கடந்த ஒரு மாத காலமாக நேரமின்மை காரணமாக பதிவெழுதாமல் இருந்த போதும் கூகிள் மூலமாக பலர் என்னுடைய பதிவைத் தேடி படித்தபடி இருந்தனர். நான் கூட நானும் பிரபலம் ஆயிட்டேன்னு நினைச்சேன் ஆனா பாருங்க எதைத்தேடி வந்திருக்காங்கன்னு.
முக்கியமாக டீச்சர், டியூசன் டீச்சர் என்று தேடி என்னுடைய குடுகுடுப்பை: டியூசன் டீச்சர் விமர்சனம் படித்து நொந்து போகிறார்கள்.
இன்னொரு வகையினர் கவிதை ஆர்வம் உள்ளவர்கள் புதுக்கவிதை என்று தேடி இந்தக்கவிதையை படித்து கவிதைக்கு ஒரு புது விளக்கம் இருப்பதை அறிந்து பரவசப்படுகிறார்கள்.
இது தான் அந்தப்புதுக்கவிதை
-----------------------------------
(புது) கவிதை
பேருந்து
கணினி
தொலைபேசி
அலைபேசி
புது பெயர்கள்
மட்டும் தான்
கண்டு பிடிப்போமா?
இல்லை இப்படி
கவிதையும்
எழுதுவோமா?
-------------------------------------------
என்னுடைய முந்திய பிரியாணிப்பதிவுக்கும் இனி நிறைய பேர் வரலாம் இன்பம் பெறலாம்.
---------------------------------------
நான் என்னோட எட்டு வருடமா உபயோகப்படுத்துற செல்போன் கம்பெனிய மாத்தலாம்கிற நோக்கத்தில் , இரண்டு வாரத்துக்கு முன்னாடி இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஓசி செல்போன் ஆர்டர் பண்ணி இருந்தேன். அதிலே ஒன்னு வீடு வந்து சேர்ந்தது, இன்னொன்னு வரலை. சரின்னு இன்னைக்கு இரண்டாவது முறையா கஷ்டமர் சர்வீஸுக்கு பேசினேன் 2 மணிநேர காத்திருத்தல் மட்டும் உரையாடல், கடைசில ரிபர்பிஸ்டு போன் வேணும்னா அனுப்புறோம் புதுசா ஓசி போன் இப்ப இல்லைன்னு சொன்னாங்க. என்னோட தற்போதைய போன் கம்பெனிகாரன் கொடுத்து வெச்சவன் போல, வீட்டிற்கு வந்த ஒரு போனையும் திருப்பி அனுப்ப போறேன்.இது எதுக்கு பதிவான்னு கேக்கறீங்க தானே , ரொம்ப கடுப்புல இருக்கேன் யாரையாவது அடிக்கனும் போல இருந்துச்சு அதான் டைப் அடிச்சிட்டேன்.
------------------------------------
கல்லூரி சாலை:
இஞ்சினியரிங் காலேஜ்ல சேர்ந்த வருடம், +2 ல ஒக்கேசனல் குரூப் எடுத்து படிச்ச பசங்களுக்கு அறிவியல் பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவார்கள் அதில் ஒரு மாணவர் கேட்ட சந்தேகம் இது.
கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கேட்ட சந்தேகம்.
சார் முழங்கையை முன்பக்கமா மடக்க முடியுது , ஏன் சார் பின் பக்கம் மடக்க முடியல?
இந்த கேள்வி நான் கேக்கலங்க ஏன்னா நான் +2 ல ஒக்கேசனல் குரூப் இல்லை. அப்புரம் எப்படித்தெரியும். எல்லாம் செவி வழிச்செய்திதான்.
--------------------------
நான் எழுதிய முதல் கொலைவெறிக்கவுஜ
நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.
Tuesday, June 16, 2009
Monday, June 15, 2009
OOPS பிரியாணி.
ஹலோ மாப்பிள்ளை நல்லாருக்கியா ,என்னமோ object oriented programming, OOPS methodology அப்படின்னு ஜல்லி அடிக்கிறாங்க எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது, தெரிஞ்சா கொஞ்சம் விளக்குடா மாப்பிள்ளை.
அது ஒன்னும் பெரிய விசயம் இல்லடா, நீ திங்கிர ஒரு குண்டான் பிரியாணி எப்படி பண்றது அப்படின்னு கத்துக்கிட்டாலே OOPS கத்துக்கலாம்டா.
பிரியாணியா இப்பவே பசிக்குதுடா, சரி சொல்லு உடனே பண்ணி சாப்பிட்டுருவோம்.
பிரியாணி அப்படிங்கறது ஒரு object. ஆனால் அதுல நிறைய object இருக்கு, அதாவது அரிசி,தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி,புதினா,நெய் உப்பு, கறி சிக்கன்/மட்டன்/முட்டை மற்றும் பிரியாணி மசாலான்னு இதெல்லாந்தான்.
இதுதான் எல்லாருக்கும் தெரியுமே.
எல்லாருக்கும் தெரிஞ்சதுதான், அதையே இங்கிலீஸ்ல ஜல்லி அடிச்சா பயமா இருக்கும் அவ்வளவுதான். இப்ப பிரியாணி எப்படி பண்றதுன்னு OOPS ரெசிப்பீ தரேன் அப்படியே பாலோ பண்ணு.
அரிசி, உப்பு, தக்காளி,வெங்காயம், பிரியாணி மசாலா, கறி,புதினா இதெல்லாம் தனித்தனி ஆப்ஜெக்ட், இதையெல்லாம் வெச்சி பிரியாணி பண்ணா அதுக்கு பேரு பிரியாணி ஆப்ஜெக்ட்.
புரியுது, எல்லா ஆப்ஜெக்டும் தனித்தனியா இருக்கு பிரியாணி மசாலான்னு ஒன்னு இருக்கே அதுல என்ன என்ன சாமான் (ஆப்ஜெக்டு) இருக்கு.
அது உனக்கு தேவையில்லை, அதுக்கு பேருதான் டேட்டா என்காப்சுலேசன், இன்பர்மேசன் ஹைடிங், புரியிற மாதிரி சொன்னா தொழில் ரகசியம்.
ஓ இப்ப புரியுது, சரி இப்ப ஊப்ஸ் பிரியாணிக்கு போகலாம்.
படத்தை கிளிக்கி பார்க்கவும்.

பொது அமைப்பு பிரியாணி{
அடுப்பு = அடுப்பு.நிரந்தர பயன் அடுப்பு().
அடுப்பு.பற்றவை();
அடுப்பு.தழல்(நடுத்தரதிற்கு மேல்)
சட்டி.நிரந்தர பயன் சட்டி().எடுசட்டி();
உதவி.வெட்டு(நீளம், 4, தக்காளி)
உதவி.வெட்டு(நீளம், 4, வெங்காயம்)
உதவி.அரை(இ.பூண்டு)
கொட்டுசட்டியில்(பொருள்)
சமை(5 நிமிடம்)
கலக்கு()
அரிசி(2);
தண்ணீர்(2 )
கறி()
சட்டு.மூடு()
சமை(30 நிமிடம்)
தழல்(மெதுவாக)
அடுப்பு.அனை();
}
இதுல பாத்தீங்கண்ணா என்ன கறி வேணும்னா போட்டுக்கலாம், அதுக்கு பேருதான் dependancy injection, இந்த spring framework மாதிரி. கறி போடலைன்னா வெஜ் பிரியாணி அவ்ளோதான்.
