Sunday, January 30, 2011

உன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா?






பிகு: பதிவு பிரியாமணியின் சட்டையை வைத்து உருவானது.

Sunday, January 9, 2011

கால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.

அமெரிக்கா வந்து இன்னும் இரண்டு வருடத்துல ஒரு மாமாங்கம் ஆகப்போகுது, ஆரம்ப காலத்தில் நான் வேலை பார்த்த இடங்கள் பெரும்பாண்மை தகவல் தொடர்பு ஆராய்ச்சி நிறுவணங்களே, அங்கேயெல்லாம் டிரெஸ் கோடு ஒரு டி ஷர்டும், ரொம்பக்கிழியாம இருக்கிற ஜீன்ஸுந்தான், அதுனால ஃபார்மல் சட்டை எடுக்கிற வேலையே இல்லை, சென்னையில இருக்கும் போது ஒரு வெண்ணெய் 900 ரூபாய்க்கு ஒரு லூயி பிலிப் சட்டை இனாமாத்தந்தான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணும்போது போடறதுக்காக, அதுதான் இன்னைய வரைக்கும் இண்டர்வியூ/ கிளையண்டுகளை பார்க்கப்போறதுக்கு போடறதுக்கு வெச்சிருக்கேன்.

தகவல் தொடர்பு ஆராய்ச்சி விட்டு, மருந்துக்கடைல பில்லு போடற சாப்ட்வேர் கட்டமைக்கவும் வந்தாச்சு, இங்கயும் கிழியாத ஜீன்ஸூம், பனியனும்
போதும் நீங்க கிழிக்கிற கிழிக்குன்னு சொல்லிட்டாங்க, நானும் அப்படியேத்தான் இருந்தேன், இடையிலே தமிழ் வலைப்பதிவுகள் சகவாசம் என்னோட உடன்பிறப்பு மூலமாக கிடைத்து, பெரிய எழுத்தாளராகவும் ஆகியாச்சு, என்னதான் பச்சை நோட்டுல சம்பளம் வாங்கினாலும், திங்கிறதுக்கு செலவு பண்ற அளவுக்கு நான் உடைக்கு பண்றதில்லை ஆனா பாருங்க எழுத்தாளனா மாறின பிறகு எனக்கு அந்த ஆசை வந்திருச்சு. இந்தவாரம் அதுக்கு நேரம் கூடி வந்துச்சு, எப்பவும் கூடவே வருகிற என் மனைவி, நான் வர இரண்டு
மணி நேரம் ஆகும் நீங்க மேசிஸ்ல அதுவரைக்கும் ஷாப்பிங் பண்ணுங்க, அந்த எலெக்ட்ரிக் தோசைக்கல்லு, கரண்டு விளக்குமாறு எல்லாம் பாத்து வைங்கன்னாங்க.
தனியா ஷாப்பிங் பண்ண வாய்ப்பு கிடைச்ச இந்த நேரத்துல கடைக்குள்ள நுழைஞ்ச உடன், கால்வின் கிளெயின் சட்டை கண்ணுல பட்டுச்சு, படார்னு எங்கியோ தமிழ் எழுத்துலகுல இந்தப்பேர பாத்த ஞாபகம் வந்தது, உடனே நானும் எடுத்திட்டேன், ஒரிஜினல் விலை $79.99. தள்ளுபடியெல்லாம் போக $34.99 விற்பனை வரி உட்பட, வாங்கிட்டேன்.

இப்பக்கூட ஒரு இணைய எழுத்தாளனா என் மேல எனக்கே கோபம் வந்தது, நம்மோட எழுத்த படிக்கிற யாரும் இந்த மாதிரி வரி கட்டறதில்லை, அப்புறம்தான் தோனுச்சு இலவசமா அதுவும் தெரியாத்தனமா படிக்கிறதுக்கெல்லாம் வரி எப்படி கட்ட முடியும்னு.

சட்டைய மடிச்சு மேஸில் கொடுத்த பிளாஸ்டிக் பையில வெச்சிக்கிட்டேன், திடீர்னு ஒரு சமூக ஆர்வலான ஏகாதிபத்தியத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பையை புறக்கணிக்கலாமான்னு தோனிச்சு, ஆனா பாருங்க பக்கத்து வீட்டு ரவி கொடுத்த வாத்துக்க்குழம்பு ரொம்ப நல்லா இருந்தது, அதுனால ராத்திரிக்கும் வைச்சிக்கலாமின்னு மிச்சம் வெச்சது சட்டைல கொட்டிருச்சுன்னா சட்டை வீனாப்போயிரும்னு பொது உடமை நாட்டுல உருவான அந்த பிளாஸ்டிக் பையிலேயே வெச்சுக்கிட்டேன்.

