகம் அறிந்ததே. அதற்கு அவர் சொல்லும் காரணம் அனைவரும் தன் சாதி என்று வரும்போது தூக்கிப்பிடிக்கும்போது நான் ஏன் பார்ப்பனரை தூக்கிப்பிடிக்ககூடாது என்று அடம் பிடிப்பார், அவருடைய சமீபத்திய பதிவில் சாதியினால் சமூக நன்மை ஏற்பட்டது என்றும் வேறு கூறுகிறார், பீ அள்ளும் சாதியை உருவாக்கியது சமூக நன்மையா ? அவலமா? என்று சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் டோண்டு அவர்கள் விளக்கலாம். எது எப்படியோ குறைந்த பட்சம் பீ அள்ளும் சாதியை உருவாக்கியது சமூக அவலம் என்பதை அனைவரும் உணர்ந்து,அனைத்து ஆதிக்க சாதியினர் மனதிலும் ஆணி போல் அடிக்கப்பட்டிருக்கிற சாதி என்ற ஆணி இன்னும் நூறாண்டுகளில் துரு பிடித்து மக்கிப்போகும் அல்லது சாதாரண குழு அடையாளமாகப்போகும்.

இதற்கிடையில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க என்றே சில கும்பல் இருக்கிறது, அவைகளின் தந்திரம் எல்லாவற்றையும் பார்ப்பனருடன் முடிச்சு போடுவது, பார்ப்பன , பார்ப்பான் என்று வெறும் தூண்டிலை போடுவார்கள், ஆனால் மண்புழு இருந்தால்தானே மீன் மாட்டும், ஆனால் அவர்களுக்கு தெரியும் டோண்டு எனும் மண்புழு தானாக வந்து கொக்கியில் மாட்டிக்கொள்ளும் என்று, டோண்டு என்ற மண்புழுவும் கடமையை சரியாகச் செய்யும் , குழப்பிய குட்டையில் உள்ள அனைத்து சாதி மீன்களும் மண்புழுவை தின்ன அடித்துக்கொண்டு வரும், அனைத்து சாதி மீன்களும் அருமையாக தூண்டிலில் மாட்டிக்கொள்ளும், மண்புழு கொஞ்சம் கொஞ்சமாக மீன்களுக்கு இரையாகும் மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக கும்பலுக்கு இரையாகும்

பிகு: மீன் உணவு உடல்நலத்துக்கு நல்லதுன்னு சொல்றாங்களே ஒருவேளை டோண்டு நல்லதுதான் செய்கிறாரோ என்னவோ.

டோண்டுவின் கருத்து தவறு என்று நான் கருதுவதால் இட்ட இடுகை, டோண்டு அவரை மாற்றிக்கொள்ளமாட்டார் என்பது தெரியும், ஆனால் டோண்டு போன்ற கருத்து இருப்பவர்கள் மாறலாம் என்ற நம்பிக்கையில் இந்த இடுகை.அவரின் கருத்தைச் சொல்ல அவருக்கு இருக்கும் உரிமையில் நான் தலையிடவில்லை. தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.

Wednesday, June 2, 2010

அரிப்பை சொறிந்து கொள்வது எங்கே?

அரிப்பை சொறிந்து கொள்வது எங்கே?

கடந்த சில நாட்களாக நானும் பல பீலாக்குகளில் படிக்கிறேன். உதாரணமாக "அவன் அரிப்பை சொறிந்து கொள்ள் இங்கே வந்து இப்படி கமெண்டுறான், இப்படி பதிவு போட்டு தன் அரிப்பை சொறிந்து கொள்கிறான்" இப்படி நிறைய படிக்கிறேன்.

புரியாமத்தான் கேக்கறேன் அரிப்பை சொறிந்து கொள்ள அரிக்கிற இடத்தில இருக்குற இடத்திலேந்து சொறிஞ்சிக்கமுடியாதா? இப்படி பீலாக்குல வந்து சொறிஞ்சிக்கினாதான் அரிப்பை சொறியமுடியுமா? சத்தியமா சொல்றேன் என் அரிப்பை சொறிஞ்சிக்க இந்தப்பதிவை எழதலீங்க.

