Friday, February 26, 2010

காலினை தீ சுடினும் ...

காலினை தீ சுடினும் ...

ரயிலில் ஏறி எங்கோ போய் விட்டு
நினைவினில் விழித்தெழுகையில்
தீராத் தேடல்
காணாமல் போன செருப்பு
திகைப்பு மீண்டெழுந்து
காலினை தீ சுடினும்
தொடர்ந்து நடை
யாரோவான கண்ணம்மாவின் கண்கள்
கண்டது குளிர்ந்தது அகம்
கனவுலகம் சென்று மிதந்து
கண்ணம்மாவின் கண்ணில் முத்தமிட்டு
உதட்டுக்கு வருகையில்
கண்ணம்மாவில் கணவன்
கட்டணக் கழிவறையிலிருந்து வெளியேறி
டேய் பேமானி என் பொண்டாட்டிய
ஏண்டா பாக்கிற
கனவுகள் கண்ணம்மாவின் உதட்டில்
கணவனின் ஈரச்செருப்பு
கண்ணத்தில் பட்டவுடன்
காணாமல் போன செருப்பு
ஞாபகம் தானாய் விழித்தெழும் நனவுகள்

Thursday, February 11, 2010

சிந்தனைக்கவுஜ

அதுல அப்படி சொல்லிருக்கு
இதுல இப்படி சொல்லிருக்கு
அதுல சிந்திக்க சொல்லிருக்க
அதுல லெப்ட்ல சிந்திக்க சொல்லிருக்கு
இதுல ரைட்ல சிந்திக்க சொல்லிருக்கு
அதுல சிந்திப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கு
இதுல சிந்திக்காட்டி தண்டனை உறுதியாக்கப்பட்டிருக்கு
அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு
அதுல தடைசெய்யப்பட்டிருக்கு
இதுல தடைசெய்யப்பட்டது சிந்திந்தால்
இதுல இந்த மாதிரி தண்டனை உறுதி
இதுல அதுல புரிந்து சிந்தனை செய்வது சிந்தனை
இதுல அதுல தாண்டி சிந்திந்தால் அது எதுல.


Sunday, February 7, 2010

அசலும் அரங்கபெருமாளும்.

அரங்கப்பெருமாள் said...
விஜய் படம்,அஜித் படம் பார்க்காதீங்கண்ணே. அதெல்லாம் பார்த்தா இப்படி எழுதத் தோணும். பதிவு போட எதுவும் கிடக்கலன்னா பார்க்கலாம்ண்ணே....

கு.ஜ.மு.க: தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்

February 4, 2010 6:14 PM

பிகு: அசல் படம் பார்த்தாச்சு.

இனிமேல் குடுகுடுப்பை சோழன் என்ற பட்டத்தையோ , டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பட்டத்தையோ பதிவர் பெயரிலோ,பட்டப்பெயரிலோ நான் பயன்படுத்தப்போவதில்லை.

இனி இன்றைய பதிவு:
டெக்ஸாஸ் கொண்ட சோழன் வருகிறார் பராக்,பராக், மூவேந்தரையும் கட்டியாண்ட குடுகுடுப்பை சோழன் வாழ்க
சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங்.

டெக்ஸாஸ் கண்ட சோழன் வாழ்க, குண்டான் சோறும் குறும்பாடும் சாப்பிடும் தானைத்தலைவர் குடுகுடுப்பை சோழன் வாழ்க
.................................
......................................

பதிவர்
குடுகுடுப்பை

Friday, February 5, 2010

பம்பரம் விளையாடுவது எப்படி

முகு: எனக்கு பம்பரம் விளையாடத் தெரியும், ஆனால் நான் பம்பர விளையாட்டில் கரைகண்டவன் இல்லை, எனக்குத் தெரிந்த பம்பர விளையாட்டு ரகசியங்களை உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் தரும் ஆதரவைத் தொடர்ந்து, கில்லிதாண்டு,பேபந்து, சாபூதிரி போன்ற விளையாட்டு ரகசியங்களும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

பம்பரம் சுற்றும் முறைகள் எனக்குத் தெரிந்தவை மூன்று.

மூன்றுக்கு பொதுவான விதிகள்.
1. மரக்கட்டையால் செய்யப்பட்ட பம்பரம், ஒரு பகுதியில் சுற்றும் வகையில் ஆணி அடித்திருக்க வேண்டும்.
2. பம்பரம் சுழற்றத் தேவையான கயிறு.

மேலே உள்ள இரண்டையும் வைத்து, பம்பரத்தின் சுற்றி கயிறு சுற்றத் தெரிந்திருக்கவேண்டும்.

முதல்முறை: இழுப்பு

பம்பரம் கற்றுக்கொள்ளும் முதல் தலைமுறையினருக்கான எளிய வழி, பம்பரக்கயிறு சுற்றியபின், பம்பரத்தை நேராக கையில் பிடித்து, பம்பரக்கயிறின் ஒருமுனையை கட்டைவிரலுக்கும், தொடுவிரலுக்கும் நடுவில் வைத்துக்கொள்ளவேண்டும், கீழே குனிந்த நிலையில் நின்று, பம்பரம் உள்ள கையை முடிந்த அளவு முன்பக்கம் வேகமாக கொண்டு சென்று அதே வேகத்தில் கையை பின்பக்கம் கொண்டுவரவேண்டும், பின்பக்கம் கையை இழுக்கும்போது, பம்பரக் கயிற்றை மட்டும் கையில் வைத்துக்கொள்ளவேண்டும், பம்பரம் தரையில் பட்டு , கயிற்றின் மூலம் கிடைத்த விசையால் சுற்றும்.

இரண்டாம் முறை: சாட்டை

தோலுக்கு மேலே ஆனால் உடலுக்கு வேளியே, கையை இழுத்து பம்பரம் உள்ள கையை சுழற்றவேண்டும், இந்த முறையில் பம்பரத்திற்கு கொஞ்சம் கூடுதல் விசை கிடைக்கும், கீழே விழுந்த பம்பரம் சற்று கூடுதல் நேரம் சுற்றும்.

மூன்றாம் முறை: குத்து

தலைக்கு மேலே பம்பரம் உள்ள கையை கொண்டு சென்று, முடிந்த அளவு வேகமாக பம்பரத்தை விடவேண்டும், இதன் வேகம் அதிகமாதலால், பம்பரம் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற சத்தத்துடன் சுத்த ஆரம்பிக்கும், பம்பரப் போட்டியில் எதிரியின் பம்பரத்தில் ஆக்கூறு அடித்து உடைக்க குத்து முறை மட்டுமே உதவும். சாட்டை, இழுப்பு முறைகள் உதவாது. குத்து முறை பம்பரம் விளையாடும் போது வேடிக்கை பார்ப்பவர்கள் மேல் காயப்படவும் வாய்ப்பு அதிகம்.

பம்பரம் சரியாக விடப்படாத நிலையில், ஊர் ஊராக பம்பராக சுற்றும் வைகோவின் பம்பரம் போல் மொட்டைக்கட்டை அடிக்க வாய்ப்பு அதிகம். அதனால் பம்பர போட்டிகளில் கலந்து கொள்ளுமுன் திறமையை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.உணர்ச்சி வசப்பட்டால் பம்பரமும் கயிறும் வழுக்குமாதலால் ஒழுங்காக பம்பரம் சுற்றமுடியாது.

Thursday, February 4, 2010

தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்

நுனிப்பாதம் கொண்டு பூமி தொட்டு
கிராபிக்ஸ் உதவியோடு மிதந்தாடியோடி
டூப்பின் உதவியுடன் மரம்தாவி,மலைதாவி
டிரெய்ன் அருவி குருவி எல்லாம் தாவி
நளினமான நடிகையின் அரையாடை சுற்றிய
இடையை நுகர்ந்து நடன இயக்குனரின்
உதவியுடன் குழைந்து சுற்றிவந்து ஆடி
நடிகையின் அப்பா பணக்கார வில்லன் நடிகருடன்
மோதி துணை நடிகர் அடிவாங்கி
பூனையுமாகிப்போனதால் நீ சிங்கமானதை
ரசிக்க என் சொந்த நிலமதில் விளைந்த நெல்லை
விற்று உன் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்ய
காவடி எடுத்து பாலாபிசேகம் முடிந்து நூறு ரூபாய்
அதிகம் கொடுத்து தியேட்டருக்குள்ளே படம்
பார்க்காமலேயே விசிலடித்து கைதட்டி ரசித்து
வீடு வந்து விகடன் படித்தேன் படம் பாடாவதி
தோல்வி உறுதி என்று படித்து வெற்றியாக்க
மிச்சமிருந்தை நெல்லையும் விற்று ஐம்பதாவது
முறையாக படத்தை பார்த்த பின் என்னை நீ அறிக்கை
மூலம் பாராட்டியதில் அகம் மகிழ்ந்து இருக்கையில்
அடுத்தபடம் பற்றிய உன் அறிக்கை
படமும் வந்து வெற்றிப்படமும் ஆகி ஆக்கப்பட்டு
நீயும் சொல்லாமல் அமெரிக்காவிற்கு ஓய்வெடுக்கப்போக
இப்போது வந்த தமிழ்ப்படமும் பார்த்து
சிரித்து ரசிக்க பக்குவப்பட்டது என் மனசு
மீண்டும் உன்னிடமிருந்து அறிக்கை அமிஞ்சிக்கரையில்
இருந்து என் ரசிகர்கள் என் உயிர் மயிரென்று
அடுத்தப்படம் வருவது தெரிகிறது
நீயும் நுனிப்பாதத்தில் ஆரம்பிக்கப்போகிறாய்
நானும் நெல் விற்பனையில் ஆரம்பிக்கப்போகிறேன்.
நீ வணங்கும் இறைவனிடன்
நான் வேண்டுவதெல்லாம் ஒரு டப்பா படம் கொடுத்து
என்னை ஐம்பது முறை பார்க்க வைத்துவிடாதே.

அசல் இங்கே

பிகு: சனிக்கிழமை அசல் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன்.

Wednesday, February 3, 2010

வில்லன் வீட்டு பிரியாணி மற்றும் வடை.

இந்தப்பதிவு இடுவதா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது, ஆனால் விருந்து கொடுத்து சிறப்பித்தவர்களை பாராட்டினால்தானே அடுத்தடுத்து விருந்து கிடைக்கும் என்ற சுயநலத்திலும், பிரியாணி செரித்துவிட்டமையாலும் , வார இறுதி நெருங்கிவிட்டமையால் அடுத்த விருந்தை எதிர் நோக்கி அவசரமாக இந்த சிறு பதிவு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய விருந்திற்கு அழைத்திருந்தார் , நசரேயனின் மனைவியின் உயிர் நண்பரின் கணவரான வில்லன் என்ற பின்னூட்டர். யார் நான் வெஜ் சாப்பிடக் கூப்பிட்டாலும் தவறாது செல்வது என்னுடைய வழக்கம். வில்லன் சர்ச்சுக்கு போய்விட்டு மதியம் பணிரெண்டு மணிக்குள் வீடு திரும்புவேன், பணிரெண்டு மணிக்கு மேல் வரவும் என்று சொல்லிவிட்டார், எங்கே காலை சாப்பாட்டுக்கும் வந்துவிடுவாரோ என்ற பயமாகவும் இருக்கலாம். வீட்டில் இருந்து கிளம்பி ஜிபிஸ் சொல்லியபடி கேட்டதில்,அது டோல் ரோடு வழியாக செல்லச்சொல்லிவிட்டது, இரண்டு டாலர் டோல் கொடுத்தேன், பிரியாணி இரண்டு டாலருக்கு வொர்த்தா இருக்குமா இல்லை , மட்டன் புளிசாதமாக இருக்குமா என்று வயிற்றில் புளியைக்கரைத்தது.ஒரு வழியாக என்னுடைய பென்ஸ் காரில் அவருடைய வீட்டை அடைந்தேன்.

குழந்தை இருக்கும் வீட்டுக்கு வெறும் கையை வீசிக்கொண்டு செல்லக்கூடாது என்பதால், கோள்ஸுக்கு சென்று 99% டிஸ்கவுண்டில் அவருடைய மகளுக்கு ஒரு உடையையும் மரியாதை நிமித்தம் வாங்கி சென்றேன். வீட்டுக்குள் நுழைந்தால் பிரியாணி வாசமே வரவில்லை, எதற்கும் ஜாக்கிரதையாக வாங்கிச்சென்ற டிஸ்கவுண்ட் துணியை கொடுக்காமல் பத்திரமாக நானே வைத்துக்கொண்டேன், மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது, சிக்கன் கிரேவியுடன். சும்மா சொல்லக்கூடாது பிரியாணி சுவை அலாதியாக இருந்தது, சிக்கன் குருமாவும் அருமை. ஐந்து அல்லது ஆறு ரவுண்ட் வெட்டினேன். வில்லன் பிரியாணியில் இருந்த கரியை சாப்பிடக்கூடாது என்று வில்லி கட்டளை இட்டபடி இருந்தார். அவருக்கு கொலஸ்டிரால் , கொழுப்பெல்லாம் அதிகமாகிவிடும் என்று காரணம் சொன்னார். பாவம் மனுசன் சாப்பிடாமல் ரொம்ப சோப்ளாங்கியா இருக்கார். வெள்ளாட்டுக்கறி, சிக்கனை விட குறைந்த அளவு கொலஸ்டிராலும், கொழுப்பும் உள்ளது பரவாயில்லை அனுமதியுங்கள் என்றேன். வில்லன் முகத்தில் ஒரு பளபளப்பு ஏற்பட்டது புரிந்தது.

பிரியாணி நன்றாக இருந்ததால் டிஸ்கவுண்ட் துணியையும் வில்லனிடம் கொடுத்துவிட்டேன். பின்னர் சற்றே இளைப்பாறிவிட்டு நான்கு மணியளவில் பருப்பு வடை செய்து தந்தார்கள், சுவை கூடுதலாக இருந்ததால் பத்து வடை சாப்பிட்டேன். மகளுக்கு தமிழ் வகுப்பு இருந்ததால் 4:30 மணியளவில் கிளம்பினேன், மறக்கமால் மிச்சமிருந்த பிரியாணியையும் வடையும் கேட்டு வாங்கி வந்துவிட்டேன்.

இப்போது வில்லனுக்கு என்னிடம் இருக்கும் ஒரே கேள்வி இந்த விருந்து இந்த வாரம் மட்டும்தானா இல்லை வாரா வாரம் இப்படி பிரியாணி போடுவாரா என்பதுதான்? இரண்டு முறை மட்டுமே பார்த்திருப்பதால் நேரடியாக கேட்க கூச்சமாக இருந்தது அதுதான் இப்படி பதிவின் மூலம் கேட்கிறேன். நீங்கள் வீட்டுக்கு அழைக்கவேண்டாம் பிரியாணி செய்து எங்கள் வீட்டு வாசலில் வாரம் ஒருமுறை பார்சலாக போட்டால் கூட போதும்.

பிகு: நசரேயனின் போட்டோ வில்லியின் தயவில் பார்த்தேன். தளபதியின் படம் விரைவில் வலையேற்றப்படலாம்.

