Wednesday, April 15, 2009

பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

பாகம் 1

வீட்டுக்காரம்மா: இந்த மனுசனுக்கு வாக்கப்பட்டு காலம் பூரா பேச்சு வாங்கியே என் ஆயிசு ஓடிருச்சு.

முருகன்: சரி அத்தோட விடுங்க..
-----


விநாயகம்: பட்டைகிட்ட செங்கல்லுக்கு பேசிட்டேன், நீயும் முருகனுமா போய் ஏத்திட்டு வாங்க.

பரமன்: முருகன் சின்னப்பைய அவனும் நானும் போதுமா, வைத்திய வேணும்னா கூப்புட்டுக்கலாமா?

முருகன்: வேண்டாம்பா எனக்கு 15 வயசு ஆயிடுச்சு, நான் செங்கல் வண்டில ஏத்துறேன். நீயும் வைத்தியும் வந்தா அப்புரம் உங்க ரெண்டு பேரையும் வண்டில ஏத்தனும்.

--

செங்கல் ஏற்றிக்கொண்டு வீட்டில் வந்து சேர்ந்தனர்.

விநாயகம்: என்னய்யா இது செங்கல்லு, உடைஞ்ச கல்லா இருக்கு, பாத்து வாங்கறதில்லை, அவந்தான் சின்னப்பையன் ஒன்னும் தெரியாது உனக்கு எங்க போச்சு அறிவு.

பரமன்: அவன் ஏத்திக்க சொன்னத தான் நாங்க ஏத்துனோம் ,நீ இதத்தான் வாங்கினேன்னு சொன்னான்

--
விநாயகம்: யோவ் பட்டை உங்கிட்ட வீடு கட்ட செங்கல் கேட்டனா இல்ல பல்லு விளக்க செங்கல் கேட்டேனா? நீ அனுப்பிருக்க செங்கல்லுல பல்லுதான் விளக்கமுடியும்.

பட்டை: இல்லடா தம்பி, லேசா கார்னர்தானடா உடைஞ்சிருக்கும். அத வெச்சு நல்லா வீடு கட்டலாம்டா நல்லா சுட்ட செங்கல்லுடா?

விநாயகம்: நீயெல்லாம் ஏன்யா பெரிய மனுசன்னு வேட்டிய கட்டிட்டு அலையுற? மரியாதையா காச திருப்பிக்கொடுத்துட்டு உன் கல்லை வந்து ஏத்திட்டு போயிரு, அதுல பல்லு விளக்குவியோ வீடு கட்டுவியோ உன் இஷ்டம். காசு திருப்பிக்கொடுக்கலைன்னா நடக்கிறதே வேற.

பட்டை: என்னடா இது பெரிய மனுசன்னு பாக்காம மரியாதை கெட்டத்தனமா பேசுற?

விநாயகம் : நாலு பேர அழைச்சிட்டு வா,நீ வித்த செங்கல்ல காட்டுவோம்.

பட்டை: இந்தாப்பா உன்காசு, நான் நாலு இடத்துல வட்டிக்கு விட்டு பொழப்பு நடத்துறவன் என் பொழப்புல மண்ணல்லி போட்டுறதா.

விநாயகம்: சரி சரி மறக்காம அந்த செம்மண்ண திருப்பி ஏத்திட்டு போயிரு.

----

விநாயகம்: யப்பா சிப்பினாம்பட்டில வேப்பமரம் மலிவா கிடைச்சது, கணேசன் கிட்ட கடன் வாங்கி அந்த மரத்தை வாங்கிட்டேன். நீ முத்தையன் ஆசாரிய அழைச்சிட்டு போய் அத உத்திரத்துக்கும் ஓடு போடறதுக்கு சட்டமும் மத்த வேலைக்குமா கரம்பக்குடி மில்லுல அறுத்து எடுத்துட்டு வாங்க. லாரிக்கு கரம்பக்குடில சொல்லிருக்கேன்.

பரமன்: சரிடா நான் பாத்துக்கறேன்.

--

புதிய இடத்தில் செங்கல் வாங்கி, சிமெண்ட் வாங்கி வீடு கட்டுதல் நல்ல முன்னேற்றம் அடைந்த நிலையில்.

குமரன்: டேய் எவண்டா இங்க கொத்தன், என் பொண்டாண்டி இங்கே சித்தாளா வேலை பாத்தா நீ மரியாதையா பேசாம முறைகேடா பேசிட்டிருக்க. எப்ப பாத்தாலும் தூக்கு இறக்குன்னு பேசிட்டிருக்க. அவள திமிராட உனக்கு பிழைக்க வந்த நாயே.

சித்தாள்: இந்தாய்யா குடிச்சிட்டு சும்மா பேசமா அந்தப்பக்கம் போ.

கொத்தனார்: யோவ் இங்க சாந்து சட்டிய தூக்கு, இறக்குன்னுதான்யா சொல்லியாகனும், அப்புறம் எப்படிய்யா சொல்றது? பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிச்சிட்டு வெட்டியா குடிச்சிக்கிட்டு வீண் வம்புக்கு ஏன்யா அலையுற, வேணும்னா நீயும் வந்து மம்மட்டி ஆளா வேலையப்பாரு.

குமரன்: யாரப்பாத்து என்ன பேசுற ,அதுவும் என் ஊர்ல வந்து, டேய் விநாயகம் இந்த நாயை அடிச்சி வெரட்டு, இல்லன்னா நீ எப்படி வீடு கட்டறேன்னு பாக்கிறேன்.