இந்த நேரத்துல ரவி வீட்டு வாத்துக்குழம்பு நல்லா இருக்குன்னு சொல்லச்சொல்லி எங்கம்மாகிட்ட போன் பண்ணி அவருகிட்ட சொல்லச்சொன்னது ஞாபகம் வருது. ரவி எனக்கு போன் ஏன் வாத்துக்குழம்பு நல்லா இல்லையான்னு கேக்கிறார், எங்கம்மா தமிழ்ல சொன்னது, தெலுங்கருக்கு புரியல இந்த மாதிரி கம்யூனிகேசன் கேப்பையாவது ஒத்துக்கலாம், பல எழுத்தாளர்கள் தமிழ்ல எழுதறது பல தமிழர்களுக்கு புரியுறதில்லை.

கடைய விட்டு வெளில வராலாமின்னு கிளம்பினேன், வழியில கால்வின் கிளெயின் ஜட்டி வேற இருந்தது, பச்சை நோட்டுல சம்பாதிச்சாலும், தமிழ்நாட்லேந்து ஜோக்கி ஜட்டி வாங்கி போட்டு பழகிட்டதால,கால்வின் கிளெயின் ஜட்டி பேரையே நான் கேள்விப்பட்டதில்லை,என்னடா கஞ்சப்பிசினாறின்னு நினைக்காதீங்க, என்னைவிட பல மடங்கு
சம்பாதிக்கிற என் நண்பர் ஒருத்தன் கிலோ நூறு ரூபாய்க்கு மதுரை நாடா ஜட்டிதான் போடுறான். சரி எழுத்தாளரா ஆயாச்சு, இனி ஜோக்கி வேணாம் கால்வின் கிளெயின் வாங்குவோம்னு போனா அந்த ஜட்டியெல்லாம் சேல்ல போட்டிருக்கான், ஒரு ஜட்டி இரண்டு டாலர்தான், அப்படிங்கிறான், குறைந்தபட்சம் ஆயிரத்து முன்னூறு ரூபாய் அதாவது $25க்குதான் எனக்கு ஜட்டி
வேணும் அப்படின்னேன், இப்ப இந்த ஜட்டிய அவ்வளவுக்கு நாங்க விக்க முடியாது சேல் இல்லாதன்னிக்கு வந்து வாங்கிக்க சொல்லிட்டான். நானும் சரின்னு சொல்லிட்டி வந்துட்டேன்.

கடையிலிருந்து வெளிய வரதுக்குள்ள பயங்கர கூட்டம், நீங்கதான் குகுவான்னு அப்படின்னு கேட்டாங்க, ஆட்டோகிராப் வேனும்னாங்க, உடனே $25க்கு ஒரு பேனாவை வாங்கினேன் அப்புறந்தான் ஞாபகம் வந்தது எனக்கு கையெழுத்து போடத்தெரியாதுங்கிற விசயமே, பேனாவை ரிட்டன் பண்ணிட்டு கைநாட்டு போட இங்க் பேடு இருக்கான்னு கேட்டேன், அதெல்லாம் இங்க இல்லை வேணும்னா டாலர் ஷாப்பில கேட்டுப்பாருங்கன்னாங்க, ஒரு எழுத்தாளன் கைநாட்டு வைக்க தரமான இங்க் பேடு கிடைக்கல, டாலர் ஷாப்பில வாங்கின இங்க் பேடு கைநாட்டு வெச்சா கை வெந்துப்போயிருமோன்னு ஒரு பக்கம் பயமா இருக்கு. மனைவிகிட்டேயிருந்து போன் வந்தது, மின்சார தோசைக்கல்லு பார்க்காத பயமும் வந்தது.

Wednesday, January 5, 2011

வரலாறு திரும்புகிறது.

ஆகஸ்ட் 11 ,3009.

ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று திண்ணியத்தில் உயர்சாதிக்காரர் வீட்டிலும் வயல்களிலும் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியினரான மூர்த்தி தேவர், குரு ஐயங்கார், ஷண்முக நாயக்கர் ஆகியோர், உயர்சாதிப்பண்ணையார் முருகப் பறையனார் வீட்டில் உள்ள கோவிலின் உள்ளே சென்று சாமி கும்பிட்டதற்காக முருகப்பறையானாரும் அவரது மனைவி சசிரேகா பறைச்சியாரும் , கீழ்சாதி தேவப்பயலுக்கும் பாப்பாரப்பயலுகளுக்கு என்னடா திமிரு, நாயக்கப்பயலும் இவனுங்க கூட சேர்ந்து கொட்டமடிக்கிறீர்களா என்ன தைரியம் இருந்தா கோவிலுக்குள்ள நுழைவீங்க என்று கூறியவாரே வாயில் மலத்தை கரைத்து ஊற்றி முப்பத்தொண்றாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சாதி வன்கொடுமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த உலக நாட்டுத்தலைவர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

சவூதி அரேபியா பிரதமர் ஸ்வாதி நாயர் வழிபாடு அனைவருக்கும் பொதுவானது , அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றார்.அந்நாட்டுச்சட்டம் தனிமனித வழிபாட்டு உரிமையை உறுதி செய்வதை சுட்டிக்காட்டினார். சவூதி அரேபியாவில் கடந்த 50 வருடமாக இஸ்லாமிய மத வழிபாட்டுத்தளங்கள் தவிர மற்ற மத வழிபாட்டுத்தளங்களை வெடி வைத்து தகர்ப்போம் என்று கூறிய தீவிரவாதக் குழுவை இரும்புக்கரம் கொண்டு தான் அடக்கியதை, துபாய் பிரதமர் குட்டி முகமது பாராட்டியதை நினைவு கூர்ந்தார்.இவர் சவுதி அரேபியாவில் ஆண்களுக்கு ஓட்டுரிமையும் , ஓட்டுனர் உரிமையும் வழங்கி புரட்சி ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சிய பிரதமர் சொராஸ்டிர் அகமதுவும்,குர்து பிரதமர் முகமது சேக்கும் தங்களது கணடனத்தை தெரிவித்தனர்.

பாலஸ்தீன பிரதமரும், இஸ்ரேலியப் பிரதமரும் ஜெருசலத்திலிருந்து விட்ட கூட்டறிக்கையில் இம்மாதிரி நிகழ்வுகள் களையப்பட்டு எங்களைப்போல ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றனர்.

மனித உரிமை எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என சீன ஜனநாயக கூட்டமைப்பின் தலைவர் தியானென்மென் சதுக்கத்தில் இருந்தபடியே இச்செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் சிவத்தமிழ்நம்பி வழிபாட்டு உரிமைகள் சாதியின் பேரில் தடுக்கப்படுவதை கடுமையாக கண்டித்ததோடல்லாமல், இலங்கையில் இந்து மதத்தில் சாதிப்பாகுபாடே இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் சந்திரகுப்த மவுரியர், எங்களின் ஆதித்தாயகமான இந்தியாவில் இவ்வாறு நடப்பது வருத்தமளிக்கிறது என்றார். இவர் புத்த மதத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட மசூதிகள் அனைத்தையும் மீளக்கட்டிந்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் குடுகுடுப்பை இந்த நிகழ்வு கண்டிக்கப்படவேண்டிய ஒன்று, எனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊரில் இப்படி நடப்பது வருத்தமளிப்பதால் தான் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக கூறினார். கி.பி 2700 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு நிகராக சிங்களர்களுக்கும் உரிமையை தன் எள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை வாங்கிந்தந்ததையும், கி.பி 2500 ல் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையை தன் எள்ளெள்ளுத்தாத்தா அதிபர் குடுகுடுப்பை தீர்த்துவைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

இந்தியப்பிரதமர் ஸ்டீபன் காந்தி இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது, பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என்று தள்ளாத வயதிலும் உறுதிபடக்கூறினார்.

கடைசி நேரத்தகவலின்படி கருப்புசாமி தேவர், மற்றும் கபாலி ஐயர் தலைமையில் இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.இவ்வளவு கோவில்களில் பிரச்சினை இருக்கும்போது பாஜக தலைவர் விநாயகம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்பது வியப்பளிப்பதாக கூறினர்.

Monday, January 3, 2011

மனம்போன போக்கில் மாடு போன போக்கில்

மனம் போன போக்கில் வீட்டின் கொள்ளைப்புறத்திலிருந்து நடந்து கொண்டிருந்தேன், தூரத்திலிருந்து உத்திராபதியின் குரல் கேட்டது.