ஓ நம்ம ஆந்திராக்காரு வெச்சிருக்கிற மதுரை வீரமுனியாண்டில தக்காளி சாதத்துல என்ன பிரியாணி கேக்குறமோ அதுக்கு ஏத்த மாதிரி கறி வெக்கிறதுக்கு பேருதான் dependancy injection ஆ.
ஆமாம் மாப்பிள்ளை, சரி என்னா நான் சொன்ன படி பிரியாணி பண்ணியா எப்படி வந்திருக்கு.சட்டிய திறந்து பாத்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதானே.
போச்சுடா, எல்லாம் அப்படியே இருக்கு, எதுவும் வதங்கல வேகல சும்மா மிக்ஸ் ஆகிப்போயி இருக்கு.
ஏன் என்ன ஆச்சு.
அடுப்ப ஆன் பண்ணேன் எல்லாம் பண்ணேன் ஆனா கரண்டு இல்லை மாப்பிள்ளை. இப்ப என்ன பண்றது.
நீ சென்னைல இருக்கங்கிற்தயே மற்ந்துட்டேன்,கரண்டு third party interface இல்ல அடிக்கடி கட்டு இருக்கும் கிறது scope ல இல்லப்பா.
ரியல் டைம் ஆப்ஜெக்ட மாடலா வெச்சு மென்பொருள் உருவாக்கினா நல்லா வருது, ஆனா மென்பொருள் ஆப்ஜெக்ட மாடல வெச்சு ரியல்டைம் பிரியாணி பண்ண பெயிலாடுது. ஆனாலும் இது third party interface failure தான் .சரி ஒரு work around பண்ணலாம்.
என்னாது
நீதான் சும்மா அரிசியவே ஒரு படி திம்பியே , இப்ப தக்காளி வெங்காயம்லாம் போட்டு ஊறி வாசமா இருக்குமே சும்மா அப்படியே ஒரு காட்டு காட்டு.
இல்லாட்டி பழைய முறைப்படி ஒரு மண்பானைல எல்லாத்தையும் கொட்டி நல்லா விறகு அடுப்புல வெச்சு பொங்கி சாப்பிடு.
அது ஒன்னும் பெரிய விசயம் இல்லடா, நீ திங்கிர ஒரு குண்டான் பிரியாணி எப்படி பண்றது அப்படின்னு கத்துக்கிட்டாலே OOPS கத்துக்கலாம்டா.
பிரியாணியா இப்பவே பசிக்குதுடா, சரி சொல்லு உடனே பண்ணி சாப்பிட்டுருவோம்.
பிரியாணி அப்படிங்கறது ஒரு object. ஆனால் அதுல நிறைய object இருக்கு, அதாவது அரிசி,தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி,புதினா,நெய் உப்பு, கறி சிக்கன்/மட்டன்/முட்டை மற்றும் பிரியாணி மசாலான்னு இதெல்லாந்தான்.
இதுதான் எல்லாருக்கும் தெரியுமே.
எல்லாருக்கும் தெரிஞ்சதுதான், அதையே இங்கிலீஸ்ல ஜல்லி அடிச்சா பயமா இருக்கும் அவ்வளவுதான். இப்ப பிரியாணி எப்படி பண்றதுன்னு OOPS ரெசிப்பீ தரேன் அப்படியே பாலோ பண்ணு.
அரிசி, உப்பு, தக்காளி,வெங்காயம், பிரியாணி மசாலா, கறி,புதினா இதெல்லாம் தனித்தனி ஆப்ஜெக்ட், இதையெல்லாம் வெச்சி பிரியாணி பண்ணா அதுக்கு பேரு பிரியாணி ஆப்ஜெக்ட்.
புரியுது, எல்லா ஆப்ஜெக்டும் தனித்தனியா இருக்கு பிரியாணி மசாலான்னு ஒன்னு இருக்கே அதுல என்ன என்ன சாமான் (ஆப்ஜெக்டு) இருக்கு.
அது உனக்கு தேவையில்லை, அதுக்கு பேருதான் டேட்டா என்காப்சுலேசன், இன்பர்மேசன் ஹைடிங், புரியிற மாதிரி சொன்னா தொழில் ரகசியம்.
ஓ இப்ப புரியுது, சரி இப்ப ஊப்ஸ் பிரியாணிக்கு போகலாம்.
படத்தை கிளிக்கி பார்க்கவும்.
பொது அமைப்பு பிரியாணி{
அடுப்பு = அடுப்பு.நிரந்தர பயன் அடுப்பு().
அடுப்பு.பற்றவை();
அடுப்பு.தழல்(நடுத்தரதிற்கு மேல்)
சட்டி.நிரந்தர பயன் சட்டி().எடுசட்டி();
உதவி.வெட்டு(நீளம், 4, தக்காளி)
உதவி.வெட்டு(நீளம், 4, வெங்காயம்)
உதவி.அரை(இ.பூண்டு)
கொட்டுசட்டியில்(பொருள்)
சமை(5 நிமிடம்)
கலக்கு()
அரிசி(2);
தண்ணீர்(2 )
கறி()
சட்டு.மூடு()
சமை(30 நிமிடம்)
தழல்(மெதுவாக)
அடுப்பு.அனை();
}
இதுல பாத்தீங்கண்ணா என்ன கறி வேணும்னா போட்டுக்கலாம், அதுக்கு பேருதான் dependancy injection, இந்த spring framework மாதிரி. கறி போடலைன்னா வெஜ் பிரியாணி அவ்ளோதான்.
ஓ நம்ம ஆந்திராக்காரு வெச்சிருக்கிற மதுரை வீரமுனியாண்டில தக்காளி சாதத்துல என்ன பிரியாணி கேக்குறமோ அதுக்கு ஏத்த மாதிரி கறி வெக்கிறதுக்கு பேருதான் dependancy injection ஆ.
ஆமாம் மாப்பிள்ளை, சரி என்னா நான் சொன்ன படி பிரியாணி பண்ணியா எப்படி வந்திருக்கு.சட்டிய திறந்து பாத்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதானே.
போச்சுடா, எல்லாம் அப்படியே இருக்கு, எதுவும் வதங்கல வேகல சும்மா மிக்ஸ் ஆகிப்போயி இருக்கு.
ஏன் என்ன ஆச்சு.
அடுப்ப ஆன் பண்ணேன் எல்லாம் பண்ணேன் ஆனா கரண்டு இல்லை மாப்பிள்ளை. இப்ப என்ன பண்றது.
நீ சென்னைல இருக்கங்கிற்தயே மற்ந்துட்டேன்,கரண்டு third party interface இல்ல அடிக்கடி கட்டு இருக்கும் கிறது scope ல இல்லப்பா.
ரியல் டைம் ஆப்ஜெக்ட மாடலா வெச்சு மென்பொருள் உருவாக்கினா நல்லா வருது, ஆனா மென்பொருள் ஆப்ஜெக்ட மாடல வெச்சு ரியல்டைம் பிரியாணி பண்ண பெயிலாடுது. ஆனாலும் இது third party interface failure தான் .சரி ஒரு work around பண்ணலாம்.
