Monday, July 6, 2009

பின் பழமைத்துவ வர்ணனை.

பின் பழமைத்துவ வர்ணனை.

அந்த சுவர் அவள் முதுகைப்பார்த்துக்கொண்டிருந்தது, அழகாக இருந்தது அவளின் முதுகு மட்டுமல்ல எதிரில் நின்று அவளின் கூர்மையான கண்களை மட்டுமே பார்த்து பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தில், அவளின் முதுகைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்த இந்த சுவரின் மீதான கோபத்தை அவளிடம் காண்பிக்காமல் சுவரிடம் காண்பித்த கோப உணர்ச்சியும்தான். சுவர் நினைத்தது ஜன்னல்கள் உடைக்கப்பட்ட பின் கவனிக்க ஆள் இல்லாமால் நான் அலங்கோலமாக இருக்கிறேன், அங்கே ஜன்னல் நீக்கப்பட்ட பின்னர் இத்தனை அழகாய் இருக்கிறதே அதனால்தான் பால் வித்தியாசம் இல்லாமல் அது கவனிக்கப்படுகிறதோ.சுவரில்லாத சித்திரம் அழகாய் இருக்கிறதே , அந்த சித்திரம் ஏன் என் மேல் இருக்கக்கூடாது, சித்திரத்தோடு சுவர் அழகாய் இருக்குமே.சற்றே கீழே இறங்கி பார்த்தது சுவர், அருமையான அழகான வளைவுகள், இது போன்று வளைவுகள் வைத்து சுவரும் கட்டியிருந்தால் எப்படி இருக்கும், ஒருவேளை வளைவுகள் ஆபத்தை தரும் என்பது தெரிந்தே கட்டவில்லையோ.எதிரில் நின்று பெண்ணிடம் பேசிக்கொண்டே சுவரைப்பார்த்துக்கொண்டிருந்த ஆடவன், சுவரின் அடுத்தகட்ட வர்ணனையை நினைத்து அச்சம் கலந்த கோபத்தோடு அவனுக்கு பின்பக்கம் உள்ள சுவற்றின் மீது சாய்ந்தான். அவன் முதுகு ஈரமாகியது. அவன் காதுக்குள் அந்த சுவர் சொன்னது முட்டாளே நகர்ந்து நின்றிருக்கலாமே, அந்த சுவர் பெண்ணின் பின் பக்கத்தை வர்ணித்துவிட்டது, நான் முன்பக்கம் வர்ணிக்கவேண்டும் நீ உன் முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறாய். பெண்ணின் முன்பக்கம் ஆணின் முதுகு போன்று இருக்கும் என்று ஒரு வரியில் வர்ணித்திருக்கிறேன்,நான் இப்போ என்ன செய்வது.

பின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.

22 comments:

நசரேயன் said...

வரி வரியா ஒண்ணு கீழே ஒண்ணு போடுங்க, அது தான் "cutting edge" பின் பழமைத்துவம்

பழமைபேசி said...

கிளப்புறீங்க ஐயா.... நீங்களும் தளபதியும்...

வில்லன் said...

//பின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.//

எண்ண லாங் வீக்எண்டுல Long weekend) எதாவது தண்ணிய கிண்ணிய போட்டுட்டு எழுதுநீரா????? இத்தன மட்டமா இருக்கு OLD CASK RUM போல.

நட்புடன் ஜமால் said...

நல்ல இரசணை ;)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின் பழமைத்துவ வர்ணனை.//

????!!!

கோவி.கண்ணன் said...

இவரும் கிளம்பிட்டாரேன்னு நினைச்சேன். ஆனால் பயப்படும் படியோ பாதிப்போ ஏற்பட ஒண்ணும் இல்லை என்று அறிந்ததும் பெருமூச்சு வந்து சென்றது.
:)

குடுகுடுப்பை said...

வில்லன் said...

//பின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.//

எண்ண லாங் வீக்எண்டுல Long weekend) எதாவது தண்ணிய கிண்ணிய போட்டுட்டு எழுதுநீரா????? இத்தன மட்டமா இருக்கு OLD CASK RUM போல.//

வீக்கெண்ட்ல அதான் குடிச்சீரா?

வால்பையன் said...

//எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எத்தனை நாளா இந்த கொலை வெறி!

குடந்தை அன்புமணி said...

//எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.//

அவ்வவ்வே

சந்தனமுல்லை said...

//பின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.//


:-)))

தேவன் மாயம் said...

சாமி எங்களை உட்டுருங்க!!

Mahesh said...

அடங்கொன்னியா... இதுதான் "பின்" நவீனத்துவமா??

குடுகுடுப்பை said...

கோவி.கண்ணன் said...

இவரும் கிளம்பிட்டாரேன்னு நினைச்சேன். ஆனால் பயப்படும் படியோ பாதிப்போ ஏற்பட ஒண்ணும் இல்லை என்று அறிந்ததும் பெருமூச்சு வந்து சென்றது.
:)//

பாதிப்பு ஏற்படற அளவுக்கு எழுதிட்டா நானும் பிரபலமா ஆயிடுவேனே

குடுகுடுப்பை said...

நன்றி ஜமால்
நன்றி டிவீயார்
நன்றி வால்
நன்றி அன்புமணி
நன்றி சந்தனமுல்லை
நன்றி தேவன் மாயம்
நன்றி மகேஷ்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//பின்:) குறிப்பு //

என்ன ஒரு சிந்தனை -:)

RAMYA said...

ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லே
நீங்க எங்கேயோ போய்ட்டீங்க போங்க
குடுகுடுப்பையாருன்னா சும்மாவா
அதான் போட்டு தாக்கராறு :))

RAMYA said...

//பின்:) குறிப்பு : எதையாவது வெட்டியாக உளறினால் எப்படி இருக்கும் என்ற வீண்முயற்சின் விளைவு இந்த பதிவு.//

அது சரி :))

Dr.ராம் said...

என்ன ஒரு வில்லத்தனம்...

குடுகுடுப்பை said...

பித்தன் said...

//பின்:) குறிப்பு //

என்ன ஒரு சிந்தனை -:)
//

ஏன் என்னாச்சு

குடுகுடுப்பை said...

ராம் said...

என்ன ஒரு வில்லத்தனம்...//

நாம எப்பயுமே ஹீரோதான்.

♫சோம்பேறி♫ said...

ஒருவழியா படிச்சுட்டேங்க.. சோடா குடுக்க மாட்டீயளா?

குடுகுடுப்பை said...

சோம்பேறி♫ said...

ஒருவழியா படிச்சுட்டேங்க.. சோடா குடுக்க மாட்டீயளா?//

டொரினே ரெடி, தருமி சார் காசு தருவார்.