Monday, May 31, 2010

கண்டனங்கள், கண்டனம் தெரிவிக்காதவர்களுக்கு அல்ல

பதிவர் சந்தனமுல்லையின் பதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன் , சமூக அக்கறையுடன் அவர் எழுதும் பல பதிவுகள் பிடிக்கும், கருத்து வேறுபடும் இடங்களும் நிறைய , நர்சிம்மை பின் தொடர்ந்தாலும் பெரும்பாலும் படிப்பதில்லை,செந்தில்நாதனுக்கு பணம் திரட்ட முனைந்ததில் ஒரு மரியாதை இருந்தது.இவர்களுக்குள் சில வருடங்களாக நடக்கும் பிரச்சினைகளுக்கு என்ன/யார் காரணமாக இருந்தாலும் இவ்வளவு கேவலமாக எழுதிய நர்சிம்மிற்கு எனது கண்டனங்கள்.

இந்த பிரச்சினையில் சாதி,மதம் ,வர்க்கம், கண்டனம் தெரிவிக்காதவர்களை வம்பிழுக்கப்பது போன்றவை எனக்கு நியாயமாகப்படவில்லை.

தனி மனித சுதந்திரம் என்பது சாதி, மதம் ,வர்க்கமெல்லாம் தாண்டி மனிதனின் உரிமை முடிந்தவரை அவற்றை மதிக்க கற்றுக்கொள்வோம்.

Friday, May 28, 2010

முத்திரை.

முத்திரை.

ஒரு நிலையான நிலைப்பாடு
இல்லாத வழிபாட்டு முறை
கொண்ட கடவுள் கடவுளள்ள
கள்ளம் கொண்ட உள்ளம்
தாண்டி தீண்டினால் வெல்லமல்ல
காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட
நான் ஒன்னும் வீணாப்போன சைக்கிளல்ல
கைக்கிளை என்ற தமிழ் சொல்லுக்கு
அருஞ்சொற்பொருள் தெரிந்த பண்டிதனல்ல
பட்டினி கிடந்து தொப்பை குறைக்கும்
பழக்கமும் எனக்கல்ல என் குடும்பத்துக்கே அல்ல
வீணாய்போனது கருவாடு மட்டுமல்ல
குடிக்காமல் போன கள்ளும்தான் என்பது
எனக்கல்ல ஊருக்கே தெரியும்,
கள்ளுக்கு பல் உவமையல்ல
ஜில்லுக்கு சொல்லும் உவமையல்ல
இது புரியாத கவிதையுமல்ல
புரிந்த கவிதையுமல்ல
வார இறுதியில் போரடித்த முப்பது
நிமிடத்தின் முத்திரை.

Wednesday, May 26, 2010

கலை மற்றும் சில ஓவியங்கள்.

எனது மகளின் முதல் வகுப்பில் வரைந்த ஓவியங்கள்.





Tuesday, May 18, 2010

செஸ் என்ற பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளையாட்டு.


விஸ்வநாதன் ஆனந்த என்ற பார்ப்பனர் செஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதற்கு ,பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் வாழ்த்து தெரிவிக்கும்போது நாம் அந்த விளையாட்டில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சி பற்றி விளக்குவது கடமையாகிறது.செஸ் என்ற விளையாட்டு பார்பனர் கண்டுபிடித்த சூழ்ச்சி விளையாட்டு என்பது மாஹாபாரதம் என்ற பாப்பன பண்டார கதையில் வரும் சகுனி என்ற நபரின் மூலம் நாமறிவோம்.

இந்த பார்ப்பானின் விளையாட்டில் உள்ள சூழ்ச்சியை இப்போது விளங்கிக்கொள்வோம். முதலில் 64 கட்டம் என்று ஏதோ ஜாதகத்தில் உள்ள கட்டம் போன்று இந்து என்ற பார்ப்பன மதத்தின் முட்டாள்தனத்தை மக்கள் மீது இந்த பண்டாரங்கள் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். கறுப்பு , வெள்ளைக்காய்களில் , வெள்ளைக்காயுடன் உள்ளவனே முதலில் ஆடமுடியும் என்ற நிறவெறியுடன் இருக்கும் இந்த விளையாட்டில் முதல் பார்ப்பன சூழ்ச்சி, அதில் இருக்கும் சிப்பாய் காய்கள் நேராகத்தான் நகர்த்தமுடியும் என்ற விதி வைத்துவிட்டு , எதிரியை தாக்கும்போது மட்டும் குறுக்காகவே சாய்ப்பார்கள், இதிலிருந்து பார்ப்பனர்களின் குறுக்கு புத்தியை அறிந்துகொள்ளலாம், மேலும் யானை, குதிரை போன்ற காய்களை முதல் வரிசையில் வைத்திருந்தாலும் ஓரங்கட்டி வைத்திருப்பார்கள், இதிலிருந்து இந்த பார்ப்பன பண்டாரங்கள் விலங்குகளையும் ஆடு, மாடு, குதிரை,யானை வளர்ப்பவர்களை ஓரங்கட்டி வைக்க நினைத்த அவர்களின் மன ஓட்டத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