என்னாது
நீதான் சும்மா அரிசியவே ஒரு படி திம்பியே , இப்ப தக்காளி வெங்காயம்லாம் போட்டு ஊறி வாசமா இருக்குமே சும்மா அப்படியே ஒரு காட்டு காட்டு.
இல்லாட்டி பழைய முறைப்படி ஒரு மண்பானைல எல்லாத்தையும் கொட்டி நல்லா விறகு அடுப்புல வெச்சு பொங்கி சாப்பிடு.
Sunday, June 14, 2009
நானும் அமெரிக்கா போறேன்.
முந்திய பகுதி
குடுகுடுப்பை: வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.
ஒருவழியா வேலை கிடைச்சி வெற்றிகரமா வாழ்க்கை திருவல்லிக்கேணி மேன்சனில் வாழ்க்கை தொடர்ந்தது, இரண்டு வேலை நல்ல சாப்பாடு, வில்ஸ் பில்ட்டர் அப்படின்னு நல்லபடியா கழிந்தது.காலை உணவு எப்போதும் கிடையாது, காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்.
திடீரென்று ஒருநாள் எங்க அலுவலக ஹெச்சார் கூப்பிட்டு உனக்கு பிராட்விசன்(Broadvision) training ஒரு மாசம் இருக்கு நீங்க நாளைலேந்து அந்த பில்டிங் போகனும் அப்படின்னாரு. எனக்கு ஒன்னும் புரியல ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்கன்னு நெனச்சிட்டேன்.
அங்கே போய் பாத்தப்ப தெரிஞ்சது அது ஒரு ஈகாமர்ஸ் சாப்ட்வேர் அதுக்கு டிரெய்னிங்,அமெரிக்காவிலேந்து ஒருத்தர் வந்து பாடம் நடத்தப்போறாருன்னு, பாடம் நடத்தும்போது அவரு சொல்லிட்டாரு நீங்க கூடிய விரைவில் அமெரிக்கா போகனும். ஹெச்சார் என்னோட பாஸ்போர்ட் வாங்கி உடனடியா B1 ஸ்டாம்பிங் பண்ணிட்டாங்க.
கூடிய விரைவில் அமெரிக்கா போகப்போறோம், அங்கே உள்ள உணவு பழக்கத்து தயாராகனும்னு முடிவு பண்ணி அதுவரைக்கும் பொன்னுசாமி, அஞ்சப்பர்னு மதியம் வலைச்சு அடிச்சு சாப்பிட்டு இருந்த நண்பர்கள் சிலர், கீரீம்ஸ் ரோட்டில் உள்ள அமெரிக்க இத்தாலியன் ஈட்டரிங்கற ரெஸ்டாரண்ட்ல லஞ்சப்போணோம். ஆளாளுக்கு என்னமோ ஆர்டர் பண்ணாங்க வந்து இருந்த எல்லாரும் என்னமோ பாஸ்டா அப்படி இப்படின்னி ஆர்டர் பண்ணாங்க, நான் என்னோட நண்பர் ஒருத்தன்கிட்ட என்னடா ஆர்டர் பண்ணலாம்னு கேட்டேன், அவன் சொன்னபடி சிக்கன் பர்கர் ஆர்டர் பண்ணியாச்சு.
கொண்டு வந்து கொடுத்தான் 50 காசு பண்ணுக்கு நடுவில ஒரு சிக்கன் வெச்சி அரை அடி உயரத்துல, நானும் அதை வாயில கடிக்கறதுக்குள்ள வாயெல்லாம் வலிக்குது, ஒரு வழியா கண்ணுல தண்ணிவர வாய் வலிக்க வலிக்க முதல் பர்கரில் கால் வாசி சாப்பிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடி வந்தோம்.ஏற்கனவே இந்த பண்ணுல எனக்கு ஒரு அனுபவம் இருக்கு, திருவல்லிக்கேணி ரத்னா கபேல பாவ் பஜ்ஜின்னா என்னன்னு தெரியாம ஆர்டர் பண்ணி பண்ணையும் , வெங்காயத்தயும் வெச்சத பாத்து, பக்கத்து சீட்டில இரண்டு இட்லிக்கு குண்டான் சாம்பார் குடிக்கிறவன பாத்து வயித்தெரிசலோட வந்திருக்கேன்.
வழக்கம் போல இந்த வாட்டி B1 விசால யாரும் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க,ஆறு மாசம் இப்படியே போச்சு, அதுக்குள்ள H1விசா பண்ணிடாங்க. திரும்பவும் நாள் குறிச்சிட்டாங்க, நானும் கோட், சூட் குளிருக்கு ஜாக்கெட் எல்லாம் வாங்கி தயாராகிட்டென். எங்க ஊர்லேந்து எங்கப்பா அண்ணன் , கல்பாக்கம் நண்பர்கள் எல்லாரும் வழியனுப்ப வந்திட்டாங்க, எல்லாருக்கும் திருவல்லிக்கேணில ரூம் போட்டாச்சு. வழக்கம் போல ஒரு வாரம் இன்னைக்கு நாளைக்கு இழுத்ததில எங்கப்பா நான் ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டார்.
ஒருவழியா மூன்று பேர் அடுத்த வாரத்தில் ஒருநாள் கிளம்பினோம்.அதில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்கா சென்று வந்தவர், நீங்க கவலைப்படாதீங்க என் பின்னாடியே வாங்க நான் பாத்துக்கறேன்னு சொன்னார். பிரிட்டிஸ் ஏர்வேய்ஸ் பிளைட் லண்டன் சென்று பின்னர் சிகாகோ வரை செல்லவேண்டும். ஏர்போர்ட்டில் அவர் வழிகாட்டுதலில் அவர் பின்னாடியே சென்றோம்.அவர் செக்கின் பண்ணி முடித்துவிட்டார். அவருக்கு பின்னால் நான் எனக்கு பின்னால் என் நண்பர். செக்கின் செய்பவர் என்னை சிறிது நேரம் காத்திருக்க சொன்னார், இந்த பிளைட் ஓவர்புக் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆஹா நம்மள திருப்பி அனுப்பிச்சிட்டாங்கடான்னு நானும் நண்பனும் முடிவு பண்ணிட்டோம்.
கவலைப்படாதீங்க உங்க டிக்கெட் அப்கிரேட் பண்ணி நீங்க business class ல போறீங்கன்னாங்க, அப்படின்னா என்னான்னு கூட எனக்கு தெரியாது, ஆனா நம்மள திருப்பி அனுப்பலன்னு மட்டும் தெரிஞ்சது. சென்னை, லண்டன் பயணம் மிக சொகுசு, நினைச்ச நேரமெல்லாம் சரக்கு சாப்பாடு, உயர்தரமான இருக்கை , முதல் விமானப்பயணம் இனித்தது.
