Sunday, June 6, 2010

லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி அனுபவம், விரைவில் அட்லாண்டாவில்


வெள்ளி இரவு டாலஸ் மெட்ரோப்பிளக்ஸ் தமிழ்சங்கத்தால், தமிழ்நாடு பவுண்டேசன் என்ற தன்னார்வ கல்வி உதவி நிறுவனத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்டது. நானும் கலந்துகொண்டேன், லக்ஷ்மன் ஸ்ருதி குழுவில் பாடகர் கிரிஸ்,மகதி, டிஎம்ஸ் செல்வக்குமார் மற்றும் மாலதி கலந்து கொண்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நான் பார்த்த இசைநிகழ்ச்சி, மாலதி எப்போதும் போல் அருமை உற்சாகத்தோடு கிராமியப் பாடலான "சித்திர கோபுர கட்டவே " முதல் மன்மத ராசா வரை கலக்கினார்.

கிரிஸ் மற்றும் மகதியும் மிகவும் உற்சாகத்துடனும் ரசித்தும் பாடினர், செய்யும் தொழிலை ரசித்துச் செய்யும்போது வெற்றி தானாகவே கிட்டும் என்பதை உணர்த்தினார்கள்.கிரிஸ் மற்றும் மகதி நிறைய ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடலகள் பாடினர்.

டிம்எஸ் செல்வக்குமார் தந்தையைப்போல அப்படியே பாடுகிறார், இந்தந்திறமையை மட்டுமே வளர்த்துக்கொண்டதால் அவருக்கு சினிமாவில் புதிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டது, மயக்கமென்ன என்ற வசந்தமாளிகை பாடலைப்பாடியபோதும் , உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜியாருக்கா பாடிய பாடலிலும் டிஎம்ஸ் காட்டிய வித்தியாசத்தை மகனாலும் தர முடிந்தது.

முத்தாய்ப்பாக டிரம்மர் பெயர் தெரியவில்லை, தனியாக பதினைந்து நிமிடம் தனித்திறமை காண்பித்தார், உண்மையிலேயே பறையோசையின் நீட்சியாகவே அதனை அனுபவிக்கமுடிந்தது, திறமைசாலி டிரம்மருக்கு என் பாரட்டுக்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் தொய்வு ஏற்படும் நிலையில் கிரிஸ் பார்வையாளர்களோடு இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார். நடனமென்றால் என்னவென்றே தெரியாத நானும் கிரிஸ் பாடிய அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு கால் வலிக்க நடனமாடினேன்.

கிரிஸ் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார், அவரைப்பார்த்தவுடன் எனக்கும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை பீறிட்டு எழுந்தது.நாளைக்கு ஆட்டுக்கறி சாப்பிடும் ஆசையும் பீறிட்டு எழுந்துள்ளது என்ன மனிதனுக்கு நினைப்பதெல்லாம் நடப்பதில்லை, கண்டிப்பாக ஒரு ஆசையை நிறைவேற்றி திருப்தி அடைந்து கொள்வேன்.

டாலஸ் வாழ் தமிழர்களுக்கு இந்த நிகழ்ச்சி, நல்ல ஒரு பொழுது போக்காக அமைந்தது, வரும் ஆண்டிலும் மேலும் பல நிகழ்ச்சிகளில் நடத்தி மகிழ்வதுடன் மேலும் சிலரின் கல்விக்கு உதவுவோம் என்று நம்பி, வெறும் பார்வையாளனாக இல்லாமல் இனி தமிழ்ச்சங்க நடவடிக்ககளில் என்னுடைய பங்களிப்பையும் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்த வாரம் ஜூன் 12 ம் தேதி அட்லாண்டாவில் இதே இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது, வசூலாகும் தோகை தமிழ்நாடு பவுண்டேசனுக்கு செல்வதால் சிலரின் கல்விக்கு உதவுகிறது, அட்லாண்டா தமிழர்கள் யாரேனும் என் பதிவை படிக்க நேரிட்டால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

3 comments:

கலகலப்ரியா said...

நல்ல விஷயம்..

||வசூலாகும் தோகை ||

ம்ம்... என்ன மயில்த் தோகையா..

vasu balaji said...

/ கலகலப்ரியா said...
நல்ல விஷயம்..

||வசூலாகும் தோகை ||

ம்ம்... என்ன மயில்த் தோகையா../

தளபதிக்கு நான்
தலைவருக்கு நீயாம்மா:))

ரொம்ப நல்ல விஷயம் தலைவரே.

குடுகுடுப்பை said...

வானம்பாடிகள் said...
/ கலகலப்ரியா said...
நல்ல விஷயம்..

||வசூலாகும் தோகை ||

ம்ம்... என்ன மயில்த் தோகையா../

தளபதிக்கு நான்
தலைவருக்கு நீயாம்மா:))


//

katchila padichavangala sethathu tappaa pochu