பிஷப் என்ற காயை ராஜா, ராணி பக்கத்தில் வைத்திருந்தாலும் தன் குல புத்தியான குறுக்கு புத்தியுடன் அவர்களையும் தங்களுக்கு தேவை எனும்போது குறுக்காக செலுத்து பலியிட்டு விடுவார்கள், அதிலும் அந்தக்குதிரை அசுவ மேத யாகத்தில் ராணியுடன் கலவி கொண்ட போதையுடன் இரண்டு அடி நேராக செல்லுமாம், ஆனால் எதிரியை தாக்கும்போது மட்டும் அதே பார்ப்பன குறுக்குபுத்தியுடன் நாய் வாலை நிமிர்த்தவா முடியும்.

யானை நேராக செல்கிறதே என நினைக்கலாம், பெரும்பாலும் அது பலியிடப்படவே பயன்படும், ராணி நேராகவும் செல்லலாம் ,குறுக்காகவும் செல்லலாம் என்று தங்களின் குறுக்கு புத்தியை இந்த பண்டாரங்கள் அங்கேயும் தினித்தன.

கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் ராஜா ஒரு கட்டம்தான் நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான், ஏனென்றால் ராஜா தலையில் சிலுவை இருக்கும், சிறுபாண்மையினருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதுதானே இந்தக்கூட்டத்தின் வேலை. நாம் மட்டும் எதிர்க்காவிட்டால் இந்நேரம் ராஜா தலையில் உள்ள சிலுவையை அகற்றி கொண்டை போட்டிருப்பார்கள்.

நாம் விடமாட்டோம் ராஜா தலையில் சிலுவையுடனே இருப்பார், மேலும் ராஜா எங்கும் எப்போதும் செல்லலாம் என்று விதியை மாற்றியமைத்து மதச்சார்பின்மை காப்போம்.

பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.

Sunday, May 16, 2010

நேரம்,பெயர் மாற்றம், நூத்துக்கு நூறூ.

பதிவர் சித்ரா என்பவரின் டைம் டாப் 100 ல் வந்த இந்தியர்கள் பதிவு படித்தவுடன் எழுத தோன்றிய பதிவு, சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இமெலுக்கு டைம் சப்ஸ்கிரிப்சன் இமெயில் வந்தது , இருபது டாலருக்கு வாரம் ஒரு டைம் அப்படின்னு டீல் இருந்துச்சு, நானும் இருபது டாலருக்கு வாரம் ஒரு வாட்ச் இலவசமா வருதே, இந்த வாட்சுகள இந்தியாவுக்கு போகும்போது சொந்தக்காரங்க , தெரிஞ்சவிங்க ஊர்க்காரங்களுக்கு கொடுத்து நாமும் வாட்ச் கொடுத்த வள்ளல்னு பேரு வாங்கலாம்னு முடிவு பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன், பாத்தா வாரா வாரம் இந்த இங்கிலிஸு புத்தகத்தை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, தமிளு புத்தகமே விகடன் தாண்டி நமக்கு அறிவு கிடையாது, அதனால அன்னிலேந்து அத வாங்கி ரீசைக்கிள்ல போடறதோட சரி, திடீர்னு சிலவாரங்களுக்கு முன்னாடி கொஞ்சம் தடிச்ச டைம் புத்தகம் வந்துச்சு, சரி வாட்செல்லாம் அனுப்பிட்டாங்க போலன்னு பிரிச்சிப்பாத்தேன் என்னமோ டாப் 100ன்னு போட்டிருந்தான், அப்புறம், சித்ரா மேடம் பதிவில தமிழில் படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்.