கொத்தனார்: யப்பா விநாயகம் இவன் தொல்லை தாங்க முடியல இவன் என் பேரக்கெடுத்துருவான், நீ வேற ஆள் வெச்சு வீடக்கட்டிக்கப்பா, உன் ஊரு பக்கமே நான் இனிமே தலை வெச்சு படுக்கமாட்டேன்.


சித்தாள்: குடிக்குறதும் இல்லாம என் பொழப்ப வேற கெடுத்துப்புட்டான் இந்தப்படுபாவி.

விநாயகம்: என்னடா ஓடு போடவேண்டிய நேரம் வந்தாச்சு, கொத்தனார் வேற விட்டுட்டு போயிட்டார், இப்ப என்ன பண்றது,சான் ஏறுனா முழம் சறுக்குது.

முருகன்: நம்மூரு அம்பேத்கார் இப்ப கொத்தனார் வேலை பாக்கிறாப்ல நல்லாதான் பண்றாரு அவர வெச்சு வேலையை முடிப்போம்.

பரமன்: கீழ் சாதிக்காரப்பயல வெச்சு வீடு கட்ட சொல்லுறியா நீ?

விநாயகம்: பெரிசா வந்துட்ட நீ வேற கீழ்சாதி மேல்சாதின்னு,குடிக்கறப்ப மட்டும்தான் அது உனக்கு தெரியாது, சரிடா தம்பி நீ அம்பேத்கார கூட்டிட்டு வா நம்ம வேலைய ஆரம்பிப்போம்..

----------
முத்தையன் ஆசாரி: அந்த கொத்தனார் சைடு சுவர ரொம்ப பெரிசா கட்டிட்டாருப்பா, அத இடிக்கனும் உத்திரத்திலேந்து குத்துச்சட்டம் இவ்வளவு உயரந்தான் கணக்கு ஆனா சுவரு உயரமா இருக்கு, இடிக்கனும்.

அம்பேத்கார்: இல்லண்ணே சுவர் இவ்ளோ உயரம் இருந்தாதான் ஓட்டு வீட்டுக்கு நல்லது, நீங்க குத்துச்சட்டம் பெரிசா பண்ணிருக்கனும் இல்லண்ணா வீடு பந்தல் மாதிரி ஆயிரும் அப்புரம் ஒழுகும்.

முத்தையன் ஆசாரி: தம்பி நீ தொழிலுக்கு புதுசு சின்னப்பய ,நான் பல காலமா தொழில்ல இருக்கேன், எனக்கு நீ புத்திமதி சொல்லவேண்டாம்.

அம்பேத்கார்:உங்களுக்கும் இதுதானே முதல் வீடு கட்டுற அனுபவம் , நான் நிறைய கவர்மெண்ட் குவாட்டர்ஸ்,டவுண்ல நிறைய வீட்ல வேல பாத்திருக்கேன். நீங்க பெஞ்சு,நாற்காலி நல்லா செய்வீரூ, ஆனா வீட்டு அனுபவம் உங்களுக்கு பத்தாது.

விநாயகம்: யோவ் என்னய்யா ஆசாரி கூட்டிட்டு வந்திருக்க, இது வரைக்கும் வீடே கட்டினதில்லையாம், எனக்கும் இதுதான் முத வீடு அந்தாளுக்கும் இதுதான் முத வீடாம்.

பரமன்: என்ன என்னடா பண்ண சொல்றா சாராயக்கடைல பேமசா பேசிக்கிட்டாங்க அதான்.

அம்பேத்கார்: என்னாட விநாயகம் என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்க கூடாதா, சாதி பாத்துதானடா நீயும் என்னைக்கூப்புடல.

விநாயகம்: நீ வேறடா , நீ கொத்தனார் வேலை பாக்கிறத முருகன் சொல்லிதான் எனக்கு தெரியும், நீ டவுண்ல வேலை பாத்திட்டு அங்கேயே இருக்கே , எனக்கு தெரியாம போச்சுடா. இப்பவே செலவு தலைக்கு மேல ஆயிருச்சு.

அம்பேத்கார்: இதெல்லாம் ஒரு சிரமமாடா நாங்க படற சிரமத்தோட. விடுறா எல்லாம் நல்லா நடக்கும்.

----

ஒருவழியா ஓடு போடும் நாள் வந்தது..

முத்தையன் : என்ன மருமவனே அந்த சட்டத்தை நல்லா அடிச்சிட்டிங்களா?

சிவக்குமார்: அடிச்சிட்டேன் மாமா. ஆனா வெச்சு பாத்தா ஓடு ஒன்னுமேல ஒன்னு ஏறி வருது.

விநாயகம் : என்னய்யா சொல்ற உனக்கும் வீட்டு வேலை தெரியாதா?

சிவக்குமார்: தம்பி நான் கொல்ல ஆசாரி இரும்பு வேலை பாக்கிற ஆள், வேலை இல்லாம இருந்தேன் மாமா கூப்பிட்டாருன்னு வந்தேன்.

விநாயகம் : யோவ் உன் குடும்பத்துக்கு வேலை கொடுக்கவாய்யா நான் வீடு கட்டறேன். இப்ப என்னய்யா பண்றது. எல்லா சட்டத்தையும் பிரிச்சுதான் அடிக்கனுமா?