"மாப்பிளை உங்க மாடு எங்க வீட்டு தொட்டிய மொட்டை அடிக்குது, பிடிச்சிக்கட்டுங்க"


உத்திராபதிக்கு நான் பங்காளி அதனால் என் வீட்டு மாடு அல்ல என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன், அப்படியே சித்தன் கடையில் டீ குடிக்கும் எண்ணத்தோடு மேலும் நடந்தேன்.

"மாப்பிளை தமிழ்ல தானே சொல்றேன் மாட்ட புடிச்சு கட்டுங்க"

இதுவரை அமைதியாக இருந்த வாத்தியார் சங்கரன் வாயைத்திறந்தார்.

"பரவாயில்லை மாப்பிளை நீங்க இங்கிலிசுலேயே சொல்லுங்க அப்புறமா புடிச்சி கட்டுறேன்"

"இந்த எடக்கு மயிருக்கெல்லாம் கொறச்ச இல்ல மாட்டைப் புடிச்சி கட்டலைன்னா, நான் புடிச்சி கட்டி ரெண்டு நாளைக்கு தீனி போடமாட்டேன்"
உத்திராபதி இப்போது என்னைக் கை காட்டி கூப்பிட்டான்.

"டேய் நீதான் இன்ஜினியருக்கு படிச்சிருக்க, இந்த சின்னப்பள்ளிக்கூடத்தான், என்னை இங்கிலீசுல மாடு புடிச்சி கட்டச்சொல்றான், நீ கொஞ்சம் இங்கிலிசுலே மாடு கட்டச் சொல்லி சொல்லுடா"

"இல்ல உத்திராபதி, நான் படிச்சது இன்ஜினியரிங் இங்கிலீசு அதுல மாடு புடிச்சி கட்டுறதுக்கெல்லாம் சொல்லித்தரலை"

"சரி ஏதோ படிச்சத சொல்லு , மாப்பிளை என்ன பண்ணுறார்னு பார்ப்போம்"

"டியர் மாப்பிள், யுவர் மொட்டைமாட் ஜம்புடு தி வேலி அன்ட் ஈட்டிங் தி பருத்திகொட் இன் உத்திரன்ஸ் வாட்டர் டேங், பிளீஸ் யூ கட் தி மொட்டமாட் இன் தி மொள ஸ்டிக்"

"மாப்பிளை நீங்க சொன்னது மாதிரியே என் பங்காளி இங்கிலீசுல சொல்லிட்டான் இப்பயாச்சும் கட்டுங்க"

"அவன் என் மொட்டமாடி தண்ணித்தொட்டி வேலி தாண்டி ஊத்தி வேஸ்டாப்போகுது, ஸ்டிக் வைச்சு அடைக்கச்சொல்றான், ஆனாலும் இன் ஜினியர்னா இன் ஜினியர்தான்"

"இல்ல சார் நான் மொட்டை மாட்டைத்தான் கட்டச்சொன்னேன்"

"என்ன இன் ஜினியரே , மோழ மாட்ட மொட்டை மாடின்னு சொல்றீங்க, என்னத்த படிச்சியளோ போங்க, உங்கப்பாரு காசு உன் படிப்பு என்னமோ போங்க, நீங்க படிச்சிப்புட்டு மாடியும் கட்டவேண்டாம் , மாடும் கட்டவேண்டும் கக்கூஸாவாது கட்டப்பாருங்க"

"காலைல டீக்குடிக்கலாமின்னு இந்தப்பக்கம் வந்ததுக்கு எனக்கு வேணும்"
இப்படியாக வெட்டிப்பேச்சு ஓட்க்கொண்டிருக்கையில் கொண்டியாரகள்ளி, சத்தம் போட்டுக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

"ஏன்டா வாத்திப்பயலே மோழ மாட்டை அவுத்து விட்டு என் பயித்தை மொட்டையடிக்கலாமின்னா இருக்க, மாட்டை அவுத்து விட்டுப்புட்டு இங்க என்னடா பேச்சு வேண்டிக்கெடக்கு, இன்னொரு வாட்டி மாடு அந்தப்பக்கம் மாடு வந்திச்சு,பள்ளிக்கூடத்து வேலில ஆடு மேஞ்சா ஆட்டுக் காத அறுப்பியாமே நீ, நான் உன் காதை அறுத்துப்புடுவேன் பாத்துக்க"