Monday, May 31, 2010

கண்டனங்கள், கண்டனம் தெரிவிக்காதவர்களுக்கு அல்ல

பதிவர் சந்தனமுல்லையின் பதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன் , சமூக அக்கறையுடன் அவர் எழுதும் பல பதிவுகள் பிடிக்கும், கருத்து வேறுபடும் இடங்களும் நிறைய , நர்சிம்மை பின் தொடர்ந்தாலும் பெரும்பாலும் படிப்பதில்லை,செந்தில்நாதனுக்கு பணம் திரட்ட முனைந்ததில் ஒரு மரியாதை இருந்தது.இவர்களுக்குள் சில வருடங்களாக நடக்கும் பிரச்சினைகளுக்கு என்ன/யார் காரணமாக இருந்தாலும் இவ்வளவு கேவலமாக எழுதிய நர்சிம்மிற்கு எனது கண்டனங்கள்.

இந்த பிரச்சினையில் சாதி,மதம் ,வர்க்கம், கண்டனம் தெரிவிக்காதவர்களை வம்பிழுக்கப்பது போன்றவை எனக்கு நியாயமாகப்படவில்லை.

தனி மனித சுதந்திரம் என்பது சாதி, மதம் ,வர்க்கமெல்லாம் தாண்டி மனிதனின் உரிமை முடிந்தவரை அவற்றை மதிக்க கற்றுக்கொள்வோம்.

Friday, May 28, 2010

முத்திரை.

முத்திரை.

ஒரு நிலையான நிலைப்பாடு
இல்லாத வழிபாட்டு முறை
கொண்ட கடவுள் கடவுளள்ள
கள்ளம் கொண்ட உள்ளம்
தாண்டி தீண்டினால் வெல்லமல்ல
காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட
நான் ஒன்னும் வீணாப்போன சைக்கிளல்ல
கைக்கிளை என்ற தமிழ் சொல்லுக்கு
அருஞ்சொற்பொருள் தெரிந்த பண்டிதனல்ல
பட்டினி கிடந்து தொப்பை குறைக்கும்
பழக்கமும் எனக்கல்ல என் குடும்பத்துக்கே அல்ல
வீணாய்போனது கருவாடு மட்டுமல்ல
குடிக்காமல் போன கள்ளும்தான் என்பது
எனக்கல்ல ஊருக்கே தெரியும்,
கள்ளுக்கு பல் உவமையல்ல
ஜில்லுக்கு சொல்லும் உவமையல்ல
இது புரியாத கவிதையுமல்ல
புரிந்த கவிதையுமல்ல
வார இறுதியில் போரடித்த முப்பது
நிமிடத்தின் முத்திரை.

Wednesday, May 26, 2010

கலை மற்றும் சில ஓவியங்கள்.

எனது மகளின் முதல் வகுப்பில் வரைந்த ஓவியங்கள்.





Tuesday, May 18, 2010

செஸ் என்ற பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளையாட்டு.


விஸ்வநாதன் ஆனந்த என்ற பார்ப்பனர் செஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதற்கு ,பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் வாழ்த்து தெரிவிக்கும்போது நாம் அந்த விளையாட்டில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சி பற்றி விளக்குவது கடமையாகிறது.செஸ் என்ற விளையாட்டு பார்பனர் கண்டுபிடித்த சூழ்ச்சி விளையாட்டு என்பது மாஹாபாரதம் என்ற பாப்பன பண்டார கதையில் வரும் சகுனி என்ற நபரின் மூலம் நாமறிவோம்.