முத்தையன் : ஊரு நாட்டுல நடக்காததயா நான் பண்ணேன். சொந்தக்காரங்களுக்கு நாம செய்யலண்ணா வேற யாரு செய்யுறது.பிரிச்செல்லாம் அடிக்கவேணாம், ஓடு நெறுக்கு வாட்டில போட்டா ஒழுகாது, இப்படியே போட்டிருவோம்.

அம்பேத்கார்: ஓடு சரியா அந்த காடில பிட் ஆகலண்ணா, ஓட்டு மேல ஏறி நடந்த உடையும்னே.

முத்தையன் : அதெல்லாம் உடையாது, இப்ப பிரிச்சு அடிச்சா நிறைய சட்டம் வீணாப்பொயிரும், ஓடு போடுற வேலைய பாப்போம்.

---

ஒரு வழியாக வீடு கட்டி முடிச்சாச்சு கொத்தனார் அம்பேத்கார் நல்லமுறையில் வீட்டிற்குள், தளம் பூச்செல்லாம் பூசி முடித்தவுடன் அவரிடம் மெதுவாக சென்ற பரமன். தம்பி கிரஹப்பிரவேசம் முடிஞ்சதுக்கப்புறம் நீ வீட்டிக்குள்ள வரக்கூடாதென்றார்.

விநாயகம்: போய்யா உன் வேலையப்பாரு? நீ வாடா அம்பேத். இந்தாளுக்கு வேற பொழப்பு இல்லை, நீயே மதம் மாறி வந்தா உன்னோட உக்காந்து பாரின் சரக்கடிப்பான். இப்ப நம்ம போய் ஒரு 90 அடிச்சிட்டு வருவோம் வா.

அம்பேத்: இல்லடா நான் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடப்போறேன் எனக்கு வேண்டாம்.


ஒரு வழியாக நல்ல படியாக வீடு கட்டி விநாயகத்திற்கு கல்யாணமும் இனிமையாக விமரிசையாக நடந்தது, முருகனும் கல்யாணத்துக்கு வந்த சின்னப்பெண்களையெல்லாம் தனக்காக இப்போதே பெண் பார்த்து வைத்திருந்தான்.
----------------------------------

விநாயகம் மனைவி : ஏங்க இந்த வீடு சின்னதா இருக்கு எங்க அண்ணன் வீடு மாதிரி பெரிய வீடு கட்டி தனியா போயிரலாமா?

விநாயகம்:அம்பேத் நீதாண்டா என்னைக்காப்பாத்தனும்..

இப்போது இந்தக்கதையின் தலைப்பு மாறுகிறது : கல்யாணம் பண்ணிப்பார் வீட்டைக்கட்டிப்பார்.

உங்க பொன்னான கருத்தை சொல்லுங்க

Tuesday, April 14, 2009

வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

பரமசிவம் : என்னடா முருகா நாந்தான் என் காலத்தில வீடு கட்ட முடியல எங்கப்பன் கட்டுன பழைய வீட்டிலேயே காலத்த தள்ளிட்டேன், நீ இப்போ புதுசா ஒரு வீடு கட்டுடா கடைசி காலத்துல ஒரு நல்ல வீட்ல இருந்துட்டு போறேன்.

விநாயகம்: நீ சம்பாதிச்சு என்ன பண்ண எல்லாத்தையும் குடிச்சே அழிச்ச,இப்பவாச்சும் குடிக்க காசு கேட்காம வீடு கட்ட சொன்னியே அதுக்கு உனக்கு ஒரு பாட்டில் வாங்கி கொடுக்கலாம்பா.

பரமன்: நீங்க பாட்டில் வாங்கித்தருவியன்னுதான் நாங்க நாக்க தொங்க போட்டுட்டு அலையுரோம், நான் குடிக்கிறது எப்படின்னு எனக்குத்தெரியும் நீ உன் வேலையபாருடா.

விநாயகம்: சரி நான் வீடு கட்டுற வேலை ஆரம்பிச்சிட்டேன், நம்ம ஆண்டிப்பட்டி கொத்தனார் வருவார் அவர் அளந்து கோடு போட்டு சொல்ற இடத்துல நீனும் முருகனுமா விடவு பறிங்க. அப்படியே போய் இரண்டு கிலோ மீன் வாங்கிட்டு வந்து அம்மா கிட்ட கொடுத்திரு,இன்னைக்கு கொத்தனாருக்கு நம்ம வீட்லதான் சாப்பாடு.

பரமன்: சரிடா செஞ்சிடறேன், அப்படியே ஒரு அம்பது ரூபாய் கூடகொடு.

விநாயகம்: உன்னையெல்லாம் திருத்தமுடியாது, நான் போய் பட்டைகிட்ட செங்கல் கேட்டிருக்கேன், பேசிட்டு வரேன்.

பரமன்: ஆண்டிப்பட்டி கொத்தன் நல்லா கட்டுவானா? ஆசாரி முத்தையன வெச்சுக்கலாம், அவனும் அவன் மவனுந்தான் இப்ப ஊர் காட்டுல உள்ள பத்தாயத்திலேர்ந்து, பெஞ்சு,நாற்காலியெல்லாம் செய்யிறாங்க ரொம்ப பேமசா பேசிக்கிறாங்க.

விநாயகம்: சரி அவரையே கூப்பிட்டுக்கலாம், கொத்து ஆண்டிப்பட்டியார் நல்லா பண்ணுவாரு அவரையே வெச்சுக்குவோம்.
--

சாப்பாடு நேரம், மீன் குழம்புடன் கொத்தனார், ஆசாரி புடைசூழ சாப்பாடு.

விநாயகம்: என்ன சாப்பாடு நல்லா இருக்கா?

