Friday, November 14, 2008

ஏய் ஆண்மகனா நீ ?

பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அதுனால அவருக்கு போட்டியா நான் எழிதிய புது கொல வெறிக் கவுஜ.

மீசை வைத்தவன் நீ
மீசையை மழித்தவன் நீ

பெண்களைப் புரியாதவனும் நீ
பெண்ணுரிமை கண்டவனும் நீ

கடவுளை கண்டுபிடித்தவன் நீ
கும்பிட வழிமுறை கண்டவன் நீ

காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ

சட்டம் கண்டுபிடித்தவனும் நீ
சாதியை கண்டுபிடித்தவன் நீ

சண்டை போட்டவனும் நீ
சாகப்போறதும் நீ

வீணாப்போன நீ
விளங்காம போன நீ

33 comments:

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

அண்ணே, ஒரு திருத்தம்! அது நான் எழுதினது அல்ல. ஊர்வழில பாடுற ஒப்பாரி வகைப் பாட்டு.

பழமைபேசி said...

//வீணாப்போன நீ
விளங்காம போன நீ //

விழுப் புண்ணைக் காமிச்சு, பெரிய ஆள் ஆகலாம்!

நசரேயன் said...

பழமைபேசி முந்தீட்டாரா?

குடுகுடுப்பை said...

போறப்போக்க பாத்தா நானே எழுது நானே படிச்சுக்கனும் போல இருக்கு
கூட்டம் வரமாட்டேங்குது, கருத்தும் சொல்லமாட்றாங்க என்னோட ரசிகர்கள்

நசரேயன் said...

/*மீசை வைத்தவன் நீ*/

நான் இன்னும் மீசையை மழிக்களை

/*
காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ
*/
நான் கள்ளு காய்ச்சவும் இல்லை
குடிக்கவும் இல்லை

/*
சட்டம் கண்டுபிடித்தவனும் நீ
சாதியை கண்டுபிடித்தவன் நீ
*/

ரெண்டுமே நான் இல்ல சாமி

/*
வீணாப்போன நீ
விளங்காம போன நீ
*/

யாரு பழமைபேசியா?


/*கொல வெறிக் கவுஜ */

நல்ல இருக்கே

நசரேயன் said...

/*
போறப்போக்க பாத்தா நானே எழுது நானே படிச்சுக்கனும் போல இருக்கு
கூட்டம் வரமாட்டேங்குது, கருத்தும் சொல்லமாட்றாங்க என்னோட ரசிகர்கள்
*/
கருத்து சொல்ல கேப் விடனும்

வருண் said...

***குடுகுடுப்பை said...
போறப்போக்க பாத்தா நானே எழுது நானே படிச்சுக்கனும் போல இருக்கு
கூட்டம் வரமாட்டேங்குது, கருத்தும் சொல்லமாட்றாங்க என்னோட ரசிகர்கள்***

ஆமாம். என்னை மாதிரி பதிலுக்கு பதில் வந்து விசிட் பண்ணாத ஜென்மங்கள் அதிகம் இருக்கு! :-)

நீ ஆண்மகனா, ஓ கே குடுகுடுப்பை. "நீ என்ன பொட்டையா?" என்பது பெண்களை அவமானப்படுத்துவது. நல்லவேளை அப்படி ஏதாவது நீங்க சொல்லி மாட்டிக்க வில்லை! :) :)

குடுகுடுப்பை said...

வாங்க வருண்

// நீ ஆண்மகனா, ஓ கே குடுகுடுப்பை. "நீ என்ன பொட்டையா?" என்பது பெண்களை அவமானப்படுத்துவது. நல்லவேளை அப்படி ஏதாவது நீங்க சொல்லி மாட்டிக்க வில்லை! :) :)//

பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன். நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்.இதனால் நான் ஆணாதிக்க சிந்தனை இல்லாதவன் என்றில்லை, தவறு செய்கிறேன் , ஒத்துக்கொள்கிறேன்

கபீஷ் said...

//பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன். நான் அப்படியெல்லாம் எழுதமாட்டேன்.இதனால் நான் ஆணாதிக்க சிந்தனை இல்லாதவன் என்றில்லை, தவறு செய்கிறேன் , ஒத்துக்கொள்கிறேன்
//
எப்போ திருந்துவீங்க?

Anonymous said...