சரி இப்ப இன்னாத்துக்கு இந்தக்கதைன்னு உங்களுக்கு தோனலாம், வாராவாரம் சனிக்கிழமை இந்த டைம் புத்தகம் வரும், அத எடுக்க தபால் பெட்டிய திறந்தேன், உள்ள ஒரு புது பார்சல் இருந்துச்சு, சொரூபா பிந்தினிக்கு நசரேயனிடமிருந்து, பிரிச்சிப்பாத்தேன் ஒரு துண்டு இருந்துச்சி, இந்த உரல் , உலக்கை எதுக்கு சேலை, சுடிதார், மிடி போட்டாலும் துண்டு போடுவாருன்னு தெரியும், ஒரு பதிவுக்கு சும்மா பேரு மாத்தினதுக்கு இப்படி துண்டு பார்சல் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல, சரி இவ்வளவு நாளா துண்டு போடுறாரே , இதுவரைக்குமா ஒன்னும் செட் ஆகலன்னு நானும் உங்கள மாதிரியே யோசிச்சிருக்கேன், ஏன் செட்டாகலங்கற காரணம் அந்தத்துண்ட பாத்தவுடன் தெரிஞ்சு போஞ்சு , அது கிலோ பத்து ரூபாய்க்கு வாங்கின பி.வாசு படத்தில ஹீரோ போட்டிருக்குற குற்றாலம் துண்டு. இனிமேலும் சொரூபா பிந்தினிக்கு அவர் துண்டு அனுப்பவேண்டாம் என்பதற்காகவே மீண்டும் நான் பெயர் மாற்றம் செய்துகொள்கிறேன்.

இப்போது இன்னொரு பதிவரின் நூத்துக்கு நூறு.


வணிக நோக்கில் நடத்தப்படும் கல்விக்கூடங்களின் பைத்தியக்காரத்தனம் உச்சத்தை எட்டியுள்ளது.
இன்றைய தினமணி செய்தித்தாளில் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி நடத்திய அட்டூழியம் வெளியாகி உள்ளது.
தனது பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் முப்பதுபேரை மாற்றுச்சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியுள்ளது இந்தப்பள்ளி.
மாணவர்கள் செய்த தவறென்ன?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த 30 மாணவர்களும் தேர்ச்சிபெற வாய்ப்பில்லையாம்.

பத்தாம் வகுப்பு தேர்விற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.

ஓராண்டு காலத்தில் இந்த 30 மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இந்தப்பள்ளியில் வேறு என்னவேலை நடந்துகொண்டிருக்கிறது?

நூறுசதவீத தேர்ச்சி என்று மார்தட்டிக்கொள்ளவும், அதன்மூலம் பெற்றோரின் பணப்பையை தட்டிப்பறிக்கவும் துடிக்கின்றன இந்த தனியார் பள்ளிகள்.

இந்த லட்சணத்தில் அதிகாரிகளின் நெருக்குதல் வேறு.

ஒவ்வோர் ஆண்டும் நூறுசதவீத தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தடை செய்யப்படவேண்டும்.

மாறாக, 90 சதவீதத்திற்குமேல் தேர்ச்சி காட்டும் பள்ளிகளுக்கு பொன்னாடை போர்த்தலாம்; விருது வழங்கலாம்; வேறு எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

போதுமான ஆசிரியர்களை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை.

ஆனால் நூறுசதவீத தேர்ச்சிவேண்டும் என்று பள்ளித்தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்க மட்டும் இந்த அதிகாரிகள் அதிகாரம் படைத்தவர்கள்.

இதுபோன்ற வெட்கக்கேடான விஷயங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது.

முதல் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்புவரை தன்னுடைய பள்ளியில் படித்த முப்பது மாணவர்களை கடுமையாக உழைத்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற வைக்க இயலவில்லை என்றால் இதுபோன்ற பள்ளிகள் இந்த நாட்டிற்குத்தேவைதானா?

Saturday, May 15, 2010

சொரூபா பிந்தினி- புதியது

சொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியது


அடங்கொய்யால நானும் ஒரு பொண்ணு பேருல பதிவு எழுதலாம்னு நெனச்சேன், கருமம் நாட்டுக்குள்ள இருக்கிறதால மனுசப்பதறுகள் மாதிரிதான் அறிவு இருக்கு, தனி பிளாக் ஆரம்பிக்காம http://kudukuduppai.blogspot.com லேயெ போஸ்ட் பண்ணிட்டேன்

Thursday, May 13, 2010

ஒரு லட்சம் ஒரு லட்சம்

ஒரு லட்சம் ஒரு லட்சம்

http://sandanamullai.blogspot.com/2010/05/500.html

பதிவர் சந்தனமுல்லை தன்னுடைய 500 வது பதிவு என்ற மைல்கல் எட்டியிருக்கிறார், அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் ஒரு பிரபல குடும்பப்பதிவர் என்பது நீங்கள் அறிவீர்கள்.

ஆம் என்னுடைய கார் இன்று ஒரு லட்சம் 'மைல்கல்' கடந்திருக்கிறது, 500 என்ற மைல்கல் கடந்த பப்பு அம்மாவிற்கு லட்சம் மைல்கல் கண்ட சிறப்பு மிக்க மகிழுந்து(?) ஓனரின் வாழ்த்துக்கள்.