இந்த பார்ப்பானின் விளையாட்டில் உள்ள சூழ்ச்சியை இப்போது விளங்கிக்கொள்வோம். முதலில் 64 கட்டம் என்று ஏதோ ஜாதகத்தில் உள்ள கட்டம் போன்று இந்து என்ற பார்ப்பன மதத்தின் முட்டாள்தனத்தை மக்கள் மீது இந்த பண்டாரங்கள் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். கறுப்பு , வெள்ளைக்காய்களில் , வெள்ளைக்காயுடன் உள்ளவனே முதலில் ஆடமுடியும் என்ற நிறவெறியுடன் இருக்கும் இந்த விளையாட்டில் முதல் பார்ப்பன சூழ்ச்சி, அதில் இருக்கும் சிப்பாய் காய்கள் நேராகத்தான் நகர்த்தமுடியும் என்ற விதி வைத்துவிட்டு , எதிரியை தாக்கும்போது மட்டும் குறுக்காகவே சாய்ப்பார்கள், இதிலிருந்து பார்ப்பனர்களின் குறுக்கு புத்தியை அறிந்துகொள்ளலாம், மேலும் யானை, குதிரை போன்ற காய்களை முதல் வரிசையில் வைத்திருந்தாலும் ஓரங்கட்டி வைத்திருப்பார்கள், இதிலிருந்து இந்த பார்ப்பன பண்டாரங்கள் விலங்குகளையும் ஆடு, மாடு, குதிரை,யானை வளர்ப்பவர்களை ஓரங்கட்டி வைக்க நினைத்த அவர்களின் மன ஓட்டத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

பிஷப் என்ற காயை ராஜா, ராணி பக்கத்தில் வைத்திருந்தாலும் தன் குல புத்தியான குறுக்கு புத்தியுடன் அவர்களையும் தங்களுக்கு தேவை எனும்போது குறுக்காக செலுத்து பலியிட்டு விடுவார்கள், அதிலும் அந்தக்குதிரை அசுவ மேத யாகத்தில் ராணியுடன் கலவி கொண்ட போதையுடன் இரண்டு அடி நேராக செல்லுமாம், ஆனால் எதிரியை தாக்கும்போது மட்டும் அதே பார்ப்பன குறுக்குபுத்தியுடன் நாய் வாலை நிமிர்த்தவா முடியும்.

யானை நேராக செல்கிறதே என நினைக்கலாம், பெரும்பாலும் அது பலியிடப்படவே பயன்படும், ராணி நேராகவும் செல்லலாம் ,குறுக்காகவும் செல்லலாம் என்று தங்களின் குறுக்கு புத்தியை இந்த பண்டாரங்கள் அங்கேயும் தினித்தன.

கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் ராஜா ஒரு கட்டம்தான் நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான், ஏனென்றால் ராஜா தலையில் சிலுவை இருக்கும், சிறுபாண்மையினருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதுதானே இந்தக்கூட்டத்தின் வேலை. நாம் மட்டும் எதிர்க்காவிட்டால் இந்நேரம் ராஜா தலையில் உள்ள சிலுவையை அகற்றி கொண்டை போட்டிருப்பார்கள்.

நாம் விடமாட்டோம் ராஜா தலையில் சிலுவையுடனே இருப்பார், மேலும் ராஜா எங்கும் எப்போதும் செல்லலாம் என்று விதியை மாற்றியமைத்து மதச்சார்பின்மை காப்போம்.

பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.

Sunday, May 16, 2010

நேரம்,பெயர் மாற்றம், நூத்துக்கு நூறூ.

பதிவர் சித்ரா என்பவரின் டைம் டாப் 100 ல் வந்த இந்தியர்கள் பதிவு படித்தவுடன் எழுத தோன்றிய பதிவு, சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இமெலுக்கு டைம் சப்ஸ்கிரிப்சன் இமெயில் வந்தது , இருபது டாலருக்கு வாரம் ஒரு டைம் அப்படின்னு டீல் இருந்துச்சு, நானும் இருபது டாலருக்கு வாரம் ஒரு வாட்ச் இலவசமா வருதே, இந்த வாட்சுகள இந்தியாவுக்கு போகும்போது சொந்தக்காரங்க , தெரிஞ்சவிங்க ஊர்க்காரங்களுக்கு கொடுத்து நாமும் வாட்ச் கொடுத்த வள்ளல்னு பேரு வாங்கலாம்னு முடிவு பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன், பாத்தா வாரா வாரம் இந்த இங்கிலிஸு புத்தகத்தை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, தமிளு புத்தகமே விகடன் தாண்டி நமக்கு அறிவு கிடையாது, அதனால அன்னிலேந்து அத வாங்கி ரீசைக்கிள்ல போடறதோட சரி, திடீர்னு சிலவாரங்களுக்கு முன்னாடி கொஞ்சம் தடிச்ச டைம் புத்தகம் வந்துச்சு, சரி வாட்செல்லாம் அனுப்பிட்டாங்க போலன்னு பிரிச்சிப்பாத்தேன் என்னமோ டாப் 100ன்னு போட்டிருந்தான், அப்புறம், சித்ரா மேடம் பதிவில தமிழில் படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்.

