Thursday, September 23, 2010

கல்லூரி சாலை - வாழ்க்கைன்னா ஒரு பிடிப்பு வேணும்டா


"டேய் குடுகுடுப்பை ஆயில் ஆப் ஸ்பெச்பிக் கிராவிட்டி இருந்தா குடுடா" -- பாரிஸ்

"என்னடா சேச்சி ஞாபகமா இருக்கியா"

"எதையுமே ரிலேட் பண்ணி படிக்கனும்டா? ஆனா நான் இப்பக் கேட்டது தேங்காய் எண்ணெய் , தலை காஞ்சு, தீஞ்சு போச்சு அதுக்குதான் ஆயில் ஆப் ஸ்பெசிபிக் கிராவிட்டி கேட்டேன்"

"என்கிட்ட அதெல்லாம் இல்ல,நல்ல சாயிபு பெட்டிக்குள்ள பூட்டி வெச்சிருப்பான், பெட்டியை உடைச்சு எடுப்போம், ஒரு தம்மு இருந்தா கொடு "

"தெர்மல் எஞ்சினியரிங் புத்தகத்திலே 417 வது பக்கம் ஒரு பிளெயின் இருக்கு எடுத்துக்கடா"

"யாரும் தொடாத புத்தகத்தில ,இப்படிதான் நீ சிகரெட் ஒளிச்சி வெக்கிறியா. வெவரம்டா"

"அடப்போடா நீ வேற படிப்பு வேணாம்டா, வாழ்க்கைன்னா ஒரு எய்ம், அப்பாரட்டஸ் ரெக்கொயர்டு வேணும்டா, இத்துப்போன இந்த லேபுக்கு இதெல்லாம் இருக்கு, என் வாழ்க்கைல ஒன்னுமில்லடா"

பேச்சு சத்தமும், பெட்டி உடைக்கும் சத்தமும் கேட்டு பக்கத்து ரூமில் பார்ட்டி வந்து எங்களுடன் கலந்து கொண்டார்.

"பார்ட்டி வாழ்க்கைல பிடிப்பு இல்லை நீ எதுனா ஒரு யோசனை சொல்லுடா"

"டேய் என்னடா சொல்ற நீ தான் ரைஸ் மில்லு, ரோட்டரியெல்லாம் வெச்சிருக்க, அதை வெச்சே பிஸினஸ் பண்ணலாமேடா"

"அடப்போடா கூலியெல்லாம் போக கடைசில உமிதாண்டா மிஞ்சுது, அதுவும் என் தலை மாதிரி காஞ்சு கெடக்கறதுனால,காத்துல பறந்து போயிறுது, அதுக்கு பேசாம உன்னை மாதிரி சொட்டைத்தலையனா இருந்திருக்கலாம்டா"

"டேய் அப்படி சொல்லாத ஐடியாஸ் ரூல்ஸ் தி வேல்டு, அப்படின்னு புத்தகம் எழுதியே பெரும் பணக்காரன் ஆனவனெல்லாம் அமெரிக்காவில இருக்கான், காத்துல பறக்கிற உமிய முதலீடு ஆக்குடா "

"எப்படி"

"டேய் மாட்டுத்தீவனம் தயாரிச்சி பையில அடைச்சி விக்கலாம்டா, ரொம்ப சிம்பிள் பார்முலா, உமியை, கொஞ்சம் கடலைப்புண்ணாக்கு , எள்ளுப்புண்ணாக்கோட சேத்து ரோட்டரில போட்டு அரைச்சு, முறுக்கு மாதிரி ஒரு அச்சுல வார்த்து பாக்கெட் போட்டியன்ன ஒரு காசு தவிடு இரண்டு ரூபாய்க்கு விக்குமுடா?"

"இன்சினியரிங் படிச்சிப்புட்டு மாட்டுத்தீவனம் விக்க சொல்ற? நீ மட்டும் சொட்டை மண்டைய வெச்சிக்கிட்டு அமெரிக்கா போயி துரைச்சிகளோட(நன்றி நசரேயன்) திரியலாம்னு இருக்குற."

"டேய் ஆண்டர்பிரினியரிங் பெரிய விஷயம்டா? நல்ல யோசனை பிடிச்சா செய்யுடா?

"அடப்போடா நான் தொட்டிக்குள்ள கைய விட்டு கலக்கியெல்லாம் , டெமோ காட்டமுடியாதுடா"

----

தெரிந்த முடிவுதான்

சில வருடங்கள் கழித்து, சொட்டைத்தலையில் ஒட்ட வைத்த முடியுடன் அமெரிக்காவிலிருந்து பார்ட்டி வந்தான், பாரிஸ் மாட்டுத்தீவனம் வரவேற்பரையில் சொட்டைத்தலையுடன் பாரிஸ் வரவேற்றான்.