ஆசாரி முத்தையன் : பிரமாதம்.

முருகன் : (ஆசாரி முத்தையன் மகன் ரமேசை சாப்பிட அழைக்கிறார்).நீங்களும் உட்காருங்க.

ரமேஷ் : இல்ல நான் வெளி இடத்தில சாப்பிட மாட்டேன்.வீட்ல சாப்பிட்டு வந்துட்டேன்

முத்தையன்: என்ன பழக்கமோ போ, நம்ம தொழில்ல நாலு இடத்திற்கு போயிதான் ஆகனும் , கை நெனச்சுதான் ஆகனும் பட்டினியாவா வேலை செய்ய முடியும். சரி என்ன சாப்பிட்ட.

ரமேஷ்: சாம்பார் சாப்பாடும்,காலி பிளவர் கூட்டும்.

முத்தையன் : காளி பிளவரோ , யோக்கியன் பிளவரோ வயித்துக்கு வஞ்சனை பண்ணாம சாப்பிட்டா சரி.

பரமன்: என்னதான் குழம்பு வைக்கிறாளோ உங்கம்மா, உப்பு உறைப்பு இல்லாம சப்புன்னு கெடக்கு.

விநாயகம் : டேய் முருகா அந்தாளுக்கு வைத்தி வீட்லேந்து கொஞ்சம் மீன் குழம்பு வாங்கி கொண்டாந்து கொடுறா?

முருகன்: இந்தாப்பா வைத்தி வீட்டு மீன் குழம்பு உனக்கு ஏத்த மாதிரி கார சாரமா இருக்கும்.

பரமன் : இது நல்லா ருசியா இருக்குடா,?

முருகன்: நம்ம வீட்டு மீன் குழம்புதான் அதுல ஒரு டம்ளர் தண்ணி ஊத்தி கொடுத்தேன் அத நல்லாயிருக்குன்னு சொல்ற நீ. உன்னையெல்லாம் என்ன பண்றது.

தொடரும்..

குடுகுடுப்பை: பாகம் 2:வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்.

Sunday, April 12, 2009

சில ஒளிப்படங்கள்.-Corpus Chiristi

USS Lexington ship









நான் தங்கியிருந்த வீடு.









பாம்பன் பாலம் போல் ஒரு பாலம், கடக்கும் கப்பல்











சான் ஆண்டானியோ sea world WHALE SHOW.












ஹரிணியின் கைவண்ணம்


Tuesday, April 7, 2009

அவள் ஒரு

அவள் ஒரு

அவள் ஒரு தேவதை.
அவள் ஒரு பறித்து நடப்படாத நாற்று
அவள் ஒரு பின்நவீனத்துவம்
அவள் ஒரு புதுமைபேசி
அவள் ஒரு முக்கனிச்சுவை.
அவள் ஒரு பிக்காசோ ஓவியம்
அவள் ஒரு சாண்டில்யனின் வர்ணனை.
அவள் ஒரு
அவள் ஒரு
அவள் ஒரு
அவள் ஒரு
ஒரு வரியில் கூறின்
அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு.

இது புதுசு.
குடுகுடுப்பை: வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

Monday, April 6, 2009

வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

ஒரு வழியா திருவல்லிக்கேணி மென்சன்ல ஜாவா தீவிரமா படிச்சு, நண்பர்களுக்கும் சொல்லிக்கொடுக்கிற அளவுக்கு தேறிட்டோம்.(!?? )அந்த சமயம் எங்க கூட தங்கியிருந்த என் மாப்பிள்ளை அவனும் மெக்கானிக்கல் எஞ்ஜினியர். அவனும் ஜாவா படிச்சான் நம்ம நண்பன் ஒருத்தன் அவனுக்கு சொல்லிக்கொடுப்பான்.

அது எப்படி உங்களுக்கு வொர்க் ஆகுது, எனக்கு வொர்க் ஆக மாட்டேங்குது.

அதுவா ,அது இப்படி பண்ணா அப்படி வொர்க் ஆகும்.

ஓ ஓ அப்படியா இப்ப புரியுது.

என்ன மாப்பிள்ளை நல்லா புரிஞ்சிருச்சு போல -நான்

எங்க புரிஞ்சது உங்க பிரண்டு பாவம் எவ்ளோ நேரம்தான் சொல்லிக்கொடுப்பாரு அதான் தலைய ஆட்டி வெச்சேன்.எனக்கு இது வேலைக்கு ஆவாது.சரி மணி எவ்ளோ?

மணி இவ்ளோ. பத்தாச்சி

சரி வாங்க ரோட்ல ஒரு சண்டை நடக்குது மொட்டை மாடிலேந்து வேடிக்கை பாத்து ரிலாக்ஸ் பண்ணிட்டு வருவோம்

மொட்டைமாடிலேந்து ரோடு.

டேய் எனக்கு பொற்ந்தது அஞ்சும் ஆம்பிள பிள்ளை. என்னை எவனும் ஒன்னும் பண்ண முடியாது இந்த தீத்தாரப்பன் தெருவில.-ஒருவர் சென்னைத்தமிழில் அவருக்கே உரித்தான வார்த்தைகளுடன்.

யப்பா சாப்பிட வாப்பா சாப்பிட்டு அப்புரமா வந்து கூவிகினு கெட -அந்த ஒருவரின் மகள்களில் ஒருவர்.