சரி இப்ப இன்னாத்துக்கு இந்தக்கதைன்னு உங்களுக்கு தோனலாம், வாராவாரம் சனிக்கிழமை இந்த டைம் புத்தகம் வரும், அத எடுக்க தபால் பெட்டிய திறந்தேன், உள்ள ஒரு புது பார்சல் இருந்துச்சு, சொரூபா பிந்தினிக்கு நசரேயனிடமிருந்து, பிரிச்சிப்பாத்தேன் ஒரு துண்டு இருந்துச்சி, இந்த உரல் , உலக்கை எதுக்கு சேலை, சுடிதார், மிடி போட்டாலும் துண்டு போடுவாருன்னு தெரியும், ஒரு பதிவுக்கு சும்மா பேரு மாத்தினதுக்கு இப்படி துண்டு பார்சல் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல, சரி இவ்வளவு நாளா துண்டு போடுறாரே , இதுவரைக்குமா ஒன்னும் செட் ஆகலன்னு நானும் உங்கள மாதிரியே யோசிச்சிருக்கேன், ஏன் செட்டாகலங்கற காரணம் அந்தத்துண்ட பாத்தவுடன் தெரிஞ்சு போஞ்சு , அது கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கின பி.வாசு படத்தில ஹீரோ போட்டிருக்குற குற்றாலம் துண்டு. இனிமேலும் சொரூபா பிந்தினிக்கு அவர் துண்டு அனுப்பவேண்டாம் என்பதற்காகவே மீண்டும் நான் பெயர் மாற்றம் செய்துகொள்கிறேன்.

இப்போது இன்னொரு பதிவரின் நூத்துக்கு நூறு.


வணிக நோக்கில் நடத்தப்படும் கல்விக்கூடங்களின் பைத்தியக்காரத்தனம் உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய தினமணி செய்தித்தாளில் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நடத்திய அட்டூழியம் வெளியாகி உள்ளது.
தனது பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் முப்பதுபேரை மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியுள்ளது இந்தப்பள்ளி.
மாணவர்கள் செய்த தவறென்ன?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த 30 மாணவர்களும் தேர்ச்சிபெற வாய்ப்பில்லையாம்.

பத்தாம் வகுப்பு தேர்விற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.

ஓராண்டு காலத்தில் இந்த 30 மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இந்தப்பள்ளியில் வேறு என்னவேலை நடந்துகொண்டிருக்கிறது?

நூறுசதவீத தேர்ச்சி என்று மார்தட்டிக்கொள்ளவும், அதன்மூலம் பெற்றோரின் பணப்பையை தட்டிப்பறிக்கவும் துடிக்கின்றன இந்த தனியார் பள்ளிகள்.

இந்த லட்சணத்தில் அதிகாரிகளின் நெருக்குதல் வேறு.

ஒவ்வோர் ஆண்டும் நூறுசதவீத தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தடை செய்யப்படவேண்டும்.

மாறாக, 90 சதவீதத்திற்குமேல் தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு பொன்னாடை போர்த்தலாம்; விருது வழங்கலாம்; வேறு எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

போதுமான ஆசிரியர்களை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை.

ஆனால் நூறுசதவீத தேர்ச்சிவேண்டும் என்று பள்ளித்தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்க மட்டும் இந்த அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள்.

இதுபோன்ற வெட்கக்கேடான விஷயங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது.

முதல் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புவரை தன்னுடைய பள்ளியில் படித்த முப்பது மாணவர்களை கடுமையாக உழைத்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இதுபோன்ற பள்ளிகள் இந்த நாட்டிற்குத்தேவைதானா?