"நான் சொன்ன யோசனை, எனக்கு ராயல்டி கொடுக்கனும் நீ"

"அடபோடா வெண்ணெய், தவிடும் , புண்ணாக்கும் மாடு திங்கிறத நீ சொல்லித்தான் ஒலகத்துக்கு தெரியுமாக்கும்"

"அதை முறுக்கு மாதிரி பொட்டலம் போட்டு விக்கிறதலாண்டா புத்திசாலித்தனம் இருக்கு"

"அது சரி அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு, அடுத்த வாட்டி வரும்போது எனக்கும் உன்னை மாதிரியே ஒரு விக் வாங்கிட்டு வாடா"

" நீ வேறடா வேலை இல்லை ரிஷெஷன் அப்படின்னு தொறத்திட்டாங்க, அதான் உன்னைப்பாத்து, தீவன யோசனைய பேசலாம்னு வந்தேன், ஆனா நீ முன்னாடியே பண்ணிட்டுருக்க, நானும் சேந்துக்கட்டுமா?"

"ஓ அப்படியா நீதான் காலேஜ் படிக்கும்போதே நல்லா டேமோ காட்டுவியே? தொட்டித்தண்ணில எப்படி தீவனத்தை கரைக்கிறதுன்னு டெமோ காட்டுற வேலை இருக்கு அத நீ பாத்துக்க , மாசம் ஏழாம் தேதி சம்பளத்தை தந்துடறேன்"

12 comments:

பழமைபேசி said...

//நீ வேறடா வேலை இல்லை ரிஷெஷன் அப்படின்னு தொறத்திட்டாங்க,//

ச்சும்மா ஆசைக்கு நாலு நாள் ஊருக்குப் போனாலே, என்ன வேலையில இருந்து தூக்கிட்டாய்ங்களான்னு கேக்குறாய்ங்க... இதுல இப்படி வேற எழுதி வெக்கணுமா?

இனி நீக்கியும் பிரயோசனமில்லை... இதுக்குள்ள திரைநகல் எடுத்து ஆயிருக்குமா இருக்கும்.... க்கும்...

நசரேயன் said...

தலைவர் பழைய ஆட்டத்துக்கு வந்திட்டாரு

நசரேயன் said...

அண்ணே மறுபடி வந்து கடைமையை ஆத்திட்டு போங்க

vasu balaji said...

அம்புட்டு மோசமாவா இருக்கு நிலமை:)

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
அம்புட்டு மோசமாவா இருக்கு நிலமை:)

//
மோசமா இல்லாத மாதிரி நடிச்சிட்டு இருக்கோம்.

Unknown said...

//வானம்பாடிகள் said...
அம்புட்டு மோசமாவா இருக்கு நிலமை:)//

யார் சொன்னது? அப்பிடியெல்லாம் இல்லை..

ஏய் யார்ரா அவன் என் எடத்துல உக்காந்திருக்கிறது?

Anonymous said...

பேசாம, ஊரப்பக்கம் ஒரு நல்ல வேலையா பாத்துட்டு ஓடிரலாம்ன்னு தோணுது.......
திடீர் திடீர்ன்னு ஒங்க இடுகை வேற அடிக்கடி நியாபகத்துக்கு வருது,,,,
http://kudukuduppai.blogspot.com/2010/08/blog-post_31.html

Unknown said...

திரும்பி வாங்கப்பா, புண்ணாக்கு வித்தாவது பொழச்சுக்கலாம், நம்ம இந்தியாவுல :)

jothi said...

//"ஓ அப்படியா நீதான் காலேஜ் படிக்கும்போதே நல்லா டேமோ காட்டுவியே? தொட்டித்தண்ணில எப்படி தீவனத்தை கரைக்கிறதுன்னு டெமோ காட்டுற வேலை இருக்கு அத நீ பாத்துக்க , மாசம் ஏழாம் தேதி சம்பளத்தை தந்துடறேன்"///

சிரிப்பை அடக்கமுடியவில்லை,..

அரிசில புண்ணாக்குலதான அத்தனை சத்தும் இருக்குன்னு சொல்லுறாங்க,.. அதான நம்ம ஊரு மாடெல்லாம் திமுதிமுன்னு இருக்கோ,..

*இயற்கை ராஜி* said...

:-))

குடுகுடுப்பை said...

தஞ்சாவூரான் said...
திரும்பி வாங்கப்பா, புண்ணாக்கு வித்தாவது பொழச்சுக்கலாம், நம்ம இந்தியாவுல :)

//

நீங்க யாவாரின்னு தெரியும் நான் எதுக்கு டெமோ காட்டவா?

கலகலப்ரியா said...

||புத்தகத்திலே 417 வது பக்கம் ஒரு பிளெயின் இருக்கு எடுத்துக்கடா||

என்ன ஒரு ஞாபக சக்தி... உங்களுக்கும் உங்க நண்பனுக்கும்...