Tuesday, March 2, 2010

புரிந்தவர்களுக்கு

அங்கமெல்லாம் தேனொழுக
ஆடியபாதம் அழகாக தோய்த்திட
விண்ணதிர பண்ணிசையை
விளம்பரமே இல்லாமல்
மஞ்சத்தில் மாமணியாய்
மருவீட்டாள் செய்திடவே
கருவேல மரத்தின் கருங்குச்சியை
கருங்காக்கை வீடுகட்ட
காலையில் வீடுதாண்டி காசில்லாமல்
கட்டிய சொந்த வீட்டிலிருந்து கரைய
என் வீட்டு எசமான் வாடகை
கேட்டு வரவும்
வந்ததென்னவோ கோபம்
வரக்கூடாதுமென்னமோ கோபம்
நெஞ்சத்தில் உதித்திட்ட
கருத்தினையே கவிதையாக்கி
தங்களுக்கு அற்பணிக்கிறேன்
என்னை புரிந்தவர்களுக்கு மொக்கை
புரியாதவர்களுக்கு கவிதை.

14 comments:

கோவி.கண்ணன் said...

புரிந்தாலும் மொக்கையாகத்தான் இருக்கு, எதற்கும் மூன்றாவது ஆப்சனும் கொடுத்தி இருக்கலாம்.

:)

Vidhoosh said...

:)) நாய் பத்திர ஊழல் பணத்திலே கொஞ்சம் எடுத்து வீச வேண்டியதுதானே...:))

Vidhoosh said...

எப்படியோ ஒரு சாகித்தியம் படைச்சுட்டீங்க ... வாழ்த்துக்கள். :O

KarthigaVasudevan said...

இதென்னவோ வீட்டுக்காரர் VS குடித்தனக்காரருக்கு இடையிலான சச்சரவா இருக்கும் போல தெரியுது.ஆடியபாதம்னா நடராஜன் தானே! ஹை கண்டுபிடிச்சிட்டோம்ல.
:)))

சந்தனமுல்லை said...

ஹிஹி...:-)

சந்தனமுல்லை said...

காக்கா உங்க வீட்டுலேருந்து கத்துச்சா..அப்போ கெஸ்ட் வராங்கன்னு அர்த்தம்....ஸ்ப்பா...! :-))

vasu balaji said...

நீங்க உடுங்க. சட்டத்த கேட்டு ஆவன செய்யலாம்:))

கலகலப்ரியா said...

ஆ..கவிதை கவிதை... குடுகுடுப்பையாரே நீர் எங்கயோ போய்ட்டீர்...

Unknown said...

அழகான கவிதை படைத்த எங்கள் பொதுச் செயலாளருக்கு இலக்கிய அணி சார்பில் பாராட்டு விழா எடுத்து பொன்முடி வழங்கப் படும்.


கவிதை படைத்த காவிரி மைந்தா நீ வாழ்க.

வில்லன் said...

//என்னை புரிந்தவர்களுக்கு மொக்கை
புரியாதவர்களுக்கு கவிதை.//

இது மொக்கையுமல்ல கவிதையுமல்ல
சரியான "பொக்கை"

வில்லன் said...

// முகிலன் said...


அழகான கவிதை படைத்த எங்கள் பொதுச் செயலாளருக்கு இலக்கிய அணி சார்பில் பாராட்டு விழா எடுத்து பொன்முடி வழங்கப் படும்.


கவிதை படைத்த காவிரி மைந்தா நீ வாழ்க.//
இதெல்லாம் பாத்தா "23 ஆம் புலிகேசி" படம் பாத்த நெனப்புதான் வருது.......

வில்லன் said...

//Vidhoosh said...


:)) நாய் பத்திர ஊழல் பணத்திலே கொஞ்சம் எடுத்து வீச வேண்டியதுதானே...:))//

நாய் பத்திர ஊழல் பணம் நாய் வாங்கியே காலியாயடுச்சு

நசரேயன் said...

வோவ் .. கவுஜய விட்டு வெளிய வா சாமி

அது சரி(18185106603874041862) said...

யப்பா....கொலைவெறில இருக்க மாதிரி தெரியுதே...யாரு மேல தலைவரே இவ்ளோ கடுப்பு? எளக்கிய அணித் தலைவர் மேலயா??