Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, November 1, 2010

ரசனையால் ரசனை

பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
விழிகளால் சிந்திய
வித்திய விந்திய
பனிமலர் கண்ட
சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று
மகிழவன் சிலாகிக்க
அன்னத்தின் மேல் விழுந்த
குழம்பின் வண்ணம்
ரசிக்கும் வண்ணமடிப்பவன்.

Friday, October 3, 2008

இந்த மதம் புதிய மதம்

முன் குறிப்பு: எழுத சரக்கு இல்லாத காரணத்தினால். எனது கோடானு கோடி ரசிகப் பெருமக்களை ஏமாற்ற விரும்பாததால் கவிதை மாதிரி ஒன்றை எழுதுகிறேன். தமிழ்மணத்தில் இதுவரைதான் தெரியும்.


இந்த புதிய மதத்தில்
கடவுள் இல்லை
கடவுளின் தூதனும் இல்லை.
வழிபாட்டு முறையும் இல்லை
வழிபாடும் இல்லை.
நீங்கள் சேர்ந்தாலும்
சேராவிட்டாலும்
தொல்லையுமில்லை.
இதன் ஒரே தேவை
நேர்மையுடன்
சுய விமர்சனம்.

Friday, August 29, 2008

(புது) கவிதை

பேருந்து

கணினி

தொலைபேசி

அலைபேசி

புது பெயர்கள்

மட்டும் தான்

கண்டு பிடிப்போமா?

இல்லை இப்படி

கவிதையும்

எழுதுவோமா?