Thursday, December 18, 2008

டாலஸ் டெக்ஸாஸில் பதிவர் வாசகர் சந்திப்பு.

டாலஸ் டெக்ஸாஸில் பதிவர் வாசகர் சந்திப்பு.

பதிவர் சந்திப்பு, பதிவர் வாசகர் சந்திப்பு அடிக்கடி நடந்தவண்ணமே உள்ளது, நானும் என் பங்குக்கு ஒரு பதிவர் -வாசகர் சந்திப்பை பகிருகிறேன்.வலையுலகத்தில் குறைவான வாசகர்களோடு ஆனாலும் விடாமல் பதிவு நடத்திக்கொண்டிருப்பதில் நானும் ஒருவன், என்னுடைய பதிவின் தரத்தை(?) மேம்படுத்த பொன்னியின் செல்வன் படிப்பதாக முடிவு செய்து டவுன்லோடும் செயதாகிவிட்டது.

இப்போது வாசகர் சந்திப்பிற்கு செல்வோம், இவர் பதிவு போட்டவுடன் படித்து எனக்கு அலுவலகத்திற்கு தொலைபேசி அடிக்கடி நான் செய்யும் எழுத்துப்பிழை கருத்துப்பிழைகளை சுட்டிக்காட்டுவார்.ஆனால் ஒருநாளும் பின்னூட்டம் எல்லாம் போடமாட்டார்.

டீ குடித்தபடியே டீயில் சிறிது சக்கரை கூட வேண்டும் என்றார்,அப்படியே என்னுடைய பதிவில் பிடித்ததாக இரண்டு பதிவுகளை குறிப்பிட்டார் அந்த இரண்டு பதிவுக்கும் சொந்தக்காரர் ஹரிணி.

குடுகுடுப்பை: பெற்றோருக்கு kindergarten படிக்கும் மகளின் பரிசு.

குடுகுடுப்பை: என் மகளின் பதிவு


அப்ப என்னதான் சொல்ல வரார் நம்ம இதுவரைக்கும் எந்த பதிவுமே உருப்படியா எழுதலையா என்ற கவலையில் இருந்தபோது.

இந்த பதிவுகள்

வருங்கால முதல்வர்: இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச ஆயுதம்.

வருங்கால முதல்வர்: இல்லாத நடிகையின் பொல்லாத நாய்.

பிடித்ததாக சொன்னார்.நல்ல மாதிரி பதிவு எழுதினாதானே வாசகர்கள் வருவார்கள், அதுனால நல்லா எழுத முயற்சி பண்ணுங்க இல்லாட்டி எழுதற நிறுத்துங்கன்னு சொன்னார்

கிளம்பும் நேரம் வந்தது , இன்னைக்கு ஒரே கார்ல ஆபிஸ் போறோமோ இல்ல தனித்தனி காரா எனக்கேட்டார், இந்த கேள்வியை கேட்டபின் ஒரே காரில்தான் போக வேண்டும் என்பதுதான் சட்டம். இந்த பதிவர் -வாசகர் சந்திப்பு, விமர்சனம் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

33 comments:

பழமைபேசி said...

பாராட்டுகிறோம்! வாழ்த்துகள்!!

தங்ஸ் said...

குளிர்கால கூட்டத்தொடர்???

RAMYA said...

அப்படித்தான் போல
பாராட்டுகிறோம்! வாழ்த்துகள்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா..உங்க வீட்டு தங்கமணிக்கு பாராட்டுகள்

நசரேயன் said...

இது பதிவரும், பதிவருக்கு பத்து( எண் பத்து இல்ல) போடுபவருக்கும் நடந்த சந்திப்பு

நசரேயன் said...

/*
நல்ல மாதிரி பதிவு எழுதினாதானே வாசகர்கள் வருவார்கள், அதுனால நல்லா எழுத முயற்சி பண்ணுங்க இல்லாட்டி எழுதற நிறுத்துங்கன்னு சொன்னார்
*/
நல்ல பதிவு போடலைன்னா பூரிக்கட்டையா ? உருட்டுக்கட்டையா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பயங்கர தைரியசாலியா இருக்கீங்க

S.R.Rajasekaran said...

பெரியவங்க சொன்னா கண்டிப்பா கேக்கனுங்க

Anonymous said...

எல்லா இடத்திலேயும் நடக்கிறதுதான், அங்கேயும் நடந்திருக்கு..

நண்பர்களே ஏன் நான் பதிவு போடுவதில்லை என்ற காரணம் இப்போது புரிந்ததா?

நம்மால அடியெல்லாம் தாங்க முடியாதுங்க...

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

பாராட்டுகிறோம்! வாழ்த்துகள்!/

எதுக்கு வாழ்த்து, யாருக்கு வாழ்த்து

குடுகுடுப்பை said...

வாங்க தங்ஸ்

குளிர்கால கூட்டத்தொடர்???//

காலம் இதில கெடயாதுங்க

அது சரி(18185106603874041862) said...

