Tuesday, December 22, 2009

குஞ்சுகள் ...


குஞ்சுகள் ...

தின்ன தின்ன மிச்சங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத வயிறுப் பந்து
கோழிக்குஞ்சுகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகள் கனமின்றி காற்றில் உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
போன்று உரித்த கோழி
என்வீட்டு அறுவாமனையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
தின்று அலுத்துப் போய்
கக்கூஸ் தேடி அலைகையிலே
இன்னுமொரு குஞ்சு
என் வீட்டு அறுவாமனையில்
என் தொப்பை வளர்க்க!

11 comments:

வால்பையன் said...

நிஜமான கொலைவெறி கவிதை!

RAMYA said...

ஐயோ இது கொலையே பண்ணி இருக்கலாமே குடுகுடு :(

அருவாமனையா பயந்துட்டேன் :)

பிரபாகர் said...

அருவாமணை, ரத்தம் கொஞ்சம் மிரட்சியாய் தான் இருக்கிறது.

பிரபாகர்.

கலகலப்ரியா said...

:).. ம்ம்..

கலகலப்ரியா said...

குஞ்சுகள்... இதுக்கென்றே படைக்கப்பெற்றிருக்கின்றன போலும்..!

நசரேயன் said...

ஏன் இப்படி ?

நட்புடன் ஜமால் said...

என் தொப்பை வளர்க்க! ]]]

அட ...

Unknown said...

குஞ்சுகள் - குறும்புகள்..

தல நம்ம கலகலப்ரியா கவிதைகளையும் கொஞ்சம் எதிரிப்பாக்குறது...

குடுகுடுப்பை said...

முகிலன் said...
குஞ்சுகள் - குறும்புகள்..

தல நம்ம கலகலப்ரியா கவிதைகளையும் கொஞ்சம் எதிரிப்பாக்குறது.//

ரவுத்திரத்தை எங்கிட்ட பழகிட்டாங்கன்னா என்ன பண்றது?

குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் நன்றி.

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

முகிலன் said...
குஞ்சுகள் - குறும்புகள்..

தல நம்ம கலகலப்ரியா கவிதைகளையும் கொஞ்சம் எதிரிப்பாக்குறது.//

ரவுத்திரத்தை எங்கிட்ட பழகிட்டாங்கன்னா என்ன பண்றது?//

இப்போல்ல தெரியுது மாட்டரு... வராதவ வந்திருக்காக... எதிர்க் கவுஜ வேற... என்ன சமாச்சாரம்னு பார்த்தேன்... முகிலன்... இன்னும் வீட்டுப்பாடம் முடிக்கல.. இங்க கூட்டுச் சேர்த்தாறதா..? இருக்கட்டு இருக்கட்டு... இனி ஜக்கம்மாக்கும் சேர்த்து உடுக்கை அடிக்கறோம் =))