Sunday, March 8, 2009

முன்னணி நடிகர்கள் ஒரு கலந்துரையாடல்.

கார்த்திக்: வாங்க ழாக்டர் விஷய், எப்படி இருக்கீங்க

விஜய்: வணங்கங்கண்ணா? நீங்க எப் படி இருக் கீங்கண்ணா?அப்ப பாத்த மாதிரியே இளமையாவே ஜம்னு இருக்கீங்க.

கார்த்திக்: அது ஒன் ழும் இல்லை, பலவிதமான எக்ஷெச்ஷ் பண்ணி பாடி இப்படி வெஷ்சிருக்கேன்ஷ்.நீங்க கூட இப்ப என்ன மாதிழியே நல்லா பேசறீங்க உங்களுக்கு என்னை மாதிழியே நல்ல எழிர்காளம் இழுக்கு.

விஜய்: ?!?!#> இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா உங்க அளவுக்கு என் நால தெலிவா பேஷ முடியாது, ஆனாலும் சீக்கிரம் உங்கள மாதிரியே ஆயிடுவேன்.உங்க அரசியல் வால்க்கை எப்படி போகுது கார்த்திக் சார்.

கார்த்திக்: ரொம்ப நல்லா போகுது, நீங்க கூட கஷ்சி ஆரம்பிக்க போறதா பேஷிக்கிறாங்க, சினிமாவில மட்டும் இல்லை அரசியலேயும் என்னோட இடத்தை நீங்க அடையனும் என்னுடைய ஆஷிர்வாதம் எப்பயும் உண்ழ்டு.

விஜயகாந்த்: என்ன அரசியல் அப்படின்னு சத்தம் கேக்குது, என்னோட கூட்டனி மக்கள் கூடத்தான்.

கார்த்திக்: கவழைப்படாதே விஷயகாந்த், நான் உன் நண்பன் இருக்கேன்.காங்கிரஸ் துரத்தி விட்டாங்கன்னு யோஷுக்கவேண்டாம் என்னோட கூட்டனி வெச்சுக்கங்க 39 உங்களுக்கு ஒன்னு எனக்கு.

விஜயகாந்த்: நாற்பதும் நமக்கே.

சிரஞ்சீவி: நாந்தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர், இன்னும் திராவிட கணக்குல கொஞ்சம் மிச்சம் இருக்கு.

கார்த்திக்: ஷிரஞ்சீவீ நீங்க எடுத்துக்கோங்க, நாங்க டெல்லிக்கு குறி வைக்கிறோம்.40 எம்பி கொடுத்தா ஒரு தமிஷனை பிரதமரா ஆக்குரதா ஷுவாமி ஷொல்லிருக்கார்.அப்ப நாந்தான் அடுத்த பிரதமர். ஏன்னா நீங்க தெலுங்கர்னால பிரதமர் வாய்ப்பை இழக்குறீங்க.

விஜயகாந்த்: அடிச்சன்னா மதுரைல போயி விலுவ பாத்துக்க.நானும் தமிலந்தான்.

அஜித்: தல்லாகுளம்,மேலமாசிவீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல்,ஆரப்பாளையம்,கோரிப்பாளையம்,அனுப்பானடி,செல்லூர்.....

விஜய்: என்னடா இங்க நாராசமா ஒரு குரலு.ஒரே நாய்ஸா இருக்கு.

அஜித்: மதுரைன்னு ஒரு சத்தம் கேட்டுதே, நம்ம ஏரியாவாச்சே அதான்.

விஜய: ஏற்கனவே காணமப்போன அத்திப்பட்டி சிட்டிசன் தான் நீங்க

அஜித்: அதான் குருவி பறந்து போய் அத்திப்பட்டிய கண்டுபிடிச்சிருசே நண்பரே

விஜய்: நாம ரெண்டு பேரும் சண்டை போடறதுனால யாருக்கு லாபம், பேசமா நாம ரெண்டு பேரும் ஒரு படத்துல இணைந்து மிரட்டுவோம்.

அஜித்: நாம ரெண்டு பேரும் நடிக்கறதுனால, படம் பாக்கிறவங்களுக்குதான் நஷ்டம்,ஒரே கூட்டில ஏகனையும்,குருவியையும் யோசிச்சி பாத்தாலே மிரட்டுதுல்ல.

விசால்: சத்யம் மேல சத்தியமா சத்யம் மாபெரும் வெற்றிப்படம்.