Saturday, May 15, 2010

சொரூபா பிந்தினி- புதியது

சொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியது


அடங்கொய்யால நானும் ஒரு பொண்ணு பேருல பதிவு எழுதலாம்னு நெனச்சேன், கருமம் நாட்டுக்குள்ள இருக்கிறதால மனுசப்பதறுகள் மாதிரிதான் அறிவு இருக்கு, தனி பிளாக் ஆரம்பிக்காம http://kudukuduppai.blogspot.com லேயெ போஸ்ட் பண்ணிட்டேன்

Thursday, May 13, 2010

ஒரு லட்சம் ஒரு லட்சம்

ஒரு லட்சம் ஒரு லட்சம்

http://sandanamullai.blogspot.com/2010/05/500.html

பதிவர் சந்தனமுல்லை தன்னுடைய 500 வது பதிவு என்ற மைல்கல் எட்டியிருக்கிறார், அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் ஒரு பிரபல குடும்பப்பதிவர் என்பது நீங்கள் அறிவீர்கள்.

ஆம் என்னுடைய கார் இன்று ஒரு லட்சம் 'மைல்கல்' கடந்திருக்கிறது, 500 என்ற மைல்கல் கடந்த பப்பு அம்மாவிற்கு லட்சம் மைல்கல் கண்ட சிறப்பு மிக்க மகிழுந்து(?) ஓனரின் வாழ்த்துக்கள்.

Monday, April 26, 2010

கொண்டியார(ன்)கள்ளி இறுதி பாகம்


ரவி விபத்தில் இறந்த செய்திகேட்டு இரண்டு குழந்தைகளுடன் தவித்த ரவியின் மனைவியையும், கிறுக்கனாய்போன சந்திரனின் மனைவியையும் கொண்டியாரகள்ளி தனக்கே உரித்தான பாணியில் விளாசினார்

“ஏண்டி குச்சிகாரி முண்டைகளா, வீட்டுக்கு வந்து பெரியவன தூக்கிபோட்டு முழுங்கினிய, அடுத்தவன கிறுக்கனாக்குனிய இன்னம் இங்கே எதுக்குடி இருக்குறிய தட்டுவாணி செறுக்கியளா கெளம்புங்கடி”

இவ்வளவு பேச்சையும் பொறுக்கமுடியாமல் தட்டிக்கேட்க வந்த ஊர்பெரிசுகள் குச்சிகாரன்கள் ஆக்கப்பட்டதில் அவர்களும் ஒதுங்க , ரவியின் மனைவியும் , சந்திரனின் மனைவியும் ஆளை விட்டால் போதுமென்று ஊரை விட்டே சென்றுவிட்டனர்.

சந்திரன் சாப்பிடுவதை மட்டும் சரியாக செய்தான், மற்ற எந்த காரியத்திலும் அவன் சராசரி மனிதனாக தெரியவில்லை. கொண்டியாரகள்ளியும் வீட்டைப்பிடித்த சனியன்கள் தொலைந்ததால் என்றாவது ஒருநாள் சரியாகும் என்று இருந்தால்.

திருப்பதியின் மேல் குடும்ப பாரம் விழுந்தது, அண்ணன்களின் இந்த நிலையினால் சரிந்த குடும்பத்தை அவனும் தன்னுடைய போக்கில் சம்பாதித்து முன்னுக்கு கொண்டு வந்தான். திடீரென ஒருநாள் வீட்டிற்கு போலிஸ்காரர்கள் வந்தார்கள்.

“டேய் இந்த வண்டிமாடு எங்கடா வாங்கின என்று ”பலமாக தட்டியதில் உண்மையை கக்கினான் , இதுவரை ஐம்பது சோடி மாடுகள் களவாடியிருப்பதாக சொன்னான், இந்த சோடி நல்லா பலமா இருந்துச்சு அதான் நானே வெச்சிக்கலாமின்னு வீட்டுக்கு ஓட்டிட்டு வந்தேன் என்றான்.

ஒருவழியாக மிச்சமிருந்த சொத்துக்களையும் விற்று மாட்டுக்காரர்களுக்கு கொடுக்கவேண்டிய காசை அடைத்தனர். திருப்பதியும் திருட்டுக்கேஸில் சிறை சென்றான்.

”சம்பாதிச்சு போட்டவங்க எல்லாம் ஒன்னுமன்னா போயித்தாங்க , நீ இப்படியே குந்தி இருந்தா யாரு சோறு போடுறது , யாரு அந்த புள்ளைய ஒருத்தன் கிட்ட புடிச்சிக்கொடுக்கிறது, போய் எப்படியாவது சம்பாதிச்சினு வாய்யா ” என்று கொண்டியாரனிடம் கத்தினால் கள்ளி.