14 நாளுக்கு, 7 பதிவை மட்டும் போட்டுவிட்டு, யாரும் வரவில்லைன்னு புலம்பினா என்ன பண்றதுங்கோ. இராகவன், நைஜிரியா . (முந்தைய பதிவில் போடப்பட்ட ‍ ""கம்பியூட்டர் புரோகிராமும் ராகவனின் குழப்பமும்"" ராகவனும், இந்த ராகவனும் வேறு.. வேறு.. ) Clear disclaimer போட்டாச்சுப்பா..

பழமைபேசி said...

///*
வீணாப்போன நீ
விளங்காம போன நீ
*/
யாரு பழமைபேசியா?//

அப்ப நான் ஒரு தலைவன் ஆயிட்டேனா? தேர்தல் நிதி அனுப்பி விடுங்க... இல்ல, படை வரும்.

நசரேயன் said...

/*அப்ப நான் ஒரு தலைவன் ஆயிட்டேனா? தேர்தல் நிதி அனுப்பி விடுங்க... இல்ல, படை வரும்.
*/
ஆமா பழசை பேசுற பெருசு நீங்க, உங்களுக்கு நிதி எல்லாம் தரமுடியாது, அதுக்கு பதிலா ரெண்டு ஓலை சுவடி தருவோம்

பழமைபேசி said...

// நசரேயன் said...
ஆமா பழசை பேசுற பெருசு நீங்க,
//

என்ன இப்படிச் சொல்லி கழட்டி விடுறீக? யே, நானும் ஒங்கள மாதிரி தண்ணி அடிச்சி, பீடி குடிக்கிற பயதான். ச்சொன்னாக் கேக்கணும்!

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

// நசரேயன் said...
ஆமா பழசை பேசுற பெருசு நீங்க,
//

என்ன இப்படிச் சொல்லி கழட்டி விடுறீக? யே, நானும் ஒங்கள மாதிரி தண்ணி அடிச்சி, பீடி குடிக்கிற பயதான். ச்சொன்னாக் கேக்கணும்!

//

பெரிசுக்கு இந்த பழக்கமெல்லாம் வேற உண்டா.

தங்கமணி பழமைபேசி, பெரிசு சரி இல்ல

நசரேயன் said...

/*
என்ன இப்படிச் சொல்லி கழட்டி விடுறீக? யே, நானும் ஒங்கள மாதிரி தண்ணி அடிச்சி, பீடி குடிக்கிற பயதான். ச்சொன்னாக் கேக்கணும்!
*/

என்னைய மாறி கால் பீரு குடிச்சி, நாலு நாளைக்கு சலம்புரவங்களையே சேத்துகுவோம்.
குடுகுடுப்பை ஏற்கனவே படியல்ல இருக்காரு

தமிழ் அமுதன் said...
This comment has been removed by the author.
தமிழ் அமுதன் said...

//''பெண்ணுரிமையை ஆண் வகுப்பதே தவறு என நினைக்கிறேன்''//

இப்படி யோசிச்சா என்ன?
என் மகள் ஒரு பெண். என்மகளுக்கு
பெண் உரிமை மறுக்கப்படும் போது
அதற்க்காக நான் போராடுவேன்! .

என் மனைவிக்கு பெண் உரிமை
மறுக்கப்படும் போது அவர் தகப்பன்
போராடுவார்!

பெண்ணுரிமையை வகுத்த ஆண்
தகப்பன் ஸ்தானத்திலிருந்து
அதை செய்திருக்கலாம் இல்லையா?

thamizhparavai said...

juuppar....kavuja....

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
பழமை,
நச்ரேயன்,
வருண்,
ராகவன்,
கபீஷ்,
ஜீவன்
தமிழ்ப்பறவை

அண்ணன் வணங்காமுடி said...

பாவம் அந்த (நீ). அதற்க்கு வாய் eருந்த நெனச்சி நெனச்சி அழும்.

குடுகுடுப்பை said...

வாங்க Annan Vanangamudi

// பாவம் அந்த (நீ). அதற்க்கு வாய் eருந்த நெனச்சி நெனச்சி அழும்//

ஓ அவனா நீ

அது சரி said...

//
காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ
//

இது ஒரு குடுகுடுப்பைக் காரரை நினைச்சி எழுதிய வரியா?? காய்ச்சி வடித்தலும், வடித்து குடித்தலும்னு நீங்க ஒரு புக்கே போடலாம் போலருக்கே?