மாப்பிள்ளைக்கு பதினோரு மணிக்கு மேல முழிக்க முடியாது, எங்களுக்கு தூங்க முடியாது, காலைல நாலு மணிக்கு ஜாம்பஜார் குப்பை அள்ளுரப்ப ஒரு வாடை வரும் , அந்த சமயத்துல ஒரு டீக்கடை திறப்பாங்க முத ஆளா போய் டீ குடிச்சிட்டு தம்ம போட்டு நல்ல பிள்ளையா தூங்கிருவோம்.

அப்படி தூங்கும்போது ஒருநாள் திடீரென்று போலீஸ் எங்க மேன்சனில் உள்ள எல்லா ரூம்லேயும் வந்து இருக்கிற எல்லாரோட பேர் முகவரி கேட்டாங்க, ஜூன் மாதத்திலேயும் போர்வைய நல்லா இழுத்து போத்தி தூங்கிட்டிருந்தேன். வந்த போலீஸ்காரர் எங்க ரூம்ல தங்கியிருந்த இன்னோரு நண்பனிடம்

அது என்னா ? என்னைக்காட்டி?

சார் எங்கப்பா கலெக்டர் ஆபிஸ்ல வேலை பாக்கிறார்.

அதெல்லாம் தேவையில்லை அது என்னா? -லத்தியால் கட்டிலைத்தட்டுகிறார்.

அது குடுகுடுப்பை சார்.

என்னாது சும்மா லத்திக்கு போர்வை போத்துனது மாதிரி இருக்கு.உண்மையாவே மனுசனா அது.(இன்றைய போல் இருந்திருந்தால் மேளத்திற்கு உரை போட்டது மாதிரி இருக்கும்).

ஆமாம் சார் அது குடுகுடுப்பைன்னு ஒரு பையன் காலைலதான் சார் தூங்கினான்.

அவரு போயிட்டார். நான் அவரு போகிற வரைக்கும் எந்திருக்கவே இல்லையே...

---

நண்பன் : (என் மாப்பிள்ளையிடம்: நான் இல்லாத ஒருநாள்) ஜாவா படிக்கலாமா ?

மாப்பிள்ளை: இல்லை ஜாவா படிச்சி எனக்கு வயிறு வலி வந்துருச்சு? என்னைக்கொண்டு வந்து தஞ்சாவூர்லேயே விட்டிருங்க.

தஞ்சாவூர் வந்து மாப்பிள்ளை அவங்க வீட்ல உள்ள குளத்தில உள்ள மீனில் பாதிய சாப்பிட்ட உடன் வயித்து வலி அவருக்கு சரி ஆகிவிடும், இந்த சமயம் ஊரில் இருந்த நான் நண்பனோட சென்னை வந்துட்டேன்.

மாப்பிள்ளையும் குளத்தில மீனெல்லாம் முடிச்சிட்டு வந்துட்டார், அவரோட அண்ணன் ஒரு தல ஆனா ரொம்ப நல்லவர் / இரக்க குணம் யார் வேண்டுமானாலும் ஏமாத்தலாம்.இருக்கிற கட்சியும் அப்படி(ம.தி.மு.க), அவரும் அடிக்கடி அவரோட அடிப்பொடிகளோட வருவார்.ஒருநாள் நான் தம் அடிக்கறத பாத்துட்டார், சும்மா செரிமானதுக்கா மாப்பிள்ளை அப்படின்னார், தம்பி மேலேயும் சந்தேகம்,நம்மள மாதிரி தம்பியும் வருவானோன்னு, ஆனால் அவர்களின் குடும்பத்தில் ஒரு விதிவிலக்கு அந்த மாதிரி பழக்கமெல்லாம் கிடையாது.

அவரோட அடிப்பொடிகளில் ஒருவரிடம், எனக்கு 900 ரூபாய்க்கு இண்டர்வியூ அட்டெண்ட் செய்ய நண்பர் நெட்டையன் வாங்கி கொடுத்த லீயி பிலிப் சட்டைய காண்பித்தான், வயித்துவலிக்காரன்.

900 மா நான் இரண்டு மூட்டை யூரியா வாங்கி போட்டிருப்பேனே, வாத்தியார் சம்பாதிக்கிறார் நீ அழிக்கிற.

இன்னோருவரை பஸ் ஏத்திவிட ஒருநாள் எக்மோர் சென்றேன். மாப்பிள்ளை நீங்க நல்லப்பையன் கிட்ட வராதீங்க இந்த பழக்கமெல்லாம் நீங்க பாக்கக்கூடாது.மனுசன் ஒரு குவாட்டர மிக்சர் வாசனையிலேயே அடிச்சார்.நான் அந்த மிக்சரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஊரில் போய் இன்னோரு அல்லக்கை என்னா சார் உங்காளு எப்பப்பாத்தாலும் ஒரே தூக்கம்தான்.

என்னடா அவன் அப்படி சொல்றான்?

நான் இரவில் படிப்பது அவருக்கு தெரியாது? இந்த மாசம் 5000 ரூபாய் வேணும்.

இனிமேல் சொந்தக்காலில்.

Saturday, April 4, 2009

அயன் - மீண்டும் ஒரு கொள்ளக்கூட்ட பாஸ் படம்.