“நான் இருக்கிறதும் உனக்குப்பொறுக்கல என்ற படியே”

இப்போது பத்தினி செத்துக்கிடந்தாள் ஒரு XXXயும், எழவுக்கு வரவில்லை, உத்திரத்தில் தொங்கிய கொண்டியாரன் உட்பட.

முற்றும்.

பணம் எப்படியும் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியை மட்டுமே வளர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து எழுத நினைத்த தொடர். எனக்கு தற்போது இருக்கும் வேலைப்பளுவில் தொடரை தொடர்வது சிரமம் என்று தோன்றியதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Tuesday, April 20, 2010

Boolean புரோகிராமர்

public class சாப்பாட்டுக்கடை {
public static சாப்பாடு வாங்குசாப்பாடு(boolean அரிசி,boolean கூட்டு, boolean பொறியல்,boolean எடுப்பு,boolean தயிர்,boolean அளவு,boolean வெஜ்){
return சாப்பாடு;
}

}

--------------

public class வாடிக்கையாளர்{
public static void main(args[] a){
சாப்பாடு மதியசாப்பாடு = சாப்பாட்டுக்கடை.வாங்குசாப்பாடு(false,true,false,true,true,true);
}
}

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

1.

பலகாரம் தின்றபின்
செரிப்பதாய் கனவுகளுக்கிடையே
பாயாசத்தில் முங்கி நீந்துகையில்
காற்றுக் குமிழிகளாய்
வெளியேறும் வறுத்த
கோழியின் வாசம்
முழுதாய் தின்றபின்
மெல்ல எழுந்து கைகழுவும் நேரம்
பாக்கெட் சாக்லேட் உந்தி எழ
சாக்லேட் பேப்பர் குப்பையிட
காலிடறி வறுகடலை கண்டதும்
குடலை அடைந்ததும்
குளக்கரைக்கு ஓடித்திரும்புகையில்...
கையில் கொக்கும் மீனுமாய்!

2.

தினம் சிக்கன் வாங்க அலுப்பு
பதப்பட்ட சிக்கன் கால்கள்
சுடவைத்து ஆறும் முன்
வாயில் .

மனிதர்களை கண்டிக்கலாம்

மனிதர்களை கண்டிக்கலாம்

Friday, April 2, 2010

நடராஜ நிலை நாரைபோல்

குடித்த மணிக்கணக்கில்
நடராஜநிலை நாரைபோல்
பானங்கள் பருகியபடி
ஆடிக்கொண்டிருக்கும் பாலா

இல்லாத கழிப்பிடத்தில்
ஈர்ப்பியல்பில்லாதியங்கி
வழியெதுவும் தெரியாது
விரைந்து கொண்டிருக்கும் உச்சா..

தன்போக்கில் திரும்புகையில்
தன் வேட்டி தொலைந்ததெங்கே?

சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..!

Wednesday, March 24, 2010

உப்புக்கண்டம் ஆ.

கருப்பாக இருந்தாலும் அவை வெள்ளாடுகளாகவே அறியப்பட்டன..
காட்டிலும் நாட்டிலும் மேட்டிலும் மேய்ந்துவிட்டிருந்தன..
கீதாரியின் கொட்டடியிலும் ஆட்டுக்காரர் கொட்டகையிலும் புளுக்கையிட்டன..
மங்கள நாளொன்றில் அவை வெட்டப்பட்டன..
அடுப்பிலிட்ட தீயில் அருமையா வெந்தன..
செந்தீக்கள் சில பிரியாணி சட்டியின் மேல் போடப்பட்டன..
சட்டியிலிருந்தவை எலும்பு நீக்கி உண்ணப்பட்டன..
சில நேரங்களில் எலும்பும் சேர்த்தே உண்ணப்பட்டன..