லண்டனில் இருந்து சிகாகோ மீண்டும் economy class க்கு மாத்திட்டாங்க, அப்பதான் தெரிஞ்சது 36 ம் நம்பர் பஸ்ஸுல படிக்கட்டுல கர்ச்சிப்ப போட்டு உட்காந்து வர வசதி கூட இதில இல்லையேன்னு, முதுகு பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. சிகாகோல வந்து இறங்கியாச்சு கூப்பிட்டு போக யாரும் வரலை.நல்லவேலையா அனுபவசாலி கூடவே இருந்ததினால் அவரு வழக்கமா வருகிற கேப் டிரைவருக்கு போன் பண்ணி ஒரு வழியா ஹோட்டல் அறையை அடைந்தேன்.
இனி எதிர்பாத்தவை எதிர்பாராதவை.......
குடுகுடுப்பை: வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.
ஒருவழியா வேலை கிடைச்சி வெற்றிகரமா வாழ்க்கை திருவல்லிக்கேணி மேன்சனில் வாழ்க்கை தொடர்ந்தது, இரண்டு வேலை நல்ல சாப்பாடு, வில்ஸ் பில்ட்டர் அப்படின்னு நல்லபடியா கழிந்தது.காலை உணவு எப்போதும் கிடையாது, காலை உணவாக எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பொங்கல், சேமியாவின் பலனாக அதனை இன்று வரை மறந்துவிட்டேன்.
திடீரென்று ஒருநாள் எங்க அலுவலக ஹெச்சார் கூப்பிட்டு உனக்கு பிராட்விசன்(Broadvision) training ஒரு மாசம் இருக்கு நீங்க நாளைலேந்து அந்த பில்டிங் போகனும் அப்படின்னாரு. எனக்கு ஒன்னும் புரியல ஒருவேலை என்னுடைய அழகிய கண்களை பார்த்து இப்படி ஒரு விசனுக்கு அனுப்புறாங்கன்னு நெனச்சிட்டேன்.
அங்கே போய் பாத்தப்ப தெரிஞ்சது அது ஒரு ஈகாமர்ஸ் சாப்ட்வேர் அதுக்கு டிரெய்னிங்,அமெரிக்காவிலேந்து ஒருத்தர் வந்து பாடம் நடத்தப்போறாருன்னு, பாடம் நடத்தும்போது அவரு சொல்லிட்டாரு நீங்க கூடிய விரைவில் அமெரிக்கா போகனும். ஹெச்சார் என்னோட பாஸ்போர்ட் வாங்கி உடனடியா B1 ஸ்டாம்பிங் பண்ணிட்டாங்க.
கூடிய விரைவில் அமெரிக்கா போகப்போறோம், அங்கே உள்ள உணவு பழக்கத்து தயாராகனும்னு முடிவு பண்ணி அதுவரைக்கும் பொன்னுசாமி, அஞ்சப்பர்னு மதியம் வலைச்சு அடிச்சு சாப்பிட்டு இருந்த நண்பர்கள் சிலர், கீரீம்ஸ் ரோட்டில் உள்ள அமெரிக்க இத்தாலியன் ஈட்டரிங்கற ரெஸ்டாரண்ட்ல லஞ்சப்போணோம். ஆளாளுக்கு என்னமோ ஆர்டர் பண்ணாங்க வந்து இருந்த எல்லாரும் என்னமோ பாஸ்டா அப்படி இப்படின்னி ஆர்டர் பண்ணாங்க, நான் என்னோட நண்பர் ஒருத்தன்கிட்ட என்னடா ஆர்டர் பண்ணலாம்னு கேட்டேன், அவன் சொன்னபடி சிக்கன் பர்கர் ஆர்டர் பண்ணியாச்சு.
கொண்டு வந்து கொடுத்தான் 50 காசு பண்ணுக்கு நடுவில ஒரு சிக்கன் வெச்சி அரை அடி உயரத்துல, நானும் அதை வாயில கடிக்கறதுக்குள்ள வாயெல்லாம் வலிக்குது, ஒரு வழியா கண்ணுல தண்ணிவர வாய் வலிக்க வலிக்க முதல் பர்கரில் கால் வாசி சாப்பிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடி வந்தோம்.ஏற்கனவே இந்த பண்ணுல எனக்கு ஒரு அனுபவம் இருக்கு, திருவல்லிக்கேணி ரத்னா கபேல பாவ் பஜ்ஜின்னா என்னன்னு தெரியாம ஆர்டர் பண்ணி பண்ணையும் , வெங்காயத்தயும் வெச்சத பாத்து, பக்கத்து சீட்டில இரண்டு இட்லிக்கு குண்டான் சாம்பார் குடிக்கிறவன பாத்து வயித்தெரிசலோட வந்திருக்கேன்.
வழக்கம் போல இந்த வாட்டி B1 விசால யாரும் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க,ஆறு மாசம் இப்படியே போச்சு, அதுக்குள்ள H1விசா பண்ணிடாங்க. திரும்பவும் நாள் குறிச்சிட்டாங்க, நானும் கோட், சூட் குளிருக்கு ஜாக்கெட் எல்லாம் வாங்கி தயாராகிட்டென். எங்க ஊர்லேந்து எங்கப்பா அண்ணன் , கல்பாக்கம் நண்பர்கள் எல்லாரும் வழியனுப்ப வந்திட்டாங்க, எல்லாருக்கும் திருவல்லிக்கேணில ரூம் போட்டாச்சு. வழக்கம் போல ஒரு வாரம் இன்னைக்கு நாளைக்கு இழுத்ததில எங்கப்பா நான் ஊருக்கு போறேன்னு கிளம்பிட்டார்.
ஒருவழியா மூன்று பேர் அடுத்த வாரத்தில் ஒருநாள் கிளம்பினோம்.அதில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்கா சென்று வந்தவர், நீங்க கவலைப்படாதீங்க என் பின்னாடியே வாங்க நான் பாத்துக்கறேன்னு சொன்னார். பிரிட்டிஸ் ஏர்வேய்ஸ் பிளைட் லண்டன் சென்று பின்னர் சிகாகோ வரை செல்லவேண்டும். ஏர்போர்ட்டில் அவர் வழிகாட்டுதலில் அவர் பின்னாடியே சென்றோம்.அவர் செக்கின் பண்ணி முடித்துவிட்டார். அவருக்கு பின்னால் நான் எனக்கு பின்னால் என் நண்பர். செக்கின் செய்பவர் என்னை சிறிது நேரம் காத்திருக்க சொன்னார், இந்த பிளைட் ஓவர்புக் செய்யப்பட்டுள்ளது என்றார். ஆஹா நம்மள திருப்பி அனுப்பிச்சிட்டாங்கடான்னு நானும் நண்பனும் முடிவு பண்ணிட்டோம்.
கவலைப்படாதீங்க உங்க டிக்கெட் அப்கிரேட் பண்ணி நீங்க business class ல போறீங்கன்னாங்க, அப்படின்னா என்னான்னு கூட எனக்கு தெரியாது, ஆனா நம்மள திருப்பி அனுப்பலன்னு மட்டும் தெரிஞ்சது. சென்னை, லண்டன் பயணம் மிக சொகுசு, நினைச்ச நேரமெல்லாம் சரக்கு சாப்பாடு, உயர்தரமான இருக்கை , முதல் விமானப்பயணம் இனித்தது.