அஜித்& விஜய்: தோ பாருடா இப்படி கூட முழு பூசணிக்காய மறைக்கலாம் போல.


ரஜினிகாந்த்: நான் வேணும்னா வாய்ஸ் கொடுக்கவா?

அனைவரும்: அண்ணா உங்க வாய்ஸ போயி இமயமலைப்பக்கமா நின்னு அப்படியே சீனாக்காரனுக்கு கொடுங்க.

ரஜினிகாந்த்: சீனாக்காரனுக்கு நான் வாய்ஸ் கொடுத்தா புரியாதேப்பா.

கமல்ஹாசன்: நான் பேசுவது மட்டும் தான் தமிழனுக்கு புரியவில்லை என்று நினைத்தீர்களா நண்பரே. ஃகாஃகாஃகாஃகா....

கருணாஸ்: என்னா ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு, உங்க எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள், நான் ஹீரோவா நடிக்கற படத்தில காமெடியன் ரோல் இருக்கு யாராச்சும் பண்றீங்களா?

கஞ்சா கருப்பு: 305 நம்பர் ரூம்காரரே ஒரு திண்டுக்கல் பூட்டு ஒன்னு கொடுங்க,ஒருத்தருக்கு வாய்ப்பூட்டு போடனும்..

ஒரு குரல்: எல்லாரும் கெளம்புங்க குறள் தொலக்காட்சிக்காரங்க குடும்பத்தோட இந்த கலந்துரையாடல்ல கலந்துக்க வராங்க.

அனைவரும் :யம்மாடி தப்பிச்சோம்டி.

குடுகுடுப்பையின் நலம் விரும்பிகள்: இப்படி எழுதுனா ரசிகர்கள் சண்டைக்கு வரமாட்டாங்களா?

குடுகுடுப்பை: அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு, நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லைன்னு அவங்களுக்கு தெரியும்.

31 comments:

வெட்டிப்பயல் said...

கலக்கல் :)

முரளிகண்ணன் said...

நல்லா இருக்குங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

சந்தனமுல்லை said...

:-))

//விஜய: ஏற்கனவே காணமப்போன அத்திப்பட்டி சிட்டிசன் தான் நீங்//

:-))

கலக்கல்..செம ROTFL!

ராஜ நடராஜன் said...

//குடுகுடுப்பையின் நலம் விரும்பிகள்: இப்படி எழுதுனா ரசிகர்கள் சண்டைக்கு வரமாட்டாங்களா?//

ஆட்டோ!ஆட்டோ!எங்கய்யா போனீங்க எல்லோரும்?என்னது எலக்சன் பிசியா?

புதியவன் said...

//அனைவரும்: அண்ணா உங்க வாய்ஸ போயி இமயமலைப்பக்கமா நின்னு அப்படியே சீனாக்காரனுக்கு கொடுங்க.

ரஜினிகாந்த்: சீனாக்காரனுக்கு நான் வாய்ஸ் கொடுத்தா புரியாதேப்பா.

கமல்ஹாசன்: நான் பேசுவது மட்டும் தான் தமிழனுக்கு புரியவில்லை என்று நினைத்தீர்களா நண்பரே. ஃகாஃகாஃகாஃகா....//

இது கலக்கல்...படித்து ரசித்து சிரித்தேன்...

FunScribbler said...

கலக்கல் பதிவு :)

ஷாஜி said...

பொழைச்சு போங்க...

Mahesh said...

ரொம்ப... நகைஷுவையா... ஷிரிப்பா... எழுத....றீங்க.... ஷப்பாஷ்... (கார்த்திக் ஸ்டைல்ல படிக்கவும்)

பழமைபேசி said...

கலக்கலா இருக்கு....

அதெப்படி சரி, தப்பா தலைப்புல எதனா செய்யுறீங்க? இஃகிஃகி!

முன்னனி --> முன்னணி

குடந்தை அன்புமணி said...

டி.ஆர் உங்க கண்ணுக்குத் தெரியலையா... டண்ணக்கா... டணக்கு டக்கா...

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வெட்டிப்பயல்,
முரளிகண்ணன்,
டிவீயார்,
சந்தனமுல்லை

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

கலக்கலா இருக்கு....

அதெப்படி சரி, தப்பா தலைப்புல எதனா செய்யுறீங்க? இஃகிஃகி!