அடிச்சட்டியில் சாரணி கொண்டு கீறப்பட்டது..
அங்கே கொழுப்பு ரசம் தெளிக்கப்பட்டது..
கருப்பு பிரியாணியும் கொழுப்பு ரசத்துடன்
சுவைக்கப்பட்டதால் காணாமல் போயின..
மொய்யிடும் நேரமென்று உடுக்கை அடித்தார்..
கறி சாப்பிட்டு காலாற நடப்பது இதயத்திற்கு ஏற்றதென்றார்..
மொய்யிடாம காலாற நடப்பது இதயத்திற்கு இன்னமும் பிடித்திருக்கிறதாம்..
அதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமாம்..

சுற்றிலும் கொட்டிக் கிடந்த பாத்திரம் ஒதுக்கி ..
சமைக்கப்படாமல் மிச்சமிருந்த கறியை கண்டேன் களித்தேன்..
வெள்ளாடு!
கருப்புத்தோல் கொஞ்சம் காசும் ஆனது..
உப்புக்கண்டம்..!
கற்பனையிலே மனம் ஓடியது..
இரு சுவைகளின் மணமும் எனக்குத் தெரிந்திருந்தது..
உடனே மறக்காது ஏற்றிவிட்டேன் மஞ்சளும்,காரமும், உப்பும்..
நறுமணமுள்ள இந்த கண்டங்களுக்கு..
மன்னிக்கவும்..
இந் நவீன பேக்கன்களுக்கு..
ஒரு சதை உண்டு..!

Monday, March 15, 2010

நீங்கள் ஜாவாவில் புரோகிராம் செய்பவரா?


அமெரிக்கா வந்து கொஞ்ச நாள் கோடு அடிச்சு, அப்புறம் அடிக்காம மத்த டெலிகாம் சாப்ட்வேர் பாத்து, கொஞ்ச நாளா மீண்டும் கோடு அடிக்க ஆரம்பிச்சேன், தேவையென்றால் தேடிப்பிடித்து படிப்பது என் வழக்கம். அப்படி நான் கண்ட ஒரு பிளாக்


மிகவும் சுவாராசியமான விசயங்கள் அடங்கியது.. உங்களுக்கும் உதவலாம்.

கொண்டியாரகள்ளியை யாரும் தேடிப்பிடித்து படிக்கமாட்டார்கள் ஆதலால் இங்கே விளம்பரம் செய்துகொள்கிறேன், படித்து பயன் பெறுங்கள்.

Wednesday, March 3, 2010

கொண்டாடும் முன்பா

சம்மந்தியிடம்
கோமணத்தை வாங்கும் முறைமாமன்
மகனின்
போற்குணமும் மூப்படையா
ஜாவாவும் நல்லாபடிச்சா
மென்கூலி வேலைக்கு ஆகிப்போச்சா
வேலை மெனக்கெட்டு கோடு அடிச்சி..
டெஸ்ட்டரூ கடிச்சு வீங்கி போச்சு
டிவிட்டருல கேள்வி கேட்டு
ஆர்குட்டோட பேஸ்புக்
சேந்து ஜிமெயிலில் கோடு வந்து
வெட்டி ஒட்டுமுன்
மானம் ஏறிடுச்சு
பஸ்ஸூல பஸ்ஸூல


Tuesday, March 2, 2010

ஐஸ்

சரக்கு கிளாஸில் அதிகம் என ஒதுக்கப்பட்ட
ஐஸ் கட்டி ஒன்று கிளாஸில் உள்ள
மற்றொன்றிடம் சொல்லிக்கொண்டது
எனக்கு விடுதலை !
சரக்கின் போதையறியா பனிக்கட்டி நீ !
என்னைப்பார் போதையில் மிதக்கிறேன்.

சிலநேர போதை பின்னர் உருகி
நாளை எச்சமாகப்போகிறாய்.

வாட் டு யூ வாண்ட் சார்
மார்கரீட்டா வித் கிரஷ்டு ஐஸ்

போதையின் வாசமறியா பனிக்கட்டி
மார்கரீட்டாவுக்கு
மிக்ஸியில் அடிபட்டு
நாளை எச்சமாக இன்றே
உயிரை விட்டிருந்தது.