லண்டனில் இருந்து சிகாகோ மீண்டும் economy class க்கு மாத்திட்டாங்க, அப்பதான் தெரிஞ்சது 36 ம் நம்பர் பஸ்ஸுல படிக்கட்டுல கர்ச்சிப்ப போட்டு உட்காந்து வர வசதி கூட இதில இல்லையேன்னு, முதுகு பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. சிகாகோல வந்து இறங்கியாச்சு கூப்பிட்டு போக யாரும் வரலை.நல்லவேலையா அனுபவசாலி கூடவே இருந்ததினால் அவரு வழக்கமா வருகிற கேப் டிரைவருக்கு போன் பண்ணி ஒரு வழியா ஹோட்டல் அறையை அடைந்தேன்.
இனி எதிர்பாத்தவை எதிர்பாராதவை.......
Thursday, June 11, 2009
சென்னை ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் ஒரு அனுபவம்.
இது நடந்தது 5 வருடத்துக்கு முன்னால், சென்னையில் ஒரு வீடோ அல்லது இடமோ வாங்கலாம் என்ற நோக்கத்தில் நண்பர்கள் /உறவினர்கள் மூலம் சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளை பார்த்து சில இடங்களை பார்க்க சென்றோம்.
முதலில் ஒரு ஏஜெண்ட் வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு இடத்தை காட்டினார், விலை இவ்வளவு என்றார். ரொம்ப நல்ல இடம் சார் ரயில்வே டேசன் பக்கம் வாங்கிப்போடு சார்.
ஆமா நல்ல இடந்தான், இது CMDA அப்ரூவ்டா?
அன் அப்ரூவ்டுதான் சார் , அருமையான இடம் சார், சீக்கிரம் மூனு மடங்கா விலை போகும் சார்.
இங்கதான் கவனிக்கனும் "அன் அப்ரூவ்டுதான்" அன் சத்தம் மட்டும் வெளிய வராமல் ரொம்ப அருமையா பேசினார்.
வேண்டாம்னு சொல்லிட்டு இன்னொருத்தரை கூட்டிட்டு வேற இடம் பாத்தோம், சோலிங்கநல்லூர் அருகில் ரஜினிகாந்த ஆசிரமம் கட்ட வாங்கிப்போட்டிருக்கிற இடம் பக்கத்தில். அவர் நாந்தான் ரஜினிக்கு இந்த இடம் வாங்கிக்கொடுத்தேன், ரஜினி இப்படி, லதா அப்படின்னு பேசிட்டு வந்தார் நல்லா பொழுது போச்சு, ஆனா இடம் எனக்கு பிடிக்கலை.
மூன்றாவதா முகப்பேர் பக்கமா , ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், அவர் கொஞ்சம் பிரபலமானவர் சுருக்கமா சொல்லப்போனா தல ஏஜெண்ட், நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் போக, மீதி நேரம் அவர் கடையில் இருக்கும் அனைத்து சாமி போட்டோக்களையும் வணங்கிய படியே இருந்தார்.இவரைப்பார்க்க நிறைய அல்லக்கை ஏஜெண்டுகளும் வந்தபடியே இருந்தனர்.
அதில் ஒருவர்
வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா? உங்கள இன்னைக்கு பாக்க முடிஞ்சதே பெரிய விசயம்..
ஆமாமா நீங்க எப்படி இருக்கீங்க , பிஸினெஸ் எல்லாம் எப்படி போகுது, நான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஒன்னு பண்றேன் அதுனால கொஞ்சம் பிஸிதான். என்ன விசயம் சொல்லுங்க.
நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன சார் கவலை.நாங்க மெக்காவுக்கு போறதுக்கு எப்படி ஒரு அமைப்பு அமையனுமோ , அது மாதிரி உங்களுக்கு ஒரு நல்ல அமைப்பு வந்திருக்கு அதான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ண முடியுது.
ஆமாம் அமைப்புதான் ரொம்ப முக்கியம். உங்களுக்கு சீக்கிரம் வரும் நீங்களும் மெக்கா சீக்கிரம் போவீங்க நானும் உங்களுக்காக முருகன்கிட்ட வேண்டிக்கிறேன். என்ன எதாவது இடம் இருக்கா?
ரொம்ப நல்லது, ஆமாம் ஒரு இடம் இருக்கு சார், அம்பத்தூர் பக்கத்தில ஒரு 10 கிரவுண்ட் வருது, அருமையான பீஸு, யாரவது வெளிநாட்டு பார்ட்டி இருந்தா சொல்லுங்க சார்.
வெளிநாட்டு பார்ட்டிக்கெல்லாம் நல்ல இடமா இருக்கனும்யா, அவங்களுக்கு வீடு கட்டத்தான் தேவைப்படும், அம்பத்தூர் இண்டஸ்டிரியல் ஏரியாவில இருக்கா வெளியவா?
இண்டஸ்டிரியல் ஏரியா ஒட்டிதான் இருக்கு, பழைய பில்டிங்கெல்லாம் இடிச்சிரலாம் , அருமையான உருப்படி சார் , கிரவுண்ட் அஞ்சு ரூவாக்கு முடிக்கலாம் சார்.
தல ஏஜெண்ட் என்னைப்பாத்து என்ன சார் சீப்பா பத்து கிரவுண்ட் வருது முடிச்சிரலாமா?
இல்லங்க எனக்கு ஒரே ஒரு கிரவுண்ட் வீடு கட்ட வேணும் இது ஒத்து வர மாதிரி தெரியல.
தம்பி வெளிநாட்டுல இருக்கியலா, அருமையான உருப்படி தம்பி
இல்லங்க எனக்கு வேணாம் நான் வரேன்.
முதலில் ஒரு ஏஜெண்ட் வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு இடத்தை காட்டினார், விலை இவ்வளவு என்றார். ரொம்ப நல்ல இடம் சார் ரயில்வே டேசன் பக்கம் வாங்கிப்போடு சார்.
ஆமா நல்ல இடந்தான், இது CMDA அப்ரூவ்டா?
அன் அப்ரூவ்டுதான் சார் , அருமையான இடம் சார், சீக்கிரம் மூனு மடங்கா விலை போகும் சார்.
இங்கதான் கவனிக்கனும் "அன் அப்ரூவ்டுதான்" அன் சத்தம் மட்டும் வெளிய வராமல் ரொம்ப அருமையா பேசினார்.
வேண்டாம்னு சொல்லிட்டு இன்னொருத்தரை கூட்டிட்டு வேற இடம் பாத்தோம், சோலிங்கநல்லூர் அருகில் ரஜினிகாந்த ஆசிரமம் கட்ட வாங்கிப்போட்டிருக்கிற இடம் பக்கத்தில். அவர் நாந்தான் ரஜினிக்கு இந்த இடம் வாங்கிக்கொடுத்தேன், ரஜினி இப்படி, லதா அப்படின்னு பேசிட்டு வந்தார் நல்லா பொழுது போச்சு, ஆனா இடம் எனக்கு பிடிக்கலை.