படம் பிடித்தவரின் விமர்சனம்
படம் பிடிக்காதவரின் மற்றொரு விமர்சனம்

குருவி,வில்லு வரிசையில் மீண்டும் ஒரு கொள்ளக்கூட்ட பாஸ் படம். மலேசியாவில் படம் எடுக்க குறைந்த செலவு ஆகும் போல அதனால் ஓசில பிளாக்ஸ்பாட் கெடக்கிறதுனால எழுதுற என்ன மாதிரி, மலேசியாவிக்கு விமானத்துல போற மாதிரி சினிமா எடுத்தா கொள்ளக்கூட்ட சினிமாதான் எடுப்பாங்க போல,காங்கோ சென்னை இங்கெல்லாம் படம் போகிறது.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே என் மகள் அப்பா பயமா இருக்கு ஒரே சத்தமா இருக்கு வீட்டுக்கு போகலாம் அப்படினு சொன்னா, சொன்னபடியே 20 நிமிடத்திற்கு முன்பாகவே அவங்கம்மாவும் அவளும் வீட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர்.நான் நண்பர்களின் காரில் வருகிறேன் எனறு முழுச்சத்தத்தையும் கேட்டேன். ஒன்று தியேட்டர் சரியில்லை அல்லது பின்னனி இசை தேவையில்லாத இரைச்சல் அல்லது என் காது சரியில்லை.

படத்தின் கதை என்னான்னா ரெண்டு நல்ல கொள்ளக்கூட்ட பாஸ் ஒருவர் பிரபு, இன்னொருவர் சேட்டு, சேட்டுவின் மகன் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு போதை மருந்தெல்லாம் கடத்துறார் அப்பா சேட்டையும் கொன்று விடுகிறார். இவருக்கு கோலங்கள் சீரியல் வருகிற ஆதி கேரக்டர் நடிகரின் குரல், ரொம்ப பயமா இருக்கு.சூர்யா, பிரபுவிற்காக கடத்தல் செய்யும் குருவி. மலேசியா காங்கோ இங்கெல்லாம் பறக்கிறார் ,வைரங்களை கடத்துகிறார். காங்கோவை அழகாக காட்டியிருக்கிறார்கள்.எல்லா முறையும் கஸ்டம்ஸிற்கு யாரோ தகவல் கொடுக்கிறார்கள். சூர்யாவும் அவரின் நண்பனும் எப்படியோ சமர்த்தியமாக தப்பிக்கிறார்கள். இந்த சூர்யாவின் நண்பனின் தங்கைதான் தமன்னா ஹீரோயினி.சூர்யா கூட லல் பண்ணுரார் டான்ஸ் ஆடுறார். இதுக்கெல்ல்லாம் அவங்க அண்ணன் சப்போட்டா இருக்கார்.

திடீரென்று இடைவேளையில் ஒரு திருப்பம், இந்த நண்பன் வில்லனோட ஆள். அப்புரம் மலேசியாவுக்கு ஹெராயின் வயித்துக்குள்ள வெச்சு தமன்னாவோட அண்ணன் வில்லனுக்காக கடத்துறாரு,அதே பிளைட்ல பிரபுவுக்கு சூர்யா தங்கம் கடத்துறாரு. நிறைய சண்டை போடுறாங்க,காது கிழியுது மியூசிக். நண்பன் வயித்திலேந்து ஹெராயின எடுக்க வில்லன் கோஷ்டி வயித்த கிளிச்சி எடுக்குறாங்க , தமன்னாவோட அண்ணனான இவர் சூர்யாகிட்ட சாகும் தருவாயில் சொல்றார் என்ன எரிச்சிருன்னு , அவரும் எரிக்கிறார்.

நீதான் எங்கண்ணன கொன்னேன்னு தமன்னா கோபப்டுறாங்க, கடைசில பாத்தா அவங்கண்னன் கையில உள்ள செல்போன்லேயெ யாரு கொண்ணதுன்னு படம் புடிச்சிருக்கு, அப்புரம் தமன்னாவுக்கு திரும்பி சூர்யாவை புடிச்சிருக்கு.

இடைவேளைக்கு அப்புரம் சூர்யா கஸ்டம்ஸ்க்கு அல்லக்கையாவுறாரு, வில்லன் பிரபுகிட்டேந்து கிழிச்ச காங்கோ நாட்டு பணத்தில பாதிய (கொள்ளகூட்ட நோட்டு மேட்சிங் டெக்னிக்) எடுத்துட்ட கொல்றார்.சூர்யா தப்பிக்கிறார் காங்கோ செல்கிறார்.வைரத்தை வில்லனிடமிருந்து பறித்துவிட்டு கொல்கிறார்.

இந்தியா வருகிறார், கஸ்டம்ஸ்ல அவங்கம்மா போட்டுக்கொடுத்திட்டாங்க , இனிமேலாவது திருந்தி வாழச்சொல்லி, நாங்களும் சொல்லிக்கிறோம் நீங்க நல்ல படம் நிறைய நடிக்கலாம்.அவங்கம்மாக்காக கஸ்டம்ஸ்ல அவர் தலைல வெச்சுக்கிற வைரத்தெல்லாம் குடுக்கிறார்.

உடனே அவருக்கு ஆபிஸர் என்னமோ ஒரு வேலை கொடுக்க்கிறார். வெறும் உடம்போட இருக்கிற சூர்யாவிற்கு பக்கத்தில இருக்க ஆபிஸர் சட்டையை உருவி குடுக்கிறார். அப்படியே நம்ம சட்டை பேண்டையும்தான்.

தமன்னா அழகாய் இருக்கிறார், ஒரு பாடல் காட்சியில் அவர் கட்டியிருக்கும் சேலை நன்றாக இருக்கிறது.பிரபு,சூர்யா நன்றாக நடித்திருக்கிறார்கள், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் படம்....