RAMYA said...

//
காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ
//

வடிக்காமலும் ஏன் கஞ்சிய குடிங்களே, என்ன ஆவுதுன்னு பார்க்கலாம். என்ன ஒரே நி நி ன்னு கவிதை வேறு. தங்கமணி ஒரே கஞ்சியா தராப்பலேயா. ஐயோகோ! குடு குடுவின் விதி வலியது . நான் என் செய்வேன். தங்கமணி காப்பாற்று என் நண்பனை.

கூட்டம் வரலை வரலைன்னு ஒரே பொலம்பல் (P.P.) தாங்கலே. நான் ஒரு ஆளை வேலைக்கு அமர்த்தி ஒரு நாளைக்கு ஒரு 550 கள்ள மற்றும் நல்ல வோட்டு போட சொல்லலாம்ன்னு யோசிக்கிறேன். என்ன கொஞ்சம் அதிகம் செலவாகும். athaaaaaaaaaaaaaaaaaaannnnnnnnnnnnnnnn.

ரம்யா

ராஜ நடராஜன் said...

//பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அதுனால அவருக்கு போட்டியா நான் எழிதிய புது கொல வெறிக் கவுஜ.//

இந்த வரியினால தப்பீச்சிட்டீங்க...இல்லைன்னா கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழின்னு நான் எதிர்ப்பாட்டுப் போட்டிருப்பேன்:)

நாநா said...

என்னது இது?

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ
//

இது ஒரு குடுகுடுப்பைக் காரரை நினைச்சி எழுதிய வரியா?? காய்ச்சி வடித்தலும், வடித்து குடித்தலும்னு நீங்க ஒரு புக்கே போடலாம் போலருக்கே?

ஆமா தனி புத்தகமா போட்டுருவோம்

குடுகுடுப்பை said...

//
காய்ச்சி வடித்தவன் நீ
வடித்தவுடன் குடித்தவன் நீ
//

வடிக்காமலும் ஏன் கஞ்சிய குடிங்களே, என்ன ஆவுதுன்னு பார்க்கலாம். என்ன ஒரே நி நி ன்னு கவிதை வேறு. தங்கமணி ஒரே கஞ்சியா தராப்பலேயா. ஐயோகோ! குடு குடுவின் விதி வலியது . நான் என் செய்வேன். தங்கமணி காப்பாற்று என் நண்பனை.

கூட்டம் வரலை வரலைன்னு ஒரே பொலம்பல் (P.P.) தாங்கலே. நான் ஒரு ஆளை வேலைக்கு அமர்த்தி ஒரு நாளைக்கு ஒரு 550 கள்ள மற்றும் நல்ல வோட்டு போட சொல்லலாம்ன்னு யோசிக்கிறேன். என்ன கொஞ்சம் அதிகம் செலவாகும். athaaaaaaaaaaaaaaaaaaannnnnnnnnnnnnnnn.

ரம்யா/

சொ.செ,சூவா
என்ன விட்டுருங்க,

அப்புறம் இது வேற காய்ச்சி வடித்தல்

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

//பழமைபேசி அண்ணன் புரியாத பாட்டெல்லாம் சொல்றாரு, அதுனால அவருக்கு போட்டியா நான் எழிதிய புது கொல வெறிக் கவுஜ.//

இந்த வரியினால தப்பீச்சிட்டீங்க...இல்லைன்னா கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழின்னு நான் எதிர்ப்பாட்டுப் போட்டிருப்பேன்:)

இது சும்மா கவுஜதான், பயப்படாதீங்க.

குடுகுடுப்பை said...

வாடா நாநா இதுக்கு பேரு கவுஜ,

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமா அதனாலதான் அடிச்சிக்கிறாங்க.
இதுவரைக்கும் ஏதாவது லேடிஸ் காலேஜ்ல இது மாதிரி பிரச்சினைன்னு நான் கேள்விப்பட்டதில்ல.
பட்டிருந்தா சொல்லுங்க.

அண்ணன் வணங்காமுடி said...

நீ தமிழ் எனக்கு புடிக்காத வார்த்த.

நையாண்டி நைனா said...

தலிவா.. நீங்க டெமில் ஜீனிமாஉக்கு ஒபணீங் சாங்கு எழுவ போலாம்