மூன்றாவதா முகப்பேர் பக்கமா , ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், அவர் கொஞ்சம் பிரபலமானவர் சுருக்கமா சொல்லப்போனா தல ஏஜெண்ட், நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் போக, மீதி நேரம் அவர் கடையில் இருக்கும் அனைத்து சாமி போட்டோக்களையும் வணங்கிய படியே இருந்தார்.இவரைப்பார்க்க நிறைய அல்லக்கை ஏஜெண்டுகளும் வந்தபடியே இருந்தனர்.
அதில் ஒருவர்
வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா? உங்கள இன்னைக்கு பாக்க முடிஞ்சதே பெரிய விசயம்..
ஆமாமா நீங்க எப்படி இருக்கீங்க , பிஸினெஸ் எல்லாம் எப்படி போகுது, நான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஒன்னு பண்றேன் அதுனால கொஞ்சம் பிஸிதான். என்ன விசயம் சொல்லுங்க.
நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன சார் கவலை.நாங்க மெக்காவுக்கு போறதுக்கு எப்படி ஒரு அமைப்பு அமையனுமோ , அது மாதிரி உங்களுக்கு ஒரு நல்ல அமைப்பு வந்திருக்கு அதான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ண முடியுது.
ஆமாம் அமைப்புதான் ரொம்ப முக்கியம். உங்களுக்கு சீக்கிரம் வரும் நீங்களும் மெக்கா சீக்கிரம் போவீங்க நானும் உங்களுக்காக முருகன்கிட்ட வேண்டிக்கிறேன். என்ன எதாவது இடம் இருக்கா?
ரொம்ப நல்லது, ஆமாம் ஒரு இடம் இருக்கு சார், அம்பத்தூர் பக்கத்தில ஒரு 10 கிரவுண்ட் வருது, அருமையான பீஸு, யாரவது வெளிநாட்டு பார்ட்டி இருந்தா சொல்லுங்க சார்.
வெளிநாட்டு பார்ட்டிக்கெல்லாம் நல்ல இடமா இருக்கனும்யா, அவங்களுக்கு வீடு கட்டத்தான் தேவைப்படும், அம்பத்தூர் இண்டஸ்டிரியல் ஏரியாவில இருக்கா வெளியவா?
இண்டஸ்டிரியல் ஏரியா ஒட்டிதான் இருக்கு, பழைய பில்டிங்கெல்லாம் இடிச்சிரலாம் , அருமையான உருப்படி சார் , கிரவுண்ட் அஞ்சு ரூவாக்கு முடிக்கலாம் சார்.
தல ஏஜெண்ட் என்னைப்பாத்து என்ன சார் சீப்பா பத்து கிரவுண்ட் வருது முடிச்சிரலாமா?
இல்லங்க எனக்கு ஒரே ஒரு கிரவுண்ட் வீடு கட்ட வேணும் இது ஒத்து வர மாதிரி தெரியல.
தம்பி வெளிநாட்டுல இருக்கியலா, அருமையான உருப்படி தம்பி
இல்லங்க எனக்கு வேணாம் நான் வரேன்.
Thursday, May 28, 2009
பெற்றோர்களை இழந்த ஈழக்குழந்தைகளை தமிழகம் தத்தெடுக்கவேண்டும்.
ஈழப்போரில் விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் அழித்து முடித்த குடும்பங்களில் எஞ்சியுள்ள குழந்தைகளை, குறைந்த பட்சம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தமிழக அரசு , மத்திய அரசு உதவியுடன் தத்தெடுக்கவேண்டும்.
அவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் கல்வியை தமிழகம் வழங்கவேண்டும்.செலவை தமிழக மக்கள்,புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நிதி திரட்டுவதன் மூலமும், தன்னார்வத்தொண்டு நிறுவணங்கள் மற்றும் தமிழக அரசும் ஏற்கலாம்.
இவ்வளவு பெரிய மனித அவலத்தை தடுக்க இயலாத நாம் அதில் சிலருக்கு கல்வியாவது கொடுத்து, மாறுபட்ட இந்த உலகச்சூழலில் இந்த அனாதைக்குழந்தைகள் தன் வாழ்க்கைப்பாதையை அமைத்துச்செல்ல வழி செய்து கொடுக்கலாம்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளை முன்னிலைப்படுத்துவற்கு காரணம், குறைந்த பட்சம் அரசியல் தீர்வென்ற பெயரில் இலங்கையில் வாழும் உரிமை எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு கொடுக்கப்படலாம். ஆனால் அப்போதும் இந்தக்குழந்தைகளை யாரும் கவனிக்கும் நிலையில் மிச்சமுள்ள தமிழ்க்குடும்பங்கள் இருக்காது.
மாநில அரசிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் முயற்சிக்கவேண்டும்.
அவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் கல்வியை தமிழகம் வழங்கவேண்டும்.செலவை தமிழக மக்கள்,புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நிதி திரட்டுவதன் மூலமும், தன்னார்வத்தொண்டு நிறுவணங்கள் மற்றும் தமிழக அரசும் ஏற்கலாம்.
இவ்வளவு பெரிய மனித அவலத்தை தடுக்க இயலாத நாம் அதில் சிலருக்கு கல்வியாவது கொடுத்து, மாறுபட்ட இந்த உலகச்சூழலில் இந்த அனாதைக்குழந்தைகள் தன் வாழ்க்கைப்பாதையை அமைத்துச்செல்ல வழி செய்து கொடுக்கலாம்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளை முன்னிலைப்படுத்துவற்கு காரணம், குறைந்த பட்சம் அரசியல் தீர்வென்ற பெயரில் இலங்கையில் வாழும் உரிமை எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு கொடுக்கப்படலாம். ஆனால் அப்போதும் இந்தக்குழந்தைகளை யாரும் கவனிக்கும் நிலையில் மிச்சமுள்ள தமிழ்க்குடும்பங்கள் இருக்காது.
மாநில அரசிடம் தொடர்பில் இருக்கும் பதிவர்கள் முயற்சிக்கவேண்டும்.
Tuesday, May 12, 2009
ஆணழகன் அப்துல்லாவுடன் ஒரு அனுபவம்.
அப்துல்லா என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர், இவர் அணியும் கூலிங் கிலாஸ்க்காக அவரை நாங்கள் ஆணழகன் என்றே அழைப்பது வழக்கம்.ஒரு நாளும் இல்லாமல் திடீரென இந்த வாரம் தனது வீட்டுக்கு அழைத்தான்.
புதுக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான திருமயத்தில் உள்ள கோவில் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லா இருக்கும்.பாட்டுக்கச்சேரி,கரகாட்டம்,குறவன் குறத்தி ஆட்டம் அதுவும் நத்தம் சாந்தி,புதுக்கோட்டை திலகவதின்னு பிரபலங்களின் ஆட்டம் .(உண்மையா இப்படி இரண்டு பேரு இருக்காங்களா). வந்து பாரு ரகளையா இருக்கும். உடனே கெளம்புவோம் அப்படின்னான்.
நமக்குதான் சோறு கண்ட இடம் சொர்க்கமாச்சே பிரியாணி வாய்ப்பை விடுவமா.
நான்,புதுக்கோட்டையை சேர்ந்த இன்னொரு நண்பர் மற்றும் அப்துல்லா மூவரும் இரவு 7 மணியளவிற்கு திருமயம் வந்து சேர்ந்தோம். முன்னமே சொல்லியிருந்ததால் மீன் சமைத்து வைத்திருந்தார்கள் நல்லா சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.