முன்னனி --> முன்னணி//

மாத்திட்டேனுங்க பழமை

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

//குடுகுடுப்பையின் நலம் விரும்பிகள்: இப்படி எழுதுனா ரசிகர்கள் சண்டைக்கு வரமாட்டாங்களா?//

ஆட்டோ!ஆட்டோ!எங்கய்யா போனீங்க எல்லோரும்?என்னது எலக்சன் பிசியா?
//

வாங்க நடராஜன், ஏன் இந்த கொலவெறி

குடுகுடுப்பை said...

புதியவன் said...

//அனைவரும்: அண்ணா உங்க வாய்ஸ போயி இமயமலைப்பக்கமா நின்னு அப்படியே சீனாக்காரனுக்கு கொடுங்க.

ரஜினிகாந்த்: சீனாக்காரனுக்கு நான் வாய்ஸ் கொடுத்தா புரியாதேப்பா.

கமல்ஹாசன்: நான் பேசுவது மட்டும் தான் தமிழனுக்கு புரியவில்லை என்று நினைத்தீர்களா நண்பரே. ஃகாஃகாஃகாஃகா....//

இது கலக்கல்...படித்து ரசித்து சிரித்தேன்...//

நன்றி புதியவன்

குடுகுடுப்பை said...

Thamizhmaangani said...

கலக்கல் பதிவு :)
நன்றி தமிழ்மாங்கனி

நசரேயன் said...

ரெம்ப நல்லா இருக்கு

CA Venkatesh Krishnan said...

//
குடுகுடுப்பை: அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு,
//

யாருக்கு இருக்கு ஆயிரம் வேலை. ஒரு வேலையை பாத்துகிறதுக்கே அவிங்கவிய்ங்க ராத்திரியும் பகலுமா ஆணி புடுங்குறாய்ங்க !!

குடுகுடுப்பை said...

ஷாஜி said...

பொழைச்சு போங்க...
//
நன்றிங்கண்ணா

குடுகுடுப்பை said...

Mahesh said...

ரொம்ப... நகைஷுவையா... ஷிரிப்பா... எழுத....றீங்க.... ஷப்பாஷ்... (கார்த்திக் ஸ்டைல்ல படிக்கவும்)

பழிச்சிட்டேன்.ந்ழ்லா இருக்கு

குடுகுடுப்பை said...

அன்புமணி said...

டி.ஆர் உங்க கண்ணுக்குத் தெரியலையா... டண்ணக்கா... டணக்கு டக்கா...//

கடைசில வராங்களே குறள் டிவிலேந்து

அக்னி பார்வை said...

சுப்பரப்பு

குடுகுடுப்பை said...

இளைய பல்லவன் said...

//
குடுகுடுப்பை: அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு,
//

யாருக்கு இருக்கு ஆயிரம் வேலை. ஒரு வேலையை பாத்துகிறதுக்கே அவிங்கவிய்ங்க ராத்திரியும் பகலுமா ஆணி புடுங்குறாய்ங்க !!

//

கட்டவுட்,பாலபிஷேகம் இதெல்லாம் இப்ப இல்லையா?

வால்பையன் said...

அடடே!
இது தொடர் பதிவா எழுத வேண்டிய சப்ஜெக்ட் ஆச்சே!
முடிக்காதிங்க அப்படியே கண்டினியூ பண்ணுங்க!

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
நசரேயன்.
அக்னிப்பார்வை
வால்பையன்

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் வந்துட்டேன்...

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன கொடுமை குடுகுடுப்பை இது??

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

நான் வந்துட்டேன்...
//

வாங்கண்ணா வாங்க.

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

என்ன கொடுமை குடுகுடுப்பை இது??//

நான் எழுதிருக்கிறதா?

Anonymous said...

கவுண்டர், சத்தியராசு வெடிவேலு இருந்திருந்தா கூட்டம் இன்னும் களைக்கட்டியிருக்கும். என்ன சொல்றீங்க....

என்னது குறள் டிவிக்காரங்க வராங்களா? வுடு ஜூட்...

குடுகுடுப்பை said...

Anonymous விஜயசாரதி said...

கவுண்டர், சத்தியராசு வெடிவேலு இருந்திருந்தா கூட்டம் இன்னும் களைக்கட்டியிருக்கும். என்ன சொல்றீங்க....

என்னது குறள் டிவிக்காரங்க வராங்களா? வுடு ஜூட்...//

நன்றி விஜயசாரதி