அய்யா படம் எடுக்குறவுங்களே நீங்களே இந்த படங்களை முதலில் உங்கள் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட பாருங்க அப்புரமா காசு குடுத்து பாக்கிரவங்களை சோதனை பண்ணுங்கப்பா.

இந்தகொள்ளக்கோஷ்டிப்படம் எனக்கல்ல. பெரும்பாலனவர்களுக்கு பிடித்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.இந்த மாதிரி கதைக்களம் உள்ள படங்களை தமிழகம் உண்மையிலேயே ரசிக்கிறதா. சூர்யா,தமன்னா,பிரபு இவர்களை வைத்து கண்டிப்பாக ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் எடுத்திருக்க முடியும்.

பதிவில் எழுத்துப்பிழை நிறைய இருக்கும். காரணம் அயன் செய்யப்பட்ட விரல்கள் இன்னும் சுடுகிறது.

மொத்தத்தில் அயன் குடுகுடுப்பை எழுதிய ஒரு கவிதை.

Friday, April 3, 2009

தொவையல் - பெட்ரோல் விலை ஏறப்போகுது.

பரிசல்காரன் அவியல் போடுறார், பழமைபேசி பள்ளயம் போடுறார், மகேஷ் கூட்டாஞ்சோறு செஞ்சு எல்லாத்தையும் அவரே சாப்பிடுறார். நானும் ஒரு தொவையல் போடுறேன்.

தொவையல் அந்தக்காலத்து வெஞ்சனம்(புதுக்கோட்டை அன்னவாசல் பகுதி மொழி) சாப்பிடும்போதோ, குடிக்கும்போதோ நாக்குக்கு ருசியா இருக்க நாம சாப்பிடுறதான். கழுவாத அம்மியில் அறைக்கப்பட்ட மிளகாய், பூண்டுத்தொவையல்(துவையல்), பருப்புத்தொவையல், காசு கொடுத்து கீரை வாங்காமல் வயல் வெளியில் கிடைக்கிற ஓசிக்கீரைத்துவையல். கழுவாத அம்மியில் அறைச்சி ருசியா கொடுக்கிறதுக்கு பேருதான் தொவையல்.

அழுக்கு ஜட்டியையும் ,புதுத்துணியவும் ஒன்னா சேத்து துவைச்சு கழுவி இரண்டையும் வீணாக்குனாலும் தொவையல்தான் என்னோட இந்த தொவையல் எந்த ரகமா வேணுமானலும் இருக்கும்.

1. G20 மாநாடு நல்லபடியா முடிஞ்சு உலகப்பொருளாதாரம் கீழே விழாம முட்டுக்கொடுக்க 1 டிரில்லியன் $ க்கு மேல உலக நாடுகள் நிதி ஒதுக்கி இருக்காங்க.இதுனால உலகப்பொருளாதாரம் உயருதோ இல்லையோ, ஆனால் பெட்ரோல் விலைய இந்தக்கோடைக்காலத்துக்குள்ள பழையபடி 1 Gallon $4 க்கு கொண்டு வந்துருவாங்க போலருக்கு அதுக்கான அறிகுறிகள் இப்பவே தெரிய ஆரம்பிக்குது, ஜூலை, ஆகஸ்ட் மாத வாக்கில திரும்பவும் அறிக்கையா விடுவாங்க பொருளாதார முன்னேற்றம் எதிர்பாராத பெட்ரோல் விலை உயர்வால் தடைபட்டுவிட்டது.

2. அவரைக்காய் பச்சை மற்றும் அரக்கு ஆகிய இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும், இது கொடியில் காய்க்கும். வீட்டின் முன்னால் பந்தல் போட்டு இதனை வளர்க்கலாம்.இதன் சுவை அலாதியானது, அவரைக்காயை பொடியாக நறுக்கி தேங்காய் பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம், சாம்பாரில் போட்டால் சாம்பாரின் சுவை கூடும். அவரைக்காய் புளிக்குழம்பும் நல்ல சுவையாக இருக்கும், இதன் சுவையில் நாளு வாய் சோறு அதிகமாக சாப்பிடலாம்.

கேள்வி: அவரைப்பூவின் படம் வரைந்து பாகங்களை குறி?

இந்தக்கேள்விக்கு என்னோட படித்த ஒரு நண்பர் எழுதிய விடையின் சாரம்தான் மேலே உள்ளது.

Thursday, April 2, 2009

இட்லி வடையை நடத்துவது யார்?

முன் குறிப்பு: பழைய பதிவர்கள் அனைவருக்கும் இட்லி வடையை நடத்துவது யார் என்பது தெரியும். ஆனால் புதிய பதிவர்கள்/ வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் ஆவலில் இந்த மீள் பதிவு.
---------------------------------------------------------------------------------

தி.மு.க வை நடத்துபவர் கலைஞர்.
அ.தி.மு.க வை நடத்துபவர் புரட்சித்தலைவி.
ம.தி.மு.க வை நடத்துபவர் வைகோ.
பாமகவை நடத்துபவர் தேர்ந்த மருத்துவர் ராமதாஸ்.
தே.மு.தி.க வை நடத்துபவர் புரட்சிக்கலைஞர்.
குஜமுகவை நடத்துபவர் குடுகுடுப்பை.
அஇநாமகவை நடத்துபர் கார்த்திக்.
சமக வை நடத்துபர்கள் ராதிகாவும் சரத்குமாரும்.

ஆனால் இட்லி வடையை நடத்துபவர்கள்…?