புரிந்தவர்களுக்கு

அங்கமெல்லாம் தேனொழுக
ஆடியபாதம் அழகாக தோய்த்திட
விண்ணதிர பண்ணிசையை
விளம்பரமே இல்லாமல்
மஞ்சத்தில் மாமணியாய்
மருவீட்டாள் செய்திடவே
கருவேல மரத்தின் கருங்குச்சியை
கருங்காக்கை வீடுகட்ட
காலையில் வீடுதாண்டி காசில்லாமல்
கட்டிய சொந்த வீட்டிலிருந்து கரைய
என் வீட்டு எசமான் வாடகை
கேட்டு வரவும்
வந்ததென்னவோ கோபம்
வரக்கூடாதுமென்னமோ கோபம்
நெஞ்சத்தில் உதித்திட்ட
கருத்தினையே கவிதையாக்கி
தங்களுக்கு அற்பணிக்கிறேன்
என்னை புரிந்தவர்களுக்கு மொக்கை
புரியாதவர்களுக்கு கவிதை.

Friday, February 26, 2010

காலினை தீ சுடினும் ...

காலினை தீ சுடினும் ...

ரயிலில் ஏறி எங்கோ போய் விட்டு
நினைவினில் விழித்தெழுகையில்
தீராத் தேடல்
காணாமல் போன செருப்பு
திகைப்பு மீண்டெழுந்து
காலினை தீ சுடினும்
தொடர்ந்து நடை
யாரோவான கண்ணம்மாவின் கண்கள்
கண்டது குளிர்ந்தது அகம்
கனவுலகம் சென்று மிதந்து
கண்ணம்மாவின் கண்ணில் முத்தமிட்டு
உதட்டுக்கு வருகையில்
கண்ணம்மாவில் கணவன்
கட்டணக் கழிவறையிலிருந்து வெளியேறி
டேய் பேமானி என் பொண்டாட்டிய
ஏண்டா பாக்கிற
கனவுகள் கண்ணம்மாவின் உதட்டில்
கணவனின் ஈரச்செருப்பு
கண்ணத்தில் பட்டவுடன்
காணாமல் போன செருப்பு
ஞாபகம் தானாய் விழித்தெழும் நனவுகள்

Thursday, February 11, 2010

சிந்தனைக்கவுஜ

அதுல அப்படி சொல்லிருக்கு
இதுல இப்படி சொல்லிருக்கு
அதுல சிந்திக்க சொல்லிருக்க
அதுல லெப்ட்ல சிந்திக்க சொல்லிருக்கு
இதுல ரைட்ல சிந்திக்க சொல்லிருக்கு
அதுல சிந்திப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கு
இதுல சிந்திக்காட்டி தண்டனை உறுதியாக்கப்பட்டிருக்கு
அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு
அதுல தடைசெய்யப்பட்டிருக்கு
இதுல தடைசெய்யப்பட்டது சிந்திந்தால்
இதுல இந்த மாதிரி தண்டனை உறுதி
இதுல அதுல புரிந்து சிந்தனை செய்வது சிந்தனை
இதுல அதுல தாண்டி சிந்திந்தால் அது எதுல.


Sunday, February 7, 2010

அசலும் அரங்கபெருமாளும்.

அரங்கப்பெருமாள் said...
விஜய் படம்,அஜித் படம் பார்க்காதீங்கண்ணே. அதெல்லாம் பார்த்தா இப்படி எழுதத் தோணும். பதிவு போட எதுவும் கிடக்கலன்னா பார்க்கலாம்ண்ணே....

கு.ஜ.மு.க: தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்

February 4, 2010 6:14 PM

பிகு: அசல் படம் பார்த்தாச்சு.

இனிமேல் குடுகுடுப்பை சோழன் என்ற பட்டத்தையோ , டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பட்டத்தையோ பதிவர் பெயரிலோ,பட்டப்பெயரிலோ நான் பயன்படுத்தப்போவதில்லை.

இனி இன்றைய பதிவு:
டெக்ஸாஸ் கொண்ட சோழன் வருகிறார் பராக்,பராக், மூவேந்தரையும் கட்டியாண்ட குடுகுடுப்பை சோழன் வாழ்க
சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங்.

டெக்ஸாஸ் கண்ட சோழன் வாழ்க, குண்டான் சோறும் குறும்பாடும் சாப்பிடும் தானைத்தலைவர் குடுகுடுப்பை சோழன் வாழ்க
.................................
......................................

பதிவர்
குடுகுடுப்பை