அப்துல்லாவின் தந்தை ஆசிரியர், ஆசிரியருக்கே உரித்தான அனைத்து கேள்விகளையும் கேட்டார். நாங்களும் மழுப்பி அப்படி இப்படி பதில் சொல்லி தப்பிச்சோம்.
இரவு 11 மணியளவில் திருவிழாவிற்கு சென்றோம், இன்று நிகழ்ச்சியில் வள்ளி திருமணம் நாடகம். பபூன் வந்து வாய் கூசாமல் கெட்ட ஜோக்குகளை அடித்தார். அனைவரும் பரவசப்பட்டு சிரித்தோம். அப்துல்லா கொஞ்சம் அதிகம்.
வீட்டுக்கு வந்து தூங்கினோம், அடுத்த நாள் ஒரு மலையை குடைந்த குளத்தில் காலை குளியல். வழக்கம் போல நல்ல சாப்பாடு மட்டன் பிரியாணியுடன். வழக்கம் போல் அப்துல்லா அப்பாவின் கேள்விகள்.
இன்னைக்கி பகலில் திருமயம் கோட்டை பார்க்க போனோம். நல்ல அழகான கோட்டை, மேலே ஒரு சுணை இருந்தது , தண்ணீர் பச்சை கலரில் இருந்தது, வேடிக்கை பார்ப்பவர்கள் அதனை தூர்த்தே தீருவது என்ற முடிவில் சிறிய கற்களை எடுத்து சுணையில் போட்டனர்.அப்துல்லாவும் தன் பங்கிற்கு ஒரு பெரிய கல்லை போட்டார்.
கீழே ஒரு கோவில் அங்கு யாரும் அதிகம் வருவதில்லை போல இருந்தது, என்னோட வந்த நண்பர் கொஞ்சம் பக்தி அதிகம், கோவிலுக்கு சென்றோம்.கோவிலின் அழகை ரசித்தேன்.
அப்துல்லா ஆவலோடு எதிர் பார்த்த இரவு நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனது, முதலில் குறவன் குறத்தி ஆட்டம் பார்க்க போனோம், ஆபாசத்தின் உச்சகட்டம், தூக்கம் வேறு கண்ணை சுழற்றியது, அந்த பக்கம் பாட்டுக்கச்சேரி அங்கே போனோம் இளையராஜா பாடல்களை கொலை செய்து கொண்டிருந்தார்கள். சரிடா வீட்டுக்கு போலாம்னேன், நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தோம், முன் ஹாலில் அனைவரும் பாய் விரித்து தூங்கினோம்.
திடீரென்று விழித்து பார்த்தேன், இருவரையும் காணவில்லை. அப்படி, இப்படி கஷ்டப்பட்டு புது இடத்தில எப்படியோ தூங்கிட்டேன். அப்துல்லா இப்படி தனியா விட்டுட்டு போவன்னு நான் எதிர் பார்க்கலை.
காலையில கேட்டேன் எங்கடா போனிங்க? அதுக்கு இங்கதாண்டா தூங்கினோம் அப்படின்னு வாய் கூசாம் பொய் சொன்னங்க ரெண்டு பேரும்.டேய் நான் முழிச்சிட்டுதான் இருந்தேன் சொல்லுங்கடான்னு கேட்டேன்.
இல்ல குறவன் குறத்தி ஆட்டம் சூப்பர், அதை பார்க்காம எப்படிடா தூக்கம் வரும்,வாழைக்காய் வெட்டுறது வரைக்கும் பாத்துட்டு தான் வந்தோம்னு சிரிப்பு வேற. வந்ததே அதுக்குதானேன்னான் வேற.தனியா வந்தா எங்கப்பா ஆப்பு வெச்சுருவாரு அதுக்கு தான் நீங்க ரெண்டு பேரும் துணைக்கு ...
ரொம்ப பேசின உங்கப்பாகிட்ட நீ எதுக்கு வந்தங்கிற விசயத்தை சொல்ல வேண்டி வரும்னேன். நீ முதல்ல பஸ் ஏருன்னு ஏத்தி விட்டுதான் அடுத்த வேளை பார்த்தான்.
பி.கு1 : புதுகை.அப்துல்லாவும் எனது நண்பர் திருமயம் அப்துல்லாவும் சொந்தக்காரங்களான்னு புதுகை.அப்துல்லா அண்ணன் தான் சொல்லனும்.
பி.கு2 :முற்றிலும் பொய் கலந்த ஒரு உண்மை அனுபவம்.
பி.கு3 : கவர்ச்சிக்காக இந்த தலைப்பு
புது பதிவிற்கான வாய்ஸ் மறுபதிவு.
புதுக்கோட்டை அருகே உள்ள அவரது சொந்த ஊரான திருமயத்தில் உள்ள கோவில் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லா இருக்கும்.பாட்டுக்கச்சேரி,கரகாட்டம்,குறவன் குறத்தி ஆட்டம் அதுவும் நத்தம் சாந்தி,புதுக்கோட்டை திலகவதின்னு பிரபலங்களின் ஆட்டம் .(உண்மையா இப்படி இரண்டு பேரு இருக்காங்களா). வந்து பாரு ரகளையா இருக்கும். உடனே கெளம்புவோம் அப்படின்னான்.
நமக்குதான் சோறு கண்ட இடம் சொர்க்கமாச்சே பிரியாணி வாய்ப்பை விடுவமா.
நான்,புதுக்கோட்டையை சேர்ந்த இன்னொரு நண்பர் மற்றும் அப்துல்லா மூவரும் இரவு 7 மணியளவிற்கு திருமயம் வந்து சேர்ந்தோம். முன்னமே சொல்லியிருந்ததால் மீன் சமைத்து வைத்திருந்தார்கள் நல்லா சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.
அப்துல்லாவின் தந்தை ஆசிரியர், ஆசிரியருக்கே உரித்தான அனைத்து கேள்விகளையும் கேட்டார். நாங்களும் மழுப்பி அப்படி இப்படி பதில் சொல்லி தப்பிச்சோம்.
இரவு 11 மணியளவில் திருவிழாவிற்கு சென்றோம், இன்று நிகழ்ச்சியில் வள்ளி திருமணம் நாடகம். பபூன் வந்து வாய் கூசாமல் கெட்ட ஜோக்குகளை அடித்தார். அனைவரும் பரவசப்பட்டு சிரித்தோம். அப்துல்லா கொஞ்சம் அதிகம்.
வீட்டுக்கு வந்து தூங்கினோம், அடுத்த நாள் ஒரு மலையை குடைந்த குளத்தில் காலை குளியல். வழக்கம் போல நல்ல சாப்பாடு மட்டன் பிரியாணியுடன். வழக்கம் போல் அப்துல்லா அப்பாவின் கேள்விகள்.
இன்னைக்கி பகலில் திருமயம் கோட்டை பார்க்க போனோம். நல்ல அழகான கோட்டை, மேலே ஒரு சுணை இருந்தது , தண்ணீர் பச்சை கலரில் இருந்தது, வேடிக்கை பார்ப்பவர்கள் அதனை தூர்த்தே தீருவது என்ற முடிவில் சிறிய கற்களை எடுத்து சுணையில் போட்டனர்.அப்துல்லாவும் தன் பங்கிற்கு ஒரு பெரிய கல்லை போட்டார்.
