Tuesday, October 18, 2011

விவசாயம் தேவையா?

எந்த ஒரு பிரச்சினையிலும், பிரச்சினையோட மூல காரணத்தை ஆராய்ந்து அதை முளையிலேயே கிள்ளி எறியனும், அப்படியே விட்டா அது வளர்ந்து தீவிரவாதமாகிவிடும். ஒரு உதாரணத்துக்கு இன்றைக்கு தமிழக விவசாயிகளை எடுத்துங்கோங்க, காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடலைங்கிறான், முல்லைப்பெரியாரில் கேரளா தண்ணீர் விடலைங்கிறான், பாலாத்துல ஆந்திராகாரன் அணை கட்டுறான் இப்படியெல்லாம் பிரச்சினை பண்றாங்க, இதுக்கு மூல காரணம் என்னன்னு கண்டுபிடிச்சி தீர்க்கனும்.

"இதுக்கு மூல காரணம் என்னங்க?"

ரொம்ப சிம்பிள், தமிழ்நாட்டுக்காரன் விவசாயம் பண்றதே தவறு, விவசாயம் செய்வதால்தானே தண்ணீர் கேட்குறான், அவன் எப்படி கொடுப்பான், மிஞ்சி இருக்கிறத மட்டும்தான் கொடுப்பான், அதுனால தண்ணி கேக்குறத நிறுத்தனும், அதுனால விவசாயம் செய்வதை நிறுத்தனும், இல்லாட்டி இது தீவிரவாதம் வளர வழி வகுத்துவிடும்.விவசாயம் எனது பிறப்புரிமைம்பான் இன்னும் நிறைய வெத்துக்கோஷம் போடுவான்.

எப்படி நிறுத்த முடியும்?

விவசாயம் பண்ற எல்லாரையும் சும்மா விட்டா ஆடிய காலும்,பாடிய வாயும் போல சும்மா இருக்கமாட்டான், அந்தக்காலத்துல ஏழு போகம் வெள்ளாமை போட்டேன்னு அவ்வையார் பாட்டைப்பாடிட்டு வெறும்பேச்சு பேசிட்டு இருப்பான், அதுனால அவங்கள இரும்புக்கரம் கொண்டு அடக்கனும், ஒரு ஒரு ஆற்றுப்பகுதிக்கும், முகாம்கள் அமைத்து எல்லாரையும் அடைச்சிரனும், இலங்கையிலே இதே மாதிரி பிரச்சினை தீர்த்த புண்ணியவான்கள் பெயர்களான ராஜபக்ஷே சகோதரகள் பெயர்களை அந்த முகாம்களுக்கு பெயர் வைத்து அவர்களையும் கவுரவிக்கலாம். உலகத்துக்கே ஒரு முன்மாதியாக விவசாயத்தீவிரவாதத்தை ஒழித்த மாதிரியும் இருக்கும்

விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்?

எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, ஏன் இன்னும் விவசாயத்தைப்பத்தி பேசறீங்க, அவங்கள விவசாயிகள்னு சொல்றதே தப்பு, விவசாயத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள்னு வேணும்னா சொல்லலாம்
ஆறுகளில் தண்ணீர் பற்றாக்குறையினால்தான் விவசாயத்தை நிறுத்தறோம், ஆனா அதே ஆறுகளில் பல்வேறு பிஸினஸ் உருவாக்கலாம், ஆத்துல படகு சவாரி விடலாம், ரிட்டையர் ஆன பெரிசுகள் மீன் பிடிக்க வாடகைக்கு விடலாம், தண்ணீர் வராதபோது ரிரை ரிவர் ஷோ அப்படின்னு சொல்லி டிக்கெட் போட்டு பொழுது போக்கு காண்பிக்கலாம், அந்தக்காலத்து விவசாயிகள் இப்படியெல்லாம் பயிர் பண்ணினாங்கன்னு ஒரு புரோட்டோடைப் ஷோ வெச்சு வெளி மாநில/நாட்டு மக்களை கவரலாமே? நான் பொருளாதார நிபுணன் அல்ல, அவர்கள் இன்னும் நிறைய யோசனைகள் தரக்கூடும்

சரிங்க இதில அந்த விவசாயத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டவர்கள்?

அவங்க இந்த கம்பெனிகள் உருவாக்கும் வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம், அதனை சார்ந்து நிறைய அல்லக்கை தொழில்கள் உருவாகும், இந்தந்தொழில்களுக்கு தேவையான மின்சாரத்தை கூட புதிய அணுமின்சாரம் மூலம் தயாரிக்கலாம்,அதிலும் வேலைக்கு சேரலாம். புதிய ஆற்றங்கரை நாகரிகம் உருவாகும், ஆற்றங்கரைல கக்கா போகிற விவசாயிய அதே ஆற்றங்கரைல வெஸ்டர்ன் டாய்லெட்ல கக்கா போக வைக்கலாம், ஆற்றங்கரைலை பேப்பர்ல துடைக்கும்போது கிடைக்கும் வசதியை உணரும்போது, விவசாயியா இருந்த காலத்தில் ஆற்றில் கழுவிய அந்தக்காலத்தை நினைத்து ஒரு பழைய பின்னவீன இலக்கியம் படைக்கலாம்,விவசாயம் பொய்க்குமா இல்லையான்னெல்லாம் கவலைப்படாம வேலையப்பாத்தமா காமிடியா எதையாவது படிச்சமான்னு ஹாயா இருக்கலாம்.

எனக்கு ஒன்னும் புரியலீங்க, இதெல்லாம் செஞ்சாலும் சோறு எப்படி கிடைக்கும்?

அது டப்பாவில வரும் வாங்கி சுடவெச்சி சாப்பிட்டுக்கலாம்.


8 comments:

bandhu said...

//அதை முலையிலேயே கிள்ளி எறியனும்//
எழுத்துப்பிழையை சரி பாருங்கள். கருத்துப்பிழை போலுள்ளது!

குடுகுடுப்பை said...

நன்றி பந்து மாற்றிவிட்டேன்.

Unknown said...

ஆனா அருமையான யோசனை..

உங்களை உடனடியாக உள்துறை அமைச்சராக நியமிக்கப் பரிந்துரைக்கிறேன்.

Unknown said...

வாட் எ ஐடியா சர்ஜி

பொன். வாசுதேவன் said...

:) நகைச்சுவையாக இருந்தாலும்.. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் யோசிக்க வேண்டிய விஷயம்தான். படிக்க சுவாரசியமாக இருந்தது.

Kumky said...

:)))

ஆளவந்தான் said...

//
ஆனா அதே ஆறுகளில் பல்வேறு பிஸினஸ் உருவாக்கலாம், ஆத்துல படகு சவாரி விடலாம், ரிட்டையர் ஆன பெரிசுகள் மீன் பிடிக்க வாடகைக்கு விடலாம், தண்ணீர் வராதபோது ரிரை ரிவர் ஷோ அப்படின்னு சொல்லி டிக்கெட் போட்டு பொழுது போக்கு காண்பிக்கலாம்//

அதுச‌​ரி ஆத்துல‌ த‌ண்ணி வ‌ந்தாதானே இதெல்லாம்?

ஆளவந்தான் said...

//ஆற்றில் கழுவிய அந்தக்காலத்தை நினைத்து ஒரு பழைய பின்னவீன இலக்கியம் படைக்கலாம்,//

எது ந‌ட‌க்குமோ இல்லியோ, இது ந‌ட‌க்கும் க‌ண்டிப்பா, பிற்கால‌த்தில் பீரு க‌வேநிதா'னு ஒரு எழுத்தாள‌ர் உருவாக‌லாம்