//
நல்ல மாதிரி பதிவு எழுதினாதானே வாசகர்கள் வருவார்கள், அதுனால நல்லா எழுத முயற்சி பண்ணுங்க இல்லாட்டி எழுதற நிறுத்துங்கன்னு சொன்னார்
//

நீங்க நல்லாத்தாங்கன்னா எழுதறீங்க...ஆனா அவங்க சொன்ன மாதிரி இலங்கைக்கு ஆயுதம் விக்கிறதையும் நடிகைக்கு நாய் விக்கிறதையும் அப்பப்ப செஞ்சீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் :0)

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
நல்ல மாதிரி பதிவு எழுதினாதானே வாசகர்கள் வருவார்கள், அதுனால நல்லா எழுத முயற்சி பண்ணுங்க இல்லாட்டி எழுதற நிறுத்துங்கன்னு சொன்னார்
//

நீங்க நல்லாத்தாங்கன்னா எழுதறீங்க...ஆனா அவங்க சொன்ன மாதிரி இலங்கைக்கு ஆயுதம் விக்கிறதையும் நடிகைக்கு நாய் விக்கிறதையும் அப்பப்ப செஞ்சீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் :0)
//

அனுபவம் புளிக்குதுன்றீங்க.முயற்சி பண்ணுறேன்

நசரேயன் said...

நான் எல்லாம் பதிவர் வாசகர் சந்திப்புக்கு விண்வெளி வீரர்கள் மாதிரி போவேன்

தமிழ் அமுதன் said...

நடக்கட்டும் வாழ்த்துக்கள்!

குடுகுடுப்பை said...

// RAMYA said...

அப்படித்தான் போல
பாராட்டுகிறோம்! வாழ்த்துகள்!!

//

நன்றி ரம்யா

குடுகுடுப்பை said...

ஆஹா..உங்க வீட்டு தங்கமணிக்கு பாராட்டுகள்

வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

இது பதிவரும், பதிவருக்கு பத்து( எண் பத்து இல்ல) போடுபவருக்கும் நடந்த சந்திப்பு//

நல்லா இருங்கடே

குடுகுடுப்பை said...

வாங்க SUREஷ் said...

பயங்கர தைரியசாலியா இருக்கீங்க//
தைரியம்கிறது பயப்படாத மாதிரி நடிக்கறது

குடுகுடுப்பை said...

S.R.ராஜசேகரன் said...

பெரியவங்க சொன்னா கண்டிப்பா கேக்கனுங்க/

ஆமாம்,ஆமாம்

குடுகுடுப்பை said...

இராகவன், நைஜிரியா said...

எல்லா இடத்திலேயும் நடக்கிறதுதான், அங்கேயும் நடந்திருக்கு..

நண்பர்களே ஏன் நான் பதிவு போடுவதில்லை என்ற காரணம் இப்போது புரிந்ததா?

நம்மால அடியெல்லாம் தாங்க முடியாதுங்க...//

துணிச்சலா போடுங்க சார்

குடுகுடுப்பை said...

நன்றி ஜீவன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நண்பர்களே இத்தனை சேத்துட்டு.... பதிவுக்கு கூட்டம்வரலைன்னெல்லாம் குறைபடறீங்களே அநியாயம்..

குடுகுடுப்பை said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நண்பர்களே இத்தனை சேத்துட்டு.... பதிவுக்கு கூட்டம்வரலைன்னெல்லாம் குறைபடறீங்களே அநியாயம்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி

இன்னும் நல்லா எழுதினா இன்னும் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் யோசிச்சி எழுதின சுய விமர்சனம் தான் அது.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...

அனுபவம் புளிக்குதுன்றீங்க.முயற்சி பண்ணுறேன்

//

அப்பிடில்லாம் இல்லீங்கண்ணா....டெய்லி மொகல் பிரியாணி சாப்டா நடுவுல மோர் சாதம் சாப்பிடணும்னு தோணும்ல, அது மாதிரி...

அப்ப‌ நான் எழுத‌ற‌ க‌ருத்தெல்லாம் என்ன‌ மோர் சாத‌மான்னு கேக்க‌ப்ப‌டாது...நீங்க‌ க‌ர்த்து க‌ந்சாமியா எதுனா சொன்னா தானா கும்மிய‌டிக்க‌ வ‌ச‌தியா இருக்கும்...எல்லாம் அந்த‌ ந‌ல்லெண்ண‌ம் தான் :))

http://urupudaathathu.blogspot.com/ said...

வாழ்த்துகள்!!

http://urupudaathathu.blogspot.com/ said...

போட்டோ எங்கே??
போட்டோ போடாட்டி நான் நம்ப மாட்டேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

//டாலஸ் டெக்ஸாஸில் பதிவர் வாசகர் சந்திப்பு.//

சொல்லவே இல்ல..

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

போட்டோ எங்கே??
போட்டோ போடாட்டி நான் நம்ப மாட்டேன்//

//

போட்டா போட்டா பின்னூட்டம் வராதுப்பு பின்னிப்புடுவாங்கப்பு

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

//டாலஸ் டெக்ஸாஸில் பதிவர் வாசகர் சந்திப்பு.//

சொல்லவே இல்ல..//

எல்லாம் சொல்லிட்டா நடக்குது

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

வாழ்த்துகள்!!//

எதுக்கு வாழ்த்து

நாநா said...

தங்கமணி டீ

துளசி கோபால் said...

நிரந்தர வாசகர். தினமும் 'சந்திப்பு'

நல்லா இருங்க!!!