நான் கிராமத்திலேர்ந்து தஞ்சாவூருக்கு டவுன் பள்ளிக்கூடத்திலே மேல் படிப்பு படிக்க போனப்பதான் மலையாளப்படங்கள் பற்றிய அறிவு எனக்கு கிடைத்தது.+1 படிக்கும் போது ஒன்னும் பாத்ததா ஞாபகம் இல்லை, ஆனா + 2 படிக்கும் போது எங்க கிளாஸ்ல ஒரு பெரிய குரூப்பா இந்த படங்களுக்கு போவோம்.
காலைல பஸ்ஸில் வந்து இறங்கி , பஸ்ஸ்டாண்டு சுவத்துல பாத்தாலே தெரியும் , திருவள்ளுவர் தியேட்டர்ல படம் மாத்தியாச்சுன்னு,அறத்துப்பால் பள்ளிக்கூடத்திலேயும், பொருட்பால் வீட்லேயும் சொல்லிக்கொடுத்துருவாங்கல்ல அதுனால இந்த திருவள்ளுவர் ஒன்லி காமத்துப்பால் மட்டுமே நடத்துன நவீன நகராட்சி தியேட்டர்.
11 மணி காலைக்காட்சிக்கு முதல் பிரீயடு 10.45 க்கு முடியும் அந்த கேப்புல , நண்பர்கள் குழு படத்திற்கு கிளம்பிருவோம், முக்கியமா தஞ்சாவூர் சேப்பனவாரிலேந்து இரண்டு பேர், மேல வீதிலேந்து ஒருத்தன், அய்யம்பேட்டைலேந்து ஒருத்தன் மற்றும் நான். டிக்கெட் வாங்கி உள்ளே போகும் போது அத அப்படியே முழுசா வாங்கிப்பாங்க, கிழிச்சி தாங்கன்னு கேட்டா , உங்கள கிழிச்சி தந்துருவாங்க.
உள்ளே போய் இருட்டுக்குள்ளே கிழிஞ்சிபோன சீட்டில மூட்டையாரோட முக்கால் மணிநேரம் அம்பலக்கார பஞ்சாயத்து, பிடிக்கிட்டா புள்ளி போன்ற படங்களை பாத்தா பிட்டே போட்டிருக்கமாட்டான், இதுக்குதாண்டா முத நாள் முத ஷோவுக்கு வரக்கூடாது, ஆபிஸர் ரெய்டு வருவாங்கன்னு ஜாக்கிரதையா இருக்காங்க போலருக்குன்னு சொல்லி கிளம்பிருவோம். ஆனாலும் நாலாவது பிரியடு கிளாஸுக்கு திரும்ப போயிரலாம் , அங்கே பாட்டனி வாத்தியார் கல்யாண முருங்கை தடவி பாத்தா நல்லா மொழ மொழன்னு இருக்கும்னு சொல்றது கேட்டு கிறங்கிப்போகவேண்டியதுதான் ,நேரமும் மிச்சம்.
உதாரணத்துக்கு அஞ்சரைக்குள்ள வண்டி படத்தை மேட்னி ஷோ பாத்தா மூனு மணிக்கு 26 A (பஸ் நம்பர்தான் A )பஸ்ஸ பிடிச்சி அஞ்சரைக்குள்ள வீட்டுக்கு போயிரலாம், ஏண்டா சீக்கிரம் வந்துட்டேன்னு வீட்ல கேட்டா, சீக்கிரம் பள்ளிக்கூடம் மூடிட்டாங்க அதான் அப்படின்னு சொல்லிரலாம் , ஆஹா பய படமெல்லாம் பாக்காம வீட்டுக்கு வந்துட்டானேன்னு பஜ்ஜி கிடைக்க வாய்ப்பு இருக்கு.சினிமா டிக்கட்ட கிழிச்சி குடுக்காம அவங்களே வாங்கிக்கரதுனால, துவைக்கும் சட்டைப்பையில் இருந்து மாட்டிக்கவும் வாய்ப்பு இல்லை.
மலையாளப்படங்கள் தரமானவை நீங்க மம்பட்டியான் படமெல்லாம் பாத்ததில்லையான்னு நிறைய பேரு சொன்னாங்க , நானும் ஒன்னாவது பாத்திரனும்னு ஒரு நாள் தஞ்சாவூர் ராஜா கலையரங்கத்தில் DSP மம்மூட்டி ன்னு ஒரு படம் போட்டிருந்தான், நானும் கலைப்படம் பாக்கிற ஆவலோட போனேன், படத்திலே ரெய்டுக்காட்சிகள்ள DSP வந்தாரு ஆனா மம்முட்டி வரவேயில்லை. போஸ்டர் போட்டிருந்த படமே உள்ள ஓடலைன்னு படம் பாத்த பின்னாடிதான் தெரிஞ்சது.
மலையாளத்துல கலைப்படம் எடுக்கிறேன்னு ஒருத்தன் பல்லு விளக்குறதையும், உச்சா போறதையும் மூனு மணி நேரம் பாக்கிறது, பிசன் சிங் பேடின்னு ஒருத்தர் விக்கெட்டே எடுக்காம 125 ஓவர் ஒரு இன்னிங்ஸ் பவுலிங் போடுறத பாக்கிற மாதிரி போர் அடிக்கிற விசயம். இந்த முக்கா மணி நேர படங்கள் B.S சந்திரசேகர் பவுலிங் மாதிரி விழுந்தா விக்கெட் இல்லாட்டி ரண்.மாட்டிக்கிட்டா டின்னு.
காலேஜ் படிக்கும் போது தென்றல் அப்படின்னு ஒரு தியேட்டர் இருந்தது, அந்தக்கருமத்துக்கு கதவே கிடையாது அதுனால நாங்க போறது இல்லை, தஞ்சாவூர் வழியா ஊருக்கு போகிற நண்பர்கள் சிலர் திருவள்ளுவரின் அருமை அறிந்து ஒருநாள் தஞ்சை நகராட்சி தங்கும் விடுதியில் ரூம் போட்டு தங்கி மிஸ்.ஜானகின்னு ஒரு படம் பார்க்க போனோம், தியேட்டருக்கு கிட்ட போனா தியேட்டர் சீல் வெச்சிட்டாங்க அப்படின்னாங்க.
அதுக்கப்புறம் நானும் உண்மைத்தமிழன் , ஜாக்கி சேகர் மாதிரி திருந்தி நல்ல பிள்ளையா பொழப்ப பாக்க ஆரம்பிச்சாச்சி,பரங்கிமலை ஜோதி தியேட்டர் காரனும், திருவள்ளுவர் தியேட்டரும் திருந்தி உலகத்தரத்தில தமிழ்ப்படம் போட ஆரம்பிச்சிட்டாங்க.இந்தக்கலைப்படம் பாக்கிறோம்னு காலம் முழுவதும் பள்ளு வெளக்குறது வெறிச்சி வெறிச்சி பாத்துக்கிட்டே காலத்த ஓட்டறதுக்கு இது எவ்வளவோ மேல்.
தப்பு பண்றோம்னு ஒத்துக்கிட்டா திருந்திரலாம்கிறது உண்மைதானே, இது மலையாளப்படம் பாக்கிறதுக்கு மட்டும் இல்லை. இதுதான் பதிவோட மெஸேஜூ.