தமிழ் பேசும் நல்லுலகம் முழுவதும் இந்த கேள்வி இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்த கேள்வி ஏன் எழுந்தது என்றே வியப்பாக உள்ளது.

பொதுவா இட்லி வடைக்கு மாவு அறைக்கிறத அந்த மாவை கொஞ்சம் நடத்தித்தா என்று கிராமத்தில சொல்வாங்க. ஆக மொத்தம் மாவை யார் அறைக்கிறாங்களோ அவங்களே நடத்துகிறார்கள்.

பொதுவா எல்லார் வீட்டிலயும் இப்ப கிரைண்டர்/மிக்ஸி தான் மாவை அறைக்கிறது ஆனாலும் அவை ஓட்டுனர்கள்தான், நடத்துனர் தங்கமணியோ ரங்கமணியோதான்.ஹோட்டல்னா பிச்சுமணி.

நாம இட்லி வடையை நடத்துறது யாருன்னுள்ள கேள்வியோட இருக்கோம் இவன் என்னடா மாவை பத்தி பேசறான் அப்ப்டின்னு கேக்கறீங்க. பொதுவா நாம இட்லி வடைய சாப்பிடும்போது மத்தவங்க பாத்து “நடத்துங்க நடத்துங்க”ன்னு சொல்வாங்கள்ல அதுனால இட்லி வடையை நடத்துறது அதை சாப்புடுற எல்லாரும் தான். இத நான் சொல்லல ஜக்கம்மா சொல்றா.

எல்லாரும் மகிழ்ச்சியா இட்லி வடைய நடத்துங்க மக்களே.

Wednesday, April 1, 2009

தமிழில் பிழையில்லாமல் ஒரு பதிவு

 
Posted by Picasa

இ-பில்லும், ஆட்டோமேடிக் பேமண்டும் கஷ்டமர் சர்வீஸும்.

கடந்த எட்டு வருடங்களாக நான் மாற்றாத ஒன்று என்னுடைய செல்போன் கம்பெனி. (செல்போனும்தான் மாத்தி 3 வருசம் ஆச்சு , கொஞ்சம் செங்கல் கணக்கா பெரிசா இருக்கு).இபில் ஆட்டோமெட்டிக் பேமண்ட் எல்லா வசதியும் ஏற்படுத்திக்கொடுதிட்டாங்க. இதை ஏற்படுத்திக்கொடுக்கிற மென்கூலிகளானா நாமே பயன்படுத்தலன்னா எப்படி அதனால எல்லாத்தையும் பயன்படுத்தறேன். இல்லாட்டி வீட்டுக்கு 10 பக்கத்து ஒரு பேப்பர் பில்லு வரும் அதுல ஒரு பக்கம் கால் ஹிஸ்டரி 5 பக்கம் tax and fees. மீதம் நாலு பக்கம் இந்த பில்லை புரிந்துகொள்வது எப்படின்னு உதவி(help) விளக்கம் இருக்கும் இதையெல்லாம் தவிர்க்கலாம்.

கடந்த சில வருடங்களாக நானும் அந்தப்பக்கம் லாகின் பண்ணதே இல்லை, திடீர்னு ஒரு சிறிய மாற்றம் செய்ய வேண்டியிருந்தது, அப்படியே ஒரு பில்லை எடுத்து படிச்சேன். அதுல வரி பகுதியில், நான் நான்கு வருடத்திற்கு முன் குடியிருந்த ஊருக்கான tax ஆ மாதம் ஆறு டாலரும், இப்ப இருக்க ஊருக்கு குடியிருக்கிற ஊருக்கு வரியா ஒரு டாலருக்கு குறைவாகவும் வாங்கிட்டு இருக்காங்க.

நான்: ஏன் இப்படி பண்ணீங்க

கஷ்டமர் சர்வீஸ்: I will create a ticket for your Case to find out what is going on. This is your ticket number. blahbalaaaaaaaaaaaaaaaaaa.

கஷ்டமர் சர்வீஸ்: குடுகுடுப்பையாரா?

நான்: ஆமாம்

கஷ்டமர் சர்வீஸ்: சாரி, இது கடந்த நாலு வருசமா நடக்குது, நாங்க இரண்டு வருசத்துக்கு உள்ள வரி 140$ உங்களுக்கு திருப்பிதரோம்.

நான்: ஏன் ரெண்டு வருசம், நாலு வருசத்துக்கும் தானே தரனும்.

கஷ்டமர் சர்வீஸ்: சாரி குகு, எங்க கம்பெனி பாலிஸிபடி ரெண்டுவருசத்துக்கு உள்ள வரி தவறுகள்தான் சரி செய்யமுடியும்.blahaaaaaaaaaaa

நான்: என்னோட பாலிஸிபடி நான் அடுத்த நாலு வருசத்துக்கு பாதி காசுதான் கட்டுவேன் ஆனா நீங்க எனக்கு இப்ப கொடுக்கிற அதே சர்வீஸ தரனும்.

கஷ்டமர் சர்வீஸ்: I understand, we are sorry. blahhhhhhhhhhh.

-----------

ஒரு வாரம் கழித்து அடுத்த பில் வந்துச்சு, இப்பயும் அதே பழைய மாதிரிதான் வரி போட்டிருக்காங்க

நான்: ஏன் திரும்ப இப்படி பண்ணீங்க.

கஷ்டமர் சர்வீஸ்: I will create a ticket for your Case to find out what is going on. This is your ticket number. blahbalaaaaaaaaaaaaaaaaaa.