கீழே ஒரு கோவில் அங்கு யாரும் அதிகம் வருவதில்லை போல இருந்தது, என்னோட வந்த நண்பர் கொஞ்சம் பக்தி அதிகம், கோவிலுக்கு சென்றோம்.கோவிலின் அழகை ரசித்தேன்.
அப்துல்லா ஆவலோடு எதிர் பார்த்த இரவு நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனது, முதலில் குறவன் குறத்தி ஆட்டம் பார்க்க போனோம், ஆபாசத்தின் உச்சகட்டம், தூக்கம் வேறு கண்ணை சுழற்றியது, அந்த பக்கம் பாட்டுக்கச்சேரி அங்கே போனோம் இளையராஜா பாடல்களை கொலை செய்து கொண்டிருந்தார்கள். சரிடா வீட்டுக்கு போலாம்னேன், நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்தோம், முன் ஹாலில் அனைவரும் பாய் விரித்து தூங்கினோம்.
திடீரென்று விழித்து பார்த்தேன், இருவரையும் காணவில்லை. அப்படி, இப்படி கஷ்டப்பட்டு புது இடத்தில எப்படியோ தூங்கிட்டேன். அப்துல்லா இப்படி தனியா விட்டுட்டு போவன்னு நான் எதிர் பார்க்கலை.
காலையில கேட்டேன் எங்கடா போனிங்க? அதுக்கு இங்கதாண்டா தூங்கினோம் அப்படின்னு வாய் கூசாம் பொய் சொன்னங்க ரெண்டு பேரும்.டேய் நான் முழிச்சிட்டுதான் இருந்தேன் சொல்லுங்கடான்னு கேட்டேன்.
இல்ல குறவன் குறத்தி ஆட்டம் சூப்பர், அதை பார்க்காம எப்படிடா தூக்கம் வரும்,வாழைக்காய் வெட்டுறது வரைக்கும் பாத்துட்டு தான் வந்தோம்னு சிரிப்பு வேற. வந்ததே அதுக்குதானேன்னான் வேற.தனியா வந்தா எங்கப்பா ஆப்பு வெச்சுருவாரு அதுக்கு தான் நீங்க ரெண்டு பேரும் துணைக்கு ...
ரொம்ப பேசின உங்கப்பாகிட்ட நீ எதுக்கு வந்தங்கிற விசயத்தை சொல்ல வேண்டி வரும்னேன். நீ முதல்ல பஸ் ஏருன்னு ஏத்தி விட்டுதான் அடுத்த வேளை பார்த்தான்.
பி.கு1 : புதுகை.அப்துல்லாவும் எனது நண்பர் திருமயம் அப்துல்லாவும் சொந்தக்காரங்களான்னு புதுகை.அப்துல்லா அண்ணன் தான் சொல்லனும்.
பி.கு2 :முற்றிலும் பொய் கலந்த ஒரு உண்மை அனுபவம்.
பி.கு3 : கவர்ச்சிக்காக இந்த தலைப்பு
புது பதிவிற்கான வாய்ஸ் மறுபதிவு.
Friday, May 1, 2009
ரஜினிகாந்த் மாதிரி ஒரு பதிவர். யார்?
ரஜினிகாந்த் மாதிரி ஒரு பதிவர். யார்?
"ரஜினிய நல்ல நடிகன்னு கடந்த இருபதுவருட படங்களை பார்த்து சொல்லமுடியாது.... ஆனா ரஜினிகிட்ட எதோ ஒரு ஈர்ப்பு இருக்குன்னு நம்புராக... அந்த ரகம் நீங்கள்...."
முள்ளும் மலரும் மாதரி "இல்லாத நடிகையின் பொல்லாத நாய்" உண்மையில் நல்ல பதிவு...
ஹரிணியின் பதிவுகளை மிகவும் விரும்பி பார்பேன்...
(மனதை கொள்ளைகொண்டது ஹரிணியின் தமிழ் எழுத்துக்கள் பதிவு...).
இப்படி ஒரு வாசகர் எனக்கு ஒரு (நூறு) கடிதம் எழுதியிருந்தார். நானும் என்னுடைய நடையில் இதை வைத்து ஒரு பதிவு போட அனுமதி கேட்டிருந்தேன். நேரமின்மை மற்றும் எழுதும் மனநிலையில் இல்லாததால் எழுதவில்லை.இந்த பதிவு கூட ஒரு அறிவிப்புதான்.
என்னை ரஜினியுடன் ஒப்பிட்டபின் சும்மா இருக்க முடியுமா, நானும் அவர் இமயமலையில் போய் ஒய்வெடுக்கற மாதிரி பதிவுக்கு கொஞ்சம் ஓய்வு. நாளைக்கே கூட திரும்பி வருவேன். லேட்டா கூட வருவேன். வராமலும் இருப்பேன்.ஆனா கண்டிப்பா ஒரு வாய்ஸ் கொடுத்துட்டு வருவேன்.
ஹரிணியின் பதிவுகள் இனி கலைக்கூடம் வலைப்பூவில் தனியாக வரும்.
தொடர்ந்து படித்து ஊக்கமளிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.
"ரஜினிய நல்ல நடிகன்னு கடந்த இருபதுவருட படங்களை பார்த்து சொல்லமுடியாது.... ஆனா ரஜினிகிட்ட எதோ ஒரு ஈர்ப்பு இருக்குன்னு நம்புராக... அந்த ரகம் நீங்கள்...."
முள்ளும் மலரும் மாதரி "இல்லாத நடிகையின் பொல்லாத நாய்" உண்மையில் நல்ல பதிவு...
ஹரிணியின் பதிவுகளை மிகவும் விரும்பி பார்பேன்...
(மனதை கொள்ளைகொண்டது ஹரிணியின் தமிழ் எழுத்துக்கள் பதிவு...).
இப்படி ஒரு வாசகர் எனக்கு ஒரு (நூறு) கடிதம் எழுதியிருந்தார். நானும் என்னுடைய நடையில் இதை வைத்து ஒரு பதிவு போட அனுமதி கேட்டிருந்தேன். நேரமின்மை மற்றும் எழுதும் மனநிலையில் இல்லாததால் எழுதவில்லை.இந்த பதிவு கூட ஒரு அறிவிப்புதான்.
என்னை ரஜினியுடன் ஒப்பிட்டபின் சும்மா இருக்க முடியுமா, நானும் அவர் இமயமலையில் போய் ஒய்வெடுக்கற மாதிரி பதிவுக்கு கொஞ்சம் ஓய்வு. நாளைக்கே கூட திரும்பி வருவேன். லேட்டா கூட வருவேன். வராமலும் இருப்பேன்.ஆனா கண்டிப்பா ஒரு வாய்ஸ் கொடுத்துட்டு வருவேன்.
ஹரிணியின் பதிவுகள் இனி கலைக்கூடம் வலைப்பூவில் தனியாக வரும்.
தொடர்ந்து படித்து ஊக்கமளிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.
Subscribe to:
Posts (Atom)