Wednesday, May 30, 2012

செஸ் என்ற பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளையாட்டு.



விஸ்வநாதன் ஆனந்த என்ற பார்ப்பனர் செஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதற்கு ,பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் வாழ்த்து தெரிவிக்கும்போது நாம் அந்த விளையாட்டில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சி பற்றி விளக்குவது கடமையாகிறது.செஸ் என்ற விளையாட்டு பார்பனர் கண்டுபிடித்த சூழ்ச்சி விளையாட்டு என்பது மாஹாபாரதம் என்ற பாப்பன பண்டார கதையில் வரும் சகுனி என்ற நபரின் மூலம் நாமறிவோம்.


இந்த பார்ப்பானின் விளையாட்டில் உள்ள சூழ்ச்சியை இப்போது விளங்கிக்கொள்வோம். முதலில் 64 கட்டம் என்று ஏதோ ஜாதகத்தில் உள்ள கட்டம் போன்று இந்து என்ற பார்ப்பன மதத்தின் முட்டாள்தனத்தை மக்கள் மீது இந்த பண்டாரங்கள் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். கறுப்பு , வெள்ளைக்காய்களில் , வெள்ளைக்காயுடன் உள்ளவனே முதலில் ஆடமுடியும் என்ற நிறவெறியுடன் இருக்கும் இந்த விளையாட்டில் முதல் பார்ப்பன சூழ்ச்சி, அதில் இருக்கும் சிப்பாய் காய்கள் நேராகத்தான் நகர்த்தமுடியும் என்ற விதி வைத்துவிட்டு , எதிரியை தாக்கும்போது மட்டும் குறுக்காகவே சாய்ப்பார்கள், இதிலிருந்து பார்ப்பனர்களின் குறுக்கு புத்தியை அறிந்துகொள்ளலாம், மேலும் யானை, குதிரை போன்ற காய்களை முதல் வரிசையில் வைத்திருந்தாலும் ஓரங்கட்டி வைத்திருப்பார்கள், இதிலிருந்து இந்த பார்ப்பன பண்டாரங்கள் விலங்குகளையும் ஆடு, மாடு, குதிரை,யானை வளர்ப்பவர்களை ஓரங்கட்டி வைக்க நினைத்த அவர்களின் மன ஓட்டத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

பிஷப் என்ற காயை ராஜா, ராணி பக்கத்தில் வைத்திருந்தாலும் தன் குல புத்தியான குறுக்கு புத்தியுடன் அவர்களையும் தங்களுக்கு தேவை எனும்போது குறுக்காக செலுத்து பலியிட்டு விடுவார்கள், அதிலும் அந்தக்குதிரை அசுவ மேத யாகத்தில் ராணியுடன் கலவி கொண்ட போதையுடன் இரண்டு அடி நேராக செல்லுமாம், ஆனால் எதிரியை தாக்கும்போது மட்டும் அதே பார்ப்பன குறுக்குபுத்தியுடன் நாய் வாலை நிமிர்த்தவா முடியும்.

யானை நேராக செல்கிறதே என நினைக்கலாம், பெரும்பாலும் அது பலியிடப்படவே பயன்படும், ராணி நேராகவும் செல்லலாம் ,குறுக்காகவும் செல்லலாம் என்று தங்களின் குறுக்கு புத்தியை இந்த பண்டாரங்கள் அங்கேயும் தினித்தன.

கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் ராஜா ஒரு கட்டம்தான் நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான், ஏனென்றால் ராஜா தலையில் சிலுவை இருக்கும், சிறுபாண்மையினருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதுதானே இந்தக்கூட்டத்தின் வேலை. நாம் மட்டும் எதிர்க்காவிட்டால் இந்நேரம் ராஜா தலையில் உள்ள சிலுவையை அகற்றி கொண்டை போட்டிருப்பார்கள்.

நாம் விடமாட்டோம் ராஜா தலையில் சிலுவையுடனே இருப்பார், மேலும் ராஜா எங்கும் எப்போதும் செல்லலாம் என்று விதியை மாற்றியமைத்து மதச்சார்பின்மை காப்போம்.

பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.