Monday, April 26, 2010

கொண்டியார(ன்)கள்ளி இறுதி பாகம்


ரவி விபத்தில் இறந்த செய்திகேட்டு இரண்டு குழந்தைகளுடன் தவித்த ரவியின் மனைவியையும், கிறுக்கனாய்போன சந்திரனின் மனைவியையும் கொண்டியாரகள்ளி தனக்கே உரித்தான பாணியில் விளாசினார்

“ஏண்டி குச்சிகாரி முண்டைகளா, வீட்டுக்கு வந்து பெரியவன தூக்கிபோட்டு முழுங்கினிய, அடுத்தவன கிறுக்கனாக்குனிய இன்னம் இங்கே எதுக்குடி இருக்குறிய தட்டுவாணி செறுக்கியளா கெளம்புங்கடி”

இவ்வளவு பேச்சையும் பொறுக்கமுடியாமல் தட்டிக்கேட்க வந்த ஊர்பெரிசுகள் குச்சிகாரன்கள் ஆக்கப்பட்டதில் அவர்களும் ஒதுங்க , ரவியின் மனைவியும் , சந்திரனின் மனைவியும் ஆளை விட்டால் போதுமென்று ஊரை விட்டே சென்றுவிட்டனர்.

சந்திரன் சாப்பிடுவதை மட்டும் சரியாக செய்தான், மற்ற எந்த காரியத்திலும் அவன் சராசரி மனிதனாக தெரியவில்லை. கொண்டியாரகள்ளியும் வீட்டைப்பிடித்த சனியன்கள் தொலைந்ததால் என்றாவது ஒருநாள் சரியாகும் என்று இருந்தால்.

திருப்பதியின் மேல் குடும்ப பாரம் விழுந்தது, அண்ணன்களின் இந்த நிலையினால் சரிந்த குடும்பத்தை அவனும் தன்னுடைய போக்கில் சம்பாதித்து முன்னுக்கு கொண்டு வந்தான். திடீரென ஒருநாள் வீட்டிற்கு போலிஸ்காரர்கள் வந்தார்கள்.

“டேய் இந்த வண்டிமாடு எங்கடா வாங்கின என்று ”பலமாக தட்டியதில் உண்மையை கக்கினான் , இதுவரை ஐம்பது சோடி மாடுகள் களவாடியிருப்பதாக சொன்னான், இந்த சோடி நல்லா பலமா இருந்துச்சு அதான் நானே வெச்சிக்கலாமின்னு வீட்டுக்கு ஓட்டிட்டு வந்தேன் என்றான்.

ஒருவழியாக மிச்சமிருந்த சொத்துக்களையும் விற்று மாட்டுக்காரர்களுக்கு கொடுக்கவேண்டிய காசை அடைத்தனர். திருப்பதியும் திருட்டுக்கேஸில் சிறை சென்றான்.

”சம்பாதிச்சு போட்டவங்க எல்லாம் ஒன்னுமன்னா போயித்தாங்க , நீ இப்படியே குந்தி இருந்தா யாரு சோறு போடுறது , யாரு அந்த புள்ளைய ஒருத்தன் கிட்ட புடிச்சிக்கொடுக்கிறது, போய் எப்படியாவது சம்பாதிச்சினு வாய்யா ” என்று கொண்டியாரனிடம் கத்தினால் கள்ளி.

“நான் இருக்கிறதும் உனக்குப்பொறுக்கல என்ற படியே”

இப்போது பத்தினி செத்துக்கிடந்தாள் ஒரு XXXயும், எழவுக்கு வரவில்லை, உத்திரத்தில் தொங்கிய கொண்டியாரன் உட்பட.

முற்றும்.

பணம் எப்படியும் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியை மட்டுமே வளர்க்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து எழுத நினைத்த தொடர். எனக்கு தற்போது இருக்கும் வேலைப்பளுவில் தொடரை தொடர்வது சிரமம் என்று தோன்றியதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Tuesday, April 20, 2010

Boolean புரோகிராமர்

public class சாப்பாட்டுக்கடை {
public static சாப்பாடு வாங்குசாப்பாடு(boolean அரிசி,boolean கூட்டு, boolean பொறியல்,boolean எடுப்பு,boolean தயிர்,boolean அளவு,boolean வெஜ்){
return சாப்பாடு;
}

}

--------------

public class வாடிக்கையாளர்{
public static void main(args[] a){
சாப்பாடு மதியசாப்பாடு = சாப்பாட்டுக்கடை.வாங்குசாப்பாடு(false,true,false,true,true,true);
}
}

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

1.

பலகாரம் தின்றபின்
செரிப்பதாய் கனவுகளுக்கிடையே
பாயாசத்தில் முங்கி நீந்துகையில்
காற்றுக் குமிழிகளாய்
வெளியேறும் வறுத்த
கோழியின் வாசம்
முழுதாய் தின்றபின்
மெல்ல எழுந்து கைகழுவும் நேரம்
பாக்கெட் சாக்லேட் உந்தி எழ
சாக்லேட் பேப்பர் குப்பையிட
காலிடறி வறுகடலை கண்டதும்
குடலை அடைந்ததும்
குளக்கரைக்கு ஓடித்திரும்புகையில்...
கையில் கொக்கும் மீனுமாய்!

2.

தினம் சிக்கன் வாங்க அலுப்பு
பதப்பட்ட சிக்கன் கால்கள்
சுடவைத்து ஆறும் முன்
வாயில் .

மனிதர்களை கண்டிக்கலாம்

மனிதர்களை கண்டிக்கலாம்

Friday, April 2, 2010

நடராஜ நிலை நாரைபோல்

குடித்த மணிக்கணக்கில்
நடராஜநிலை நாரைபோல்
பானங்கள் பருகியபடி
ஆடிக்கொண்டிருக்கும் பாலா

இல்லாத கழிப்பிடத்தில்
ஈர்ப்பியல்பில்லாதியங்கி
வழியெதுவும் தெரியாது
விரைந்து கொண்டிருக்கும் உச்சா..

தன்போக்கில் திரும்புகையில்
தன் வேட்டி தொலைந்ததெங்கே?

சுற்றிவளைத்துச் சொடுக்கும் வினா
சீற்றமிறக்கி சிரித்தபடி மனைவியை
சுற்றிச்செல்லும் கணவன் குடித்த
போதை இறங்கும் சுடும் சொல் கேட்டு..!