Monday, February 1, 2010

கல்லூரி சாலையும் கரண்ட் ரோடும், தி.கு.ஜ.மு.கவும்

பொறியியல் கல்லூரி முதலாமாண்டு படித்தபோது, சிவில் லேப் இருக்கும், சிவில் லேப்பிற்கு சீனியர் ஆசிரியர் ஒரு மலையாளி, அவருக்கு அஸிஸ்டண்ட் மதுரையைச் சேர்ந்த தமிழ்பேசும் பெண். ஒரு நாள் லேப் வகுப்பில் மணி என்ற ஒரு மாணவனைப் பார்த்து, மலையாள ஆசிரியர் உன் பேரு மணியா, மாணியா,? கேரளாவில் மாணி என்று ஒரு முன்னால் அமைச்சர் கூட உண்டு. என்று மாணி மாணி என்று கூவிக்கொண்டிருந்தார். மதுரை டீச்சரும், சார் தமிழ்நாட்டில் மாணின்னெல்லாம் பேர் வைக்கமாட்டாங்க சார். உடனே நம் மலையாளி ஏன் வைக்காது மாணி நல்ல பெயர்தானே என்று நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்தார். முதலாண்டு ஆகையால் லேப்பில் சிரிக்கமுடியாமல் ஹாஸ்டல் சென்று வெகு நேரம் சிரித்தோம்.
-----------------------------------------------------
டேய் வாடா போய் பேஸ்(B for F) வாஸ் பண்ணிட்டு வருவோம்.

பேஸ்(Base) வாஸ் பண்ணனும்னா கக்கூஸ் போகனும், ஃபேஸ்(Face) வாஷ் பண்ணனும்னா வாஷ் பேசின் உள்ள பாத்ரூமுக்கு போகனும், நீ பேஸ்(Base) வாஷ் பண்ண, வாஷ் பேசினுக்கு கூப்புடுற.

டேய் உனக்கு எப்பயும் கிண்டல்தான் நான் பேஸ்(B for F) வாஸ் பண்ணதாண்டா கூப்பிட்டேன். பேஸ்(Base) வாஸ் பண்ண கும்பலா எப்படிடா?

நானும் அதத்தாண்டா சொல்றேன் பேஸ்(Base) வாஷ் பண்ணவெல்லாம் கும்பலா போகமுடியாது, வாஷ் பேசின்லயும் பேஸ்(Base) வாஷ் பண்ணமுடியாது. நீ தனியா கக்கூஸ் போய் பேஸ்(Base) வாஷ் பண்ணிட்டு வாடா?

காலங்கள் கடந்து பேஸ்(Base) வாஷ் பண்ண மறந்து ,துடைக்கப் பழகியபின் மீண்டும் கிடைத்தான் பேஸ் வாஷ் நண்பன்.

”மாப்பிள்ளை பேஸ்புக்((F)Basebook) இல்லாட்டி உன்னைக்கண்டுபிடிச்சிருக்க மாண்டேண்டா.”

--------------------------------------------------

மதிப்பிற்குறிய வானம்பாடிகள் உட்பட பலரும் கு.ஜ.மு.க வில் ஒரு பதவி கேட்டு தினமும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னூட்டமிட்ட தமிழ் பிளாக்கர்களை நான் மறந்துவிட மாட்டேன், சமீப காலமாக நான் எழுதிக்கொண்டிருக்கும் கொண்டியாரகள்ளிக்கு உங்களது ஆதரவு தொடர்ந்து தேவைப்படும் இந்த நிலையில், என் கடமையை நான் செய்யவேண்டியுள்ளது. அதற்காக புதிதாக திராவிட குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்றக் கழகம் என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளேன்.

வானம்பாடிகள் அய்யா அவர்களின் தலையிலிருந்தே அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்ற முடிவுக்கும் ஓரளவுக்கு வந்துள்ளேன், அவர் இளைஞரணிக்கு ஏற்றவராகத் தெரியவில்லை, அவரை அகில உலக தி.கு.ஜ.மு.க மாணவரனி தலைவராக பொறுப்பு அளிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. இலக்கிய அணிக்கு முகிலனும், கள்ளக்காதல் அணித்தலைவராக நசரேயன் ஒரு மனதாகத்தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.

பொதுச்செயலாளராக குடுகுடுப்பையாகிய நானே ஜனநாயக ரீதியாக நீடிக்க விருப்பப்படுகிறேன். ஆனால் ஒருவரே இரண்டு பெரும் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருக்க முடியுமா என சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் சட்ட ஆராய்ச்சியின் முடிவு தெரிந